திங்கள், 28 ஜனவரி, 2013

சே, நினைத்தாலே அறுவறுப்பாக இருக்கிறது......

DR.George Doodnaught

சே, நினைத்தாலே அறுவறுப்பாக இருக்கிறது.. கனடா பெண்ணின் ஆபரேஷன் அறை 'திகில்' அனுபவம்!

கனடாவைச் சேர்ந்த 41வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் செய்த பாலியல் சேஷ்டைகள் குறித்து கோர்ட்டில் விவரித்தபோது கடும் வேதனையுடன் அதைக் குறிப்பிட்டார். அவர் சொல்லச் சொல்ல கோர்ட் ஹாலே அதிர்ச்சியுடன் அதைக் கவனித்தது.

சர்ச்சையில் சிக்கியுள்ள டாக்டரின் பெயர் ஜார்ஜ் டூட்நாட். டோரண்டோவைச் சேர்ந்தவர். இவர் மீதுதான் இப்போது வழக்கு பாய்ந்துள்ளது. மொத்தம் 21 வழக்குகள். அதாவது 21 பெண்களை, இவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தது, சில்மிஷம் செய்தது, அவமரியாதை செய்தது என்று வழக்குப் போட்டுக் கைது செய்துள்ளனர்.

இவரால் பாதிக்கப்பட்ட 41 வயதுப் பெண் டோரண்டோ கோர்ட்டில் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் திகிலுடன் விவரித்தார். கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் இவருக்கு இந்தக் கொடுமை நடந்தது. அப்போது அவருக்கு ஹிஸ்டரெக்டமி அறுவைச் சிகிச்சை நடந்தது. வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர் விவரித்துள்ளார்.. அது இதோ...

எனக்கு மயக்க மருந்து கொடுத்திருந்தனர். ஆனாலும் எனக்கு நினைவு இருந்தது. என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை என்னால் உணரவும் முடிந்தது.

அப்போது டாக்டர் ஜார்ஜ், எனது கவுனுக்குள் கையை விட்டு எனது வலது மார்பகத்தை பிடித்து நிமிண்டினார். இதை உணர்ந்து நான் அதிர்ச்சி அடைந்து கண்களைத் திறந்து பார்த்தேன். அப்போது டாக்டரின் முகம் எனது முகத்திற்கு வெகு அருகே இருந்தது. அவர் என்னை முத்தமிட்டார். மேலும் அவரது நாக்கு எனது வாய் மீது இருந்தது.

என்னால் நகரக் கூட முடியவில்லை. மற்ற டாக்டர்கள் எங்கே என்று நான் கேட்டபோது, முன்னெச்சரிக்கையுடன் நடக்க எனக்குத் தெரியாதா என்ன என்று என்னிடம் கேட்டார் ஜார்ஜ்.

அடுத்து அவர் செய்த செயல்தான் மிகக் கொடுமையானது. எனது வாயில் தனது ஆணுறுப்பை எடுத்து அவர் வைத்தார். நான் மிகவும் கொடுமையாக உணர்ந்தேன். எனக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது என்று அவர் கூறியபோது அப்பெண் கடும் கோபத்துடன் காணப்பட்டார்.

64 வயதான டாக்டர் ஜார்ஜ் மீது 2006 முதல் 2010 வரை 25 முதல் 75 வயது வரையிலான பெண்களை பாலியல் ரீதியாக இப்படிச் சீரழித்ததாக புகார்கள் பதிவாகியுள்ளன. அவர் மீது 21 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.டாக்டர் ஜார்ஜ் 1981ம் ஆண்டு முதல் நார்த் யார்க் ஜெனரல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல