செவ்வாய், 18 ஜனவரி, 2011

ஈரானிய பெண்ணை கல்லால் அடித்து கொல்லும் தண்டனை ரத்து

ஈரானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் சகினே முகமது அஷ்தியானியை கல்லால் அடித்துக்கொல்லும்படி கோர்ட்டு தண்டனை விதித்தது. இதற்கு உலகநாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இதைத்தொடர்ந்து ஈரானின் நட்பு நாடான பிரேசில் அதிபர் டில்மா ரவுசப் பாராளுமன்ற மனித உரிமைக்குழு தலைவர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் சகினேவை விடுதலை செய்து பிரேசில் நாட்டுக்கு அனுப்புங்கள். அவருக்கு நாங்கள் அடைக்கலம் அளிக்கிறோம் என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்து மனித உரிமைக்குழு தலைவர் சோக்ரே இலாகியான் எழுதிய பதிலில் சகினேயை கல்லால் அடித்து கொல்லும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக அவரை தூக்கிலிட உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரை மன்னித்து விடுதலை செய்யும்படி அவரது குழந்தைகள் கேட்டுக்கொண்டு இருப்பதால் அந்த தண்டனையும் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல