வெள்ளி, 30 நவம்பர், 2012

ஒபாமா அரசின் முக்கிய பதவியில் பார்வையற்ற இந்தியர் நியமனம்

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசின் முக்கிய பதவி ஒன்றில் பார்வையற்ற இந்தியர் ஒருவரை அமர்த்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியுள்ளார் பராக் ஒபாமா. தனது இரண்டாவது அரசின் முக்கிய பதவிகளில் திறமை வாய்ந்தவர்களை நியமிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான கட்டட வடிவமைப்பு மற்றும் போக்குவரத்து தடை சரிசெய்தல் போர்ட்டின் உறுப்பினராக பார்வையற்ற இந்தியரான சச்சின் தேவ் பவித்ரன் என்பவரை ஒபாமா நியமித்துள்ளார்.

இந்த நியமனங்கள் குறித்து ஒபாமா கூறுகையில், இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும் நபர்கள், தற்போதைய புதிய பதவிகள் மூலம் அமெரிக்க அரசின் அனுபவங்களுக்கும் திறமைக்கும் சொத்தாக விளங்குகின்றனர். இப்புதிய பதவிகளில் பணிபுரிய நியமிக்கப்பட்டவர்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். இனி வரும் காலங்களில் உங்களுடன் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் பணிபுரிய ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார்.

இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ள சச்சின் தேவ், உடா மாகாண பல்கலைக்கழகத்தில் உடல் ஊனமுற்றோருக்கான மையத்தின் பொறுப்பாளராக கடந்த 2011ம் ஆண்டு முதல் பணியில் உள்ளார். இப்பதவிக்கு வருமுன் உடல் ஊனமுற்றோர் தொடர்பான பல்வேறு பணிகளில் பணி செய்த அனுபவம் சச்சின் தேவுக்கு உண்டு.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல