செவ்வாய், 24 செப்டம்பர், 2013

காதலியை கவர அளவுக்கதிகமாக வயாகராவை உட்கொண்ட நபர்

தனது காத­லியை கவர்­வ­தற்­காக பாலியல் ஊக்க மாத்­தி­ரை­யான வயா­க­ராவை அள­வுக்­க­தி­க­மாக உட்­கொண்ட நப­ரொ­ருவர் இறு­தியில் தனது பிறப்­பு­றுப்பை வெட்டி அகற்ற நேர்ந்த விப­ரீத சம்­பவம் கொலம்­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜிஹன்ட் நகரைச் சேர்ந்த முன்னாள் அர­சி­யல்­வா­தி­யான மேற்­படி 66 வயது நபரின் பெயர் சட்­டக்­கா­ர­ணங்­க­ளுக்­காக வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

அந்­நபர் தனது புதிய காத­லியை கவரும் முக­மாக பாலியல் ஊக்­க­ மாத்­தி­ரை­யான வயா­க­ராவை அள­வுக்­க­தி­மாக உட்­கொண்­டதால் ஏற்­பட்ட அதீத பாலியல் ஊக்க விளைவால் அவ­ரது பிறப்­பு­றுப்பில் வீக்­கமும் அந்த உறுப்­பி­லான குருதிக் குழாய்­க­ளிலும் அடைப்பும் ஏற்­பட்டு பிறப்­பு­றுப்பு அழுக ஆரம்­பித்­துள்­ளது.

இந்­நி­லையில் அவரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அவ­ரது பிறப்­பு­றுப்பை வெட்டி அகற்­றா­விட்டால் அந்த பாதிப்பு உடலின் ஏனைய பகு­தி­க­ளுக்கும் பரவி அவ­ரது உயி­ருக்கு ஆபத்தை விளை­விக்கும் என எச்­ச­ரித்­துள்­ளனர். தொடர்ந்து அந்­ந­ப­ரது பிறப்­பு­றுப்பு அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெட்டி அகற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் தற்­போது தேறி­வ­ரு­கிறார்.

அதே­ச­மயம் யேம­னியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், திரு­மண நாளில் ஒரே சம­யத்தில் 5 வய­க­ரா­ மாத்­தி­ரை­களை உள்­ளெ­டுத்­ததால் திரு­மணம் நடைபெற்று சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் வயாகரா மத்திரைகளை உபயோகித்த பல ஆண்கள் மாரடைப்புக்கு ள்ளாகியுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.

வயா­கரா உள்­ள­டங்­க­லான பாலியல் ஊக்­க­ மாத்­தி­ரை­களை மருத்­து­வர்­களின் ஆலோ­ச­னை­யின்றி உப­யோ­கிக்­க­ வேண்டாம் என மருத்­து­வர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல