திங்கள், 23 செப்டம்பர், 2013

சிறுமியின் பிருஷ்ட பகுதியை ஊடுருவிய துப்பாக்கி ரவை

தெருவில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூடொன்றின் போது பாய்ந்து வந்த துப்­பாக்கி ரவை பிருஷ்ட பகு­தியை துளைத்துச் சென்­றதால் குருதி பெருக்­கெ­டுத்­தோட வந்த தமது 10 வயது மகளை, பூப்பெய்தி விட்­ட­தாக நினைத்துப் பல நேர­மாக சிகிச்சை எதற்கும் உட்­ப­டுத்­தாது பெற்றோர் இருந்த சம்­பவம் அமெ­ரிக்க கலி­போர்­னியா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் ஞாயிற்­றுக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

அந்த சிறுமி ஹேவார்ட் நக­ரி­லுள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்­டி­ருந்த வேளை தெருவில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டின் போது திசை மாறி வந்த துப்­பாக்கி ரவை சிறு­மியின் பிருஷ்ட பகு­தியை ஊடு­ரு­வி­யுள்­ளது.

துப்­பாக்கி ரவை தனது உடலில் பாய்ந்­துள்­ளதை அறி­யாத சிறுமி குரு­தியால் நனைந்த ஆடை­யுடன் பெற்­றோ­ரிடம் வந்­துள்ளார்.

இந்­நி­லையில் தமது மகள் பூப்­பெய்தி விட்­ட­தாக கரு­திய சிறு­மியின் பெற்றோர், 5 மணித்­தி­யா­ல­மாக அவரை சிகிச்சை எதற்கும் உட்­ப­டுத்­தாமல் இருந்­துள்­ளனர்.

இதனையடுத்து சிறுமி கடு­மை­யான வலியால் துன்­பு­று­வதை அவ­தா­னித்து சந்­தேகம் கொண்ட தாய், மகளின் உடலை பரிசோசித்த போதே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல