வியாழன், 19 செப்டம்பர், 2013

உண்மைய சொன்னேன்

1.அழகான பொண்ணு சிரிச்சிட்டு போன அடுத்த ரெண்டு செகன்ட்குள்ள பையன் கட்டுற மனக்கோட்டை இருக்கே! ராஜராஜசோழனால கூட கட்ட முடியாது!

2. Facebook பெண்கள் அழகாய் இருகிறார்களோ இல்லையோ அவர்கள் வைக்கும் profile picture அழகாக இருக்கிறது !!

3.மரண வலியை உணர்ந்தேன்..மாசக்கடைசியில
எவனாவது சரக்கடிச்சுட்டு சலம்பிகிட்டு திரியுறதை
பார்க்கும்போது..

4.மச்சி.. நமக்கு ஆயிரம் பிகர் மடியும் என அட்வைஸ் செய்யும் ஒருவனுக்கு கூட ஒரு பிகர் கூட மடிந்திருக்காது..

5.நாளை முதல் குடிக்க கூடாது என முடிவெடுத்து விட்டீர்கள் என்றால் , இன்றைக்கு வழக்கத்தை விட எக்ஸ்ட்ரா ஒரு குவாட்டர் அடிக்க ப்ளான் பண்ணி விட்டீர்கள் என்று அர்த்தம்

6."எக்ஸ்க்யூஸ் மீ" என்ற வார்த்தை "நகருடா சனியனே" என்ற டோன்லேயே பலப் பெண்களால் சொல்லப்படுகிறது

7.தேன் நிலவுக்கு போனதிலிருந்தே வாழ்க்கையின் அமாவாசை தொடங்கிவிடுகிறது

8.தான் எவ்வளவு துயரத்தில் இருத்த போதிலும் மதுப்பழக்கம் இல்லாத தன் நண்பனை பாருக்குக் கூப்பிடாதவனே உண்மையான நண்பன்..

9.பனை மரம் போல உயரமாக வளரவேண்டுமென்று விரும்பினால் பனங்கொட்டையாகப் பிறந்திருக்க வேண்டும்! காம்ப்ளான் குடித்துப் பயனில்லை

10.வாடையே வராத சிகரெட்டும் சரக்கும் இருந்திருந்தால் ஆண்கள் இன்னும் அதிக சந்தோஷமாய் இருந்திருப்பார்கள்.

----------------------------------------------------------------------

1.காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்...


2.சாப்பிடுகையில் கடைசியாய் ஒன்று என்றதும் இருப்பதில் பெரிய தோசையை தேடுபவள் -அம்மா.


3.இந்தியாவில் வரிசைகள் மிக நீளமாக இருப்பதற்கு தொப்பையும் ஒரு காரணம் ..


4.Facebook-ல நல்லவனா நடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ , கடனோ கொடுக்கப் போவதில்லை ...


5.சென்னை மாவட்ட எல்லை ஆரம்பம் என்ற எழுதியுள்ள தட்டிகளுக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் என எழுதி வைக்கலாம்...


6.காதல் தோல்வியை கொண்டாடவும் ஒருநாள் இருந்தால் மொத்த உலகமும் அதை கொண்டாடித் தீர்க்கும் நாளாக அது இருக்கும்....


7.தான் அழகாக இல்லை என்று நினைக்கும் ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே

8.என் பட்டினியை தவிர, எந்த தவறையும், மன்னித்துவிடுகிறாள் என் தாய்.


9.கண்ணுக்கு தெரியாத கடவுளை வேண்டிக்கொண்டு, அம்மா விபூதி வைத்துவிடும் போது, அருகிலேயே தெரிகிறது கடவுள்...


10.எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை ..


@ களவாணி பய


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல