பிரித்தானியாவிலுள்ள தேவாலயமொன்றில் ஜோடியொன்று திருமண பந்தத்தில் இணையத் தயாரான வேளையில், அந்த தேவாலயத்துக்கு வந்த நபரொருவர் தனது பிறப்புறுப்பை கத்திரிக்கோலால் வெட்டித் துண்டித்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
எஸெக்ஸிலுள்ள ஹட்டன் நகரிலுள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் திருமணமொன்று நடைபெற தயாராகியிருந்த வேளையில் மேற்படி நபர் தேவாலயத்திற்கு வெளியே தனது பிறப்புறுப்பை வெட்டி வீசி விட்டு தேவாலயத்திற்குள் பிரவேசிக்க முயன்றுள்ளார். எனினும் அந்த நபரை தேவாலயத்தினுள் நுழையவிடாது திருமண விருந்தினர்கள் தடுத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அந்நபரை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.
அந்நபர் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் காரணமாக அந்த தேவால யத்திதல் நடைபெற ஏற்பாடாகியிருந்த திருமணம் தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.

எஸெக்ஸிலுள்ள ஹட்டன் நகரிலுள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் திருமணமொன்று நடைபெற தயாராகியிருந்த வேளையில் மேற்படி நபர் தேவாலயத்திற்கு வெளியே தனது பிறப்புறுப்பை வெட்டி வீசி விட்டு தேவாலயத்திற்குள் பிரவேசிக்க முயன்றுள்ளார். எனினும் அந்த நபரை தேவாலயத்தினுள் நுழையவிடாது திருமண விருந்தினர்கள் தடுத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அந்நபரை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.
அந்நபர் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் காரணமாக அந்த தேவால யத்திதல் நடைபெற ஏற்பாடாகியிருந்த திருமணம் தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக