செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு பாலியல் சேவை வழங்கச் சென்ற தியூனிஸிய பெண்கள்

சிரி­யாவில் உள்­நாட்டு யுத்­தத்தில் ஈடு­பட்­டுள்ள கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு தம்மை பாலியல் ரீதியில் அர்ப்­ப­ணிக்கும் வகையில் அந்­நாட்­டிற்கு சென்ற தியூ­னிஸிய பெண்கள் பலர், கர்ப்­ப­ம­டைந்த நிலையில் தாய்நாடு திரும்­பி­யுள்­ள­தாக தியூ­னி­ஸிய உள்­துறை அமைச்சர் லொட்பி பென் ஜெட்­டோயு அதிர்ச்சித் தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.

ஒரு­வ­ருக்கு 100 கிளர்ச்­சி­யா­ளர்கள் என்ற வீதத்தில் பாலியல் சேவை வழங்கச் சென்ற அந்தப் பெண்கள், அங்கு முன்­ன­ரங்­கு­களில் பணி­யாற்றும் 2,030,100 கிளர்ச்சிப் படைவீரர்­க­ளுடன் பாலியல் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொண்ட பின் கர்ப்­ப­ம­டைந்த நிலையில் நாடு திரும்­பி­யுள்­ள­தாக அவர் கூறினார்.

அவர் அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் உரை­யாற்­று­கை­யி­லேயே இந்தத் தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.

ஆனால் சிரி­யா­வுக்கு சென்ற எத்­தனை பெண்கள் கர்ப்­ப­மான நிலையில் நாடு திரும்­பி­னார்கள் என்ற தக­வலை அவர் வெளி­யி­ட­வில்லை.

பாலியல் ரீதி­யான புனித யுத்தம் என்ற பெயரில் அந்தப் பெண்கள் தம்மை கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு அர்ப்­ப­ணித்­துள்­ள­தாக குறிப்­பிட்ட ஜெட்­டோயு, அதனால் சிரியாவுக்கு தியூனிஸியாவிலிருந்து இளம் பெண்கள் செல்­வதைத் தடுக்கும் வகையில் தியூ­னி­ஸி­யாவின் எல்லைப் புற பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

இந்­நி­லையில் தனது மனை­வியை விவா­க­ரத்து செய்த தியூ­னி­ஸிய நபர் ஒருவர், தனது மனை­வி­யுடன் சிரி­யா­வுக்கு பய­ணத்தை மேற்­கொண்டு அவரை சிரிய கிளர்ச்­சி­யா­ளர்­களை பாலியல் ரீதியில் திருப்தி செய்வதற்கு அனுமதித்துள்ளதாக தியூனிஸிய பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல