திங்கள், 3 செப்டம்பர், 2012

77000 வருடங்களுக்கு முன்னைய படுக்கை கண்டுபிடிப்பு........

77000 வருடங்களுக்கு முன்னால் குகையில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய படுக்கையை ஆராய்ச்சியாளர்கள் தென்னாபிரிக்காவிலுள்ள ஜொஹன்னஸ்பேர்க் என்ற இடத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த படுக்கை மரக்கிளைகளினாலும், இலைகளினாலும் செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள சிறப்பியல்பு என்னவென்றால் குகை வாழ் மனிதர்கள் படுக்கையைச் செய்யப் பயன்படுத்திய கிளைகளும், இலைகளும் எல்லாவிதமான பூச்சிகளையும் நுளம்புகளையும் துரத்தக்கூடிய மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இன்றைக்கு மனிதன் நுளம்புத்தொல்லையிலிருந்து விடுபட்டு உறங்க எவ்வளவு பாடுபடுகின்றான். ஆனால் குகையில் வாழ்ந்த ஆதிவாசிகள் மருத்துவ குணம் கொண்ட கிளைகளையும், இலைகளையும் தனது படுக்கையாக்கி நிம்மதியாக உறங்கினான் என்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல