செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

சருமம் வரட்சி அடைவதற்கான சில காரணங்கள்!

சில­ரது சருமம் வறட்­சி­ய­டைந்து, மென்­மைத்­தன்மை நீங்கி, சொர­சொ­ரப்­பாக, சுருக்­கங்­க­ளுடன், செதில் செதி­லாக காணப்­ப­டு­வதைப் பார்த்­தி­ருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்­கா­லத்தில் மிகவும் மோச­மாக இருக்கும். கைக­ளையும், கால்­க­ளையும் மற்­ற­வர்­க­ளுக்குக் காட்­டவே வெட்­க­மாக இருக்கும். இத்­த­கைய வறட்­சியைப் போக்­கு­வ­தற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்­லது ஒலிவ் எண்ணெய் அல்­லது கோல்ட் க்ரீம்­களைப் பூசிக்­கொள்வோம்.

ஆயினும், சருமம் வறட்­சி­ய­டைந்து காணப்­ப­டுதல் என்­பது ஒரு நோயல்ல. இது ஒரு­சில புறக் கார­ணி­களால் ஏற்­ப­டு­வ­தாகும்.

இருப்­பினும் சில­ருக்கு சில நோயின் கார­ணங்­க­ளி­னாலும், பரம்­பரைக் கார­ணி­க­ளாலும் சரும வறட்சி ஏற்­ப­டு­கி­றது.

இத்­த­கைய வறட்­சி­ய­டைந்த சரு­ம த்தை உட­னுக்­குடன் சரி­செய்து கொள்ள வேண்டும். இல்­லை­யென் றால், பல பக்­றி­ரி­யாக்கள் வறண்ட சரு­மத்தின் வழியே ஊடு­ருவி சரும அழற்­சியை ஏற்­ப­டுத்­தி­விடும்.

இத்­த­கைய வறண்ட சரு­மத்­திட்­டுக்கள், உடலில் எந்த இடங்­களில் வேண்­டு­மா­னாலும் ஏற்­ப­டலாம். பொது­வாக இந்த வறட்­சி­க­ளா­னது கைகள் மற்றும் கால்­களில் அதிகம் காணப்­படும்.

சில­ருக்கு முகத்தில் வாய், கன்னம் மற்றும் கண்­க­ளுக்கு அடியில் இந்தத் திட்­டுக்கள் காணப்­படும். ஆனால் பல­ருக்கு இந்த வறட்சி எதனால் ஏற்­ப­டு­கி­றது என்­பது தெரி­யாது. அதைப் படித்து தெரிந்து கொள்­ளுங்கள்.

வெந்நீர்

அதி­க­நேரம் வெந்­நீரில் சரு­மத்தை நனைப்­ப­தாலும், சருமம் வறட்­சி­ய­டைந்து விடு­கி­றது. பொது­வாக சரு­மத்தில் இயற்­கை­யாக உள்ள எண்ணெய்ப் பசை­யா­னது, சரு­மத்தை நன்கு பாது­காத்து இறுக்­க­மாக இருக்க உதவும். ஆனால் வெந்­நீரில் நீண்ட நேரம் இருப்­பதால், அது சரு­மத்­தி­லுள்ள எண்ணெய்ப் பசையை முற்­றிலும் வெளி­யேற்றி உலரச் செய்­து­வி­டு­கி­றது

தண்ணீர் பற்­றாக்­குறை

தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்­காமல் இருப்­பதும், வறண்ட சரு­மத்­திற்குக் கார­ண­மாகும். இது சரு­மத்தில் நீர்ச்­சத்தைக் குறைத்­து­வி­டு­கி­றது.

சோப்­புக்கள்

பல­வ­கை­யான சோப்­புக்­களைப் பயன்­ப­டுத்­து­தலும், சரும வறட்­சிக்குக் கார­ண­மாகும். வெந்­நீரைப் போலவே, இதுவும் சரு­மத்தைப் பாது­காக்கும் எண்ணெய்ப் பசையை நீக்­கி­வி­டு­கி­றது. கைகளை அடிக்­கடி சோப்புப் போட்டுக் கழு­வு­வ­தாலும், சருமம் மிகவும் வறண்டு போகும்.

சில நேரங்­களில் சோப்­புக்கள் சரும வெடிப்­பு­க­ளையும், இரத்­தக்­க­சி­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­விடும்.

இதனால் சரு­மத்­தொற்றும் ஏற்­ப­டலாம். ஆகவே கார­மில்­லாத மித­மான சோப்பு வகைகள் அல்­லது மூலி­கைகள் கலந்த சோப்­புகள்/ ஹாண்ட் வோஷ் மற்றும் கிளீன்­ஸர்­க­ளையும் பயன்­ப­டுத்­து­வது நல்­லது. மிக அதி­க­மாக சரு­மத்தை ஸ்க்ரப் செய்­வ­தாலும், சருமம் வறண்­டு­விடும். சரு­மத்தை இவை அதிகம் உராய்­வதால், எண்ணெய்ப் பசை நீங்கி சருமம் வறண்டு விடு­கி­றது. எனவே ஸ்கரப் செய்யும் போது கைக­ளையோ அல்­லது மெல்­லிய ஸ்கரப்­பர்­க­ளையோ பயன்­ப­டுத்த வேண்டும்

மருந்­துகள்

சில மருந்­து­களின் பக்க விளை­வா­கவும், வறண்ட சருமம் ஏற்­ப­டு­கி­றது. அதிக இரத்த அழுத்த நோய்க்கு பயன்­படும் டையூ­ரடிக்ஸ் மருந்­து­க­ளாலும், பரு­விற்கு பயன்­ப­டுத்தும் மருந்­து­க­ளி­னாலும் வறண்ட சருமம் ஏற்­படும்

நோய்கள்

எக்­ஸிமா, சொரி­யாஸிஸ், நீரி­ழிவு போன்ற நோய்­களும், வறண்ட சரு­மத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

ஏனெனில் இவை­களால் இரத்­தத்­தி­லுள்ள குளுக்­கோஸின் அளவு அடிக்­கடி மாறு­ப­டு­வ­தினால், சருமம் வறட்சி அடை­கி­றது. மேலும் தைரொய்ட் சார்ந்த மருந்துகளாலும், சரும த்திலுள்ள எண்ணெய்ப் பசை நீங்கி வறண்ட சருமம் ஏற்படுகிறது. "

அதுமட்டுமின்றி சத்தான மற்றும் சரிவிகித உணவு வகைகளை சாப்பிடாமல் இருப்பதும், சரும வறட்சிக்குக் காரணமாகும். அதுவும் வயதான பெண்களுக்கு, ஹார்மோன்களின் மாறுபாடுகளால் வறண்ட சருமம் ஏற்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல