வியாழன், 31 ஜனவரி, 2013

ரூ. 100 கோடி முதலீடு என்பது ரிஸ்க் என்று தெரி்ந்துதானே செய்தாரே கமல்?... ஜெ. கேள்வி

சென்னை: ஒரு படத்தில் ரூ.100 கோடியைப் போடுவது என்பது ரிஸ்க் என்று தெரிந்துதானே செய்தார் கமல்ஹாசன். பிறகு நான் எப்படி அவரது பிரச்சினைக்கு பொறுப்பேற்க முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில், கமல்ஹாசனுக்கு 60 வயதாகப் போகிறது. அதாவது தற்போது 58 வயதாகிறது. நல்ல முதிர்ச்சியுடன் கூடிய மனிதர் அவர். தனது விஸ்வரூபம் படத்திற்காக தெரிந்தே ரிஸ்க் எடுத்துள்ளார். மெகா பட்ஜெட்டி்ல படம் எடுத்தால் ரிஸ்க் என்பது தெரிந்தேதான் அதைச் செய்துள்ளார். சொத்துக்களை அவரேதான் அடமானம் வைத்துள்ளார். எல்லாவற்றையும் சுய நினைவுடன்தான் அவர் செய்துள்ளார். அப்படி இருக்கையில் அவரது பிரச்சினைகளுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும், பொறுப்பேற்க முடியும்.

எனக்கு திரைப்படங்களில் சுத்தமாக ஆர்வம் இல்லை. படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். கடந்த காலத்தில் என்னை சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் படம் தொடர்பாக அழைப்பார்கள்.அதை ஏற்று நானும் போயுள்ளேன். ஆனால் எனக்கு இப்போது சினிமாவில் சுத்தமாக ஆர்வமே இல்லை. அதைப் புரிந்து கொண்டுயாரும் என்னை அழைப்பதில்லை. அப்படி இருக்கையில் எனக்கு விஸ்வரூபம் படம் குறித்து எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் நான் ஆர்வம் காட்டவில்லை என்றார் ஜெயலலிதா.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல