வெள்ளி, 22 நவம்பர், 2013

உலகின் பருமனான பெண் 600 இறாத்தல் நிறை குறைப்பு (படங்கள் இணைப்பு)

தனது நிறை காரணமாக பெறாமகன் மூச்சுத்திணறி இறந்த விபரீத சம்பவத்தையடுத்து நடவடிக்கை


தனது சின்­னஞ்­சிறு பெறா மகன் மீது உருண்டு விழுந்து அவன் மூச்­சுத்­தி­ணறி உயி­ரி­ழக்கக் கார­ண­மா­யி­ருந்த உலகின் அதி­நிறை கூடிய பெண் தனது 1000 இறாத்தல் நிறையை 5 வரு­டங்­களில் 600 இறாத்­தலால் குறைத்­துள்ளார்.

அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த மேரா ரொஸலெஸ் (32 வயது) என்ற மேற்­படி பெண், தனது 2 வயது பெறா மகனான எலி­ஸியோ மீது உருண்டு விழுந்து அவனைக் கொன்­ற­தாக குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­கி­யி­ருந்தார்.

அவரின் சகோ­த­ரி­யான ஜமி உணவை உண்ண மறுத்த தனது மக­னான எலி­ஸி­யோவை திரும்ப திரும்ப தூரி­கை­யொன்றால் மோச­மாக அடித்­துள்ளார்.

இதன்­போது தனது சகோ­தரி பால­கனை அடிப்­பதைத் தடுக்க முயன்ற மேரா, தவ­று­த­லாக பாலகன் மீது உருண்டு விழுந்­துள்ளார்.

இந்­நி­லையில் பாலகன் மூச்சுத் திணறி உயி­ரி­ழந்தான். ஆரம்­பத்தில் மேரா திட்­ட­மிட்டு படு­கொலை செய்­த­தாக கரு­தப்­பட்­டது.

எனினும், 2008 ஆம் ஆண்டு மேரா படு­கொலை செய்­ய­வில்லை எனவும் சிறு­வனின் மர­ணத்­துக்கு அவ­ரது அளவு கடந்த நிறையே காரணம் எனவும், அதனால் மேரா குற்­ற­வா­ளி­யல்ல எனவும் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

ஆனால், அவ­ரது சகோ­தரி ஜமி சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்டில் 15 வருட சிறைத் தண்­டனை விதிப்­புக்­குள்­ளானார்.

இந்­நி­லையில், தனது பெறா மகனின் மர­ணத்­துக்கு கார­ண­மான தனது நிறையை குறைக்க தீவி­ர­மாகப் போரா­டிய மேரா, தனது நிறையை 600 இறாத்­தலால் குறைத்­துள்ளார். தற்­போது அவ­ரது நிறை 400 இறாத்­த­லாகும்.




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல