சனி, 1 ஜனவரி, 2011

சுற்றுலா பயணிகளுக்கு இணையத்தளம் மூலம் விசா

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வர விரும்புவோருக்கு இணையத்தளம் மூலம் விசா பெற்றுக்கொள்ள அனுமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

2011ஆம் ஆண்டு சுற்றுல்லா ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டுகளிலுள்ள தூதரகங்களுக்கு செல்லும் சிரமத்தை சுற்றுலா பயணிகளுக்கு இல்லாமல் செய்யவே இந்த ஏற்பாட்டை செய்யும் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இந்த இணையத்தளம் வருடத்தின் 365 நாட்களும் 24 மணித்தியாலங்களும் செயற்படும்.

இன்றை கலந்துரையாடலில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல