பாரிசவாத பாதிப்புக்குள்ளான நபரொருவரின் பிறப்புறுப்பை நாயொன்று கடித்து உண்ட விபரீத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அர்கன்ஸாஸ் மாநிலத்தில் துருமான் நகரில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட மேற்படி 29 வயது நபருக்கு இடுப்புக் கீழான பகுதியில் உணர்வு எதுவும் இல்லாதிருந்துள்ளது.
சம்பவ தினம் அவர் நிர்வாண நிலையில் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் தனது பிறப்புறுப்பு பகுதியில் இலேசான வலியை உணர்ந்து விழித்த அந்நபர், தனது கால்களுக்கிடையில் அமர்ந்து நாயொன்று தனது பிறப்புறுப்பை கடித்துக் குதறி உண்டு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் சென் பெர்னார்ட் பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைக் கடித்தது தெரு நாய் ஆகும். அதனால் அந்நாய்க்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பொலிஸார் அதனை அர்கன்ஸாஸ் சுகாதாரத் திணைக் களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

அர்கன்ஸாஸ் மாநிலத்தில் துருமான் நகரில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட மேற்படி 29 வயது நபருக்கு இடுப்புக் கீழான பகுதியில் உணர்வு எதுவும் இல்லாதிருந்துள்ளது.
சம்பவ தினம் அவர் நிர்வாண நிலையில் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் தனது பிறப்புறுப்பு பகுதியில் இலேசான வலியை உணர்ந்து விழித்த அந்நபர், தனது கால்களுக்கிடையில் அமர்ந்து நாயொன்று தனது பிறப்புறுப்பை கடித்துக் குதறி உண்டு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் சென் பெர்னார்ட் பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைக் கடித்தது தெரு நாய் ஆகும். அதனால் அந்நாய்க்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பொலிஸார் அதனை அர்கன்ஸாஸ் சுகாதாரத் திணைக் களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக