குடியிருப்பு கட்டடமொன்றின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த கணவரின் காற்சட்டையை பற்றிப் பிடித்து அவரை அவரது மனைவி காப்பாற்றிய சம்பவம் வட சீனாவில் இடம் பெற்றுள்ளது.
ஜிலின் மாகாணத்தில் சங்சுன் நகரிலுள்ள தனது மாடி வீட்டின் படுக்கையறையிலிருந்து குதித்த தனது கணவர் வாங் லீயை (45 வயது) கீழே விழுந்து விடாது தொடர்ந்து 20 நிமிடங்களாக ஒற்றைக் கையால் லிங் ஸு என்ற மேற்படி பெண் பிடித்துக் கொண்டிருந்ததுள்ளார்.
அவர் உதவி கோரி கூச்சலிட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த மீட்புப் பணியாளர்கள், வாங் லீயின் வீடு உட்புறமாக தாழிடப்பட்டிருந்ததால் வீட்டினுள் நுழைவதற்கு சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாகவே அப்பெண் தனது கணவரை கீழே விழாது பல நிமிட நேரமாக பிடித்துக் கொண்டிருக்க நேர்ந்துள்ளது.
தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே பிரவேசித்த மீட்புப் பணியாளர்கள் வாங் லீயை பாதுகாப்பாக மேலே தூக்கி காப்பாற்றியுள்ளனர்.
தனது தொழில் தொடர்பில் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியே வாங் லீ தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்தாக கூறப்படுகின்றது.

ஜிலின் மாகாணத்தில் சங்சுன் நகரிலுள்ள தனது மாடி வீட்டின் படுக்கையறையிலிருந்து குதித்த தனது கணவர் வாங் லீயை (45 வயது) கீழே விழுந்து விடாது தொடர்ந்து 20 நிமிடங்களாக ஒற்றைக் கையால் லிங் ஸு என்ற மேற்படி பெண் பிடித்துக் கொண்டிருந்ததுள்ளார்.
அவர் உதவி கோரி கூச்சலிட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த மீட்புப் பணியாளர்கள், வாங் லீயின் வீடு உட்புறமாக தாழிடப்பட்டிருந்ததால் வீட்டினுள் நுழைவதற்கு சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாகவே அப்பெண் தனது கணவரை கீழே விழாது பல நிமிட நேரமாக பிடித்துக் கொண்டிருக்க நேர்ந்துள்ளது.
தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே பிரவேசித்த மீட்புப் பணியாளர்கள் வாங் லீயை பாதுகாப்பாக மேலே தூக்கி காப்பாற்றியுள்ளனர்.
தனது தொழில் தொடர்பில் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியே வாங் லீ தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்தாக கூறப்படுகின்றது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக