ஞாயிறு, 17 அக்டோபர், 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் குறுகிய காலத்திற்குள் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஞாயிறு லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் பதவியை வகித்து வரும் இரா.சம்பந்தனுக்கு பதிலாக இளம் தலைவர் ஒருவரை தெரிவுசெய்து குறித்து கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தலைவர் பதவிக்கு பல அரசியல்வாதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக அறிய கிடைத்துள்ளது.

1977ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துவரும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்வரும் காலங்களில் உடல்நிலை காரணமாக ஓய்வுபெறவுள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல