வியாழன், 19 செப்டம்பர், 2013

காதோடு காதாக...

தனக்குப் படாமல் கல்லெறியச் சொன்ன பெண் வேட்பாளர்


தமது வாகனத்திற்கு தாமே அடி ஆட்களை வைத்துக் கல்லெறிந்து சேதப்படுத்திவிட்டு பிரசாரம் தேடும் செயல்களை இப்போது வடக்கில் பரவலாகக் காண முடிகிறது.

இந்த லிஸ்டில் (புலி)அம்மணி ஒருவரும் சேர்ந்துள்ளார்.

ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிப்பதுதான் இவர்களது திட்டமாம்.

ஒன்று அனுதாப வாக்கு,

இரண்டு பணம் செலுத்தாது பத்திரிகைகளில் இலவச பிரசாரம்,

மூன்று அரசாங்கத்தின் மீது வீண் பழி.

ஆனால் ஒன்று, கல்லெறிய வரும் அடியாட்களிடம் தனக்குப் படாமல் எறியுங்கோ என்று காதில் போட்டு வைத்துவிடுவார்களாம்.

வாகனத்திற்குத்தான் எவ்வளவு சேதமானாலும் காப்புறுதிப் பணம் கிடைக்குமே. பலே கில்லாடிகள்தான்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல