புதன், 22 மே, 2013

கேரளாவில் நடந்த சம்பவம்..

படம்: இணையத்திலிருந்து

இந்த செய்தி உண்மை இல்லாமலும் இருக்கலாம், ஒரு விழிப்புணர்வு பதிவு...

10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அதை சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.

அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.முழு உடல் பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அவனுக்கு எயிட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது.

அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால் யாருக்கும் எயிட்ஸ் இல்லை.பிறகு அந்த மாணவினடம் என்றில் இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என்று கேட்டார் டாக்டர்.

15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த மாணவன் டாக்டரிடம் சொன்னான்.

டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ வியாபாரியை அழைத்து வரச் சொன்னார்.அவரை பரிசோதித்து பார்க்கும்போது பழம் நறுக்கும் வியாபாரியின் கையில் வெட்டு காயம் இருப்பதை டாக்டர் பார்த்தார்.அவர் பழம் நறுக்கும் போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல் கலந்திருக்கிறது.

பழ வியாபரிக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார் டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது.இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ் இருப்பதே தெரியாது என்றார்.

ரோடுகளில் விற்கப்படும் பழங்கள் முழு பழமாக வாங்குங்கள்,நன்றாக கழுவி விட்டு சாப்பிடுங்கள்.

இந்த செய்தி உண்மையாக இருக்குமா அவர் கையில் இருந்து ரத்தம் பழத்தில் கலந்து அதை உண்டால் எயிட்ஸ் வருமா என்று ஆராய்ச்சி செய்யாமல் விழிப்புணர்வு பதிவாக எடுத்து கொள்ளுங்கள்.

கையுறை அணியாமல் பழம் வெட்டி தந்தால் வாங்காதீர்கள்.

இனி மேல் ரோடுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடும் அனைவரும் கவணமாக இருங்கள்.இந்த தகவலை அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நண்பர்களே...
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல