வெள்ளி, 22 நவம்பர், 2013

இலங்கைத்தீவில் ஒரு சம்­பி­ர­தாய நாடகம்

'`தமில் சிங்­கல முச்லிம் தென்­சு­ரவ செயிய வெண்டாம்.’ 'புலிக் கொசில் வ்ந்து போகும் மெக்­கரோ, நீ சிறி­லங்­காவைத் தூண்­டா­டாதோ''.

இவ்­வாறு, பொது­ந­ல­வாய மாநாட்­டுக்­காக இலங்­கைக்கு வந்த `சனல் 4' ஊடகக்குழு­வினர் சென்ற இடங்­களில் எல்லாம் தமிழைத் தப்பும் தவ­று­மாக எழு­திய அட்­டை­களைப் பிடித்­துதான் சிங்­க­ள­வர்கள் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­னார்கள்.

இரா­ணு­வத்­தைக் ­கொண்டு தமி­ழர்­களை அழித்த அரசு, இப்­போது தமிழைக் கொலை செய்­கி­றது!

பலத்த எதிர்ப்­பு­க்க­ளுக்கு மத்­தி­யிலும் மற்­றொரு சம்­பி­ர­தாய நிகழ்­வாக, இலங்­கையில் அரங்­கேறி முடிந்­தி­ருக்­கி­றது பொது­ந­ல­வாய மாநாடு. 'திட்­ட­மிட்­ட­படி மாநாடு நடக்­குமா... இந்­தியா, அதில் பங்­கேற்­குமா?’ என்ற சர்ச்­சை­களும் விவா­தங்­களும் நீடித்த நிலையில், இரு தரப்­பி­னர்தான் மாநாட்டில் கவனம் ஈர்த்­தனர்.

பிரிட்டன் பிர­தமர் டேவிட் கமரூன் குழு­வினர் ஒரு தரப்பு. `சனல் 4' குழு­வினர் மற்­றொரு தரப்பு. இலங்கை அர­சாங்கம் குறி­வைத்­ததும் இந்த இரு தரப்­பைத்தான்.

ஆவ­ணப்­பட இயக்­குநர் கெலும் மக்ரே செல்லும் இடங்­களில் எல்லாம் சில குழுக்கள், தப்புத்தப்­பாக தமிழில் எழு­திய அட்­டை­களை ஏந்திநின்று, அவரை கொழும்­புக்குத் துரத்­து­வ­தி­லேயே குறி­யாக இருந்­தன.

ஒரு­கட்­டத்தில் ஆத்­தி­ர­ம­டைந்த மக்ரே, ``எங்கு வேண்­டு­மா­னாலும் சென்று செய்தி சேக­ரிக்­கலாம் என்­று­தானே விசா கொடுத்­தார்கள். ஆனால், அவர்கள் எங்­களை நக­ரவே விட­வில்லை. இது என் இர­க­சியப் பயணம். ஆனால், என் வரு­கையை வெளிச்­ச­மிட்டுக் காட்டி, என் ஊடகப் பணியை முடக்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம். கருத்துச்சுதந்­தி­ரமும் ஜன­நா­ய­கமும் பொது­ந­ல­வாய அடிப்­படைக் கோட்­பா­டுகள். ஆனால், அதற்குத் தலை­வ­ராக இருப்­பவர் அதனை காற்றில் பறக்க விடு­கிறார்'' என்று கொந்­த­ளித்தார்.

இவ­ருக்கு ஆக்­ரோஷ எதிர்ப்­பென்றால், பிரித்­தா­னிய பிர­தமர் கம­ரூனைச் சுற்றி விசு­வாசத் துதி­பா­டி­களைக் குவித்­தி­ருந்­தது இலங்கை அர­சாங்கம். ஆனால், கம­ரூனின் யாழ்ப்­பாண நூலக வரு­கையின் போது, அர­சாங்கக் கட்­டுப்­பா­டு­களை மீறி ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்கள் திரண்டு விட்­டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனும், வட மாகாண முதல்வர் விக்கி­னேஸ்­வ­ரனும் வழக்­க­மான வேட்­டி-­சட்­டையைத் துறந்து பளிச் கோட்-­சூட்டில் கம­ரூ­னோடு நின்­ற­படி புகைப்­ப­டங்­களை எடுத்­துக்­கொண்­டார்கள். சொன்னால் நம்­பு­வீர்­களா..? மிக சமீ­பத்தில் தாங்­களே வாக்­க­ளித்துத் தெரிவுசெய்த விக்கி­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக அப்­போது கோஷங்­களை எழுப்­பி­னார்கள் இலங்கைத் தமி­ழர்கள்!

வெளி­நாட்டுப் பிர­தமர் ஒருவர், போரால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு முதன்­மு­றை­யாக வரு­கிறார் என்­பதால், வலி­காமம், நல்லூர் போன்று சில இடங்­களில் கம­ரூனின் கவ­னத்தை ஈர்க்கும் வித­மாக மக்கள் போராட்­டங்­களை நடத்­தி­னார்கள்.

வவு­னி­யாவில் இருந்து கமரூன் குழு­வி­ன­ரிடம் மனு அளிக்கவந்­தி­ருந்த சாந்­தி­னி­யிடம் பேசினேன். ``யுத்தம் முடிந்த இந்த நான்கு ஆண்­டு­களில், இது­வரை ஏகப்­பட்ட மனுக்­களை பல்­வேறு மனித உரிமை அமைப்­பு­க்க­ளிடம் கொடுத்­தி­ருப்போம்.

நவி பிள்­ளை­யிடம் கொடுத்தோம், `சனல் 4' குழு­வி­ன­ரிடம் கொடுத்தோம். அவர்கள், மனுக்­களைப் பெற்­றுக்­கொண்டு எங்­களின் துய­ரங்­களைக் காது கொடுத்­தேனும் கேட்­பார்கள்.

தவி­ரவும், இந்­தியா ஒவ்­வொரு முறையும் எங்­களை ஏமாற்­று­கி­றது. கைதுசெய்­யப்­பட்டு சிறையில் இருக்கும் எங்கள் உற­வு­களை விடு­விக்க, மேற்­கத்­தைய நாடு­கள்­கூட அழுத்தம் கொடுக்­கின்­றன. ஆனால், இந்­தியா அதைத் தடுக்­கி­றது என்று எங்கள் மக்கள் குமு­று­கி­றார்கள்...'' என உணர்ச்சி மேலிடப் பேசினார்.

வடக்குப் பகு­தியில் மக்­க­ளோடும் தலை­வர்­க­ளோடும் நேரத்தைச் செல­விட்ட கமரூன், தென் இலங்­கையில் சுழற்­பந்து வீச்­சாளர் முத்­தையா முர­ளி­த­ரனின் கிரிக்கெட் அறக்­கட்­ட­ளையில் கிரிக்கெட் விளை­யா­டினார். இதன்­போது, 'பிரிட்டன் பிர­த­மரை சிலர் தவ­றாக வழி­ந­டத்­து­வ­தா­கவும், வடக்கில் வசந்தம் வந்­து­விட்­ட­தா­கவும் கம­ரூ­னிடம் தெரி­வித்தார் முர­ளி­தரன்’ என்­கி­றார்கள் விபரம் அறிந்­த­வர்கள்.

‘உதயன்’ நாளிதழ் உரி­மை­யா­ளரும் கூட்­ட­மைப்பு எம்.பி.யுமான சர­வ­ண­பவன் நம்­மிடம் பேசும்­போது, ``எங்கள் அலு­வ­கத்­துக்கு வந்த கமரூன், எரிக்­கப்­பட்ட எங்கள் அச்சு இயந்­தி­ரங்­க­ளையும், கொல்­லப்­பட்ட ஊழி­யர்கள், தொடர்ச்­சி­யாக நடை­பெற்ற தாக்­கு­தல்கள் பற்­றிய விப­ரங்­க­ளையும் விரி­வாகக் கேட்­ட­றிந்தார். ஊட­கங்­களைச் சுதந்­தி­ர­மாக இயக்கமுடி­யாத சூழலை அவ­ரிடம் சுட்­டிக்­காட்­டினோம். எங்கள் பிரச்­சி­னை­களைக் கேட்­டவர், அதைக் கவ­னிப்­ப­தாகக் கூறிச்­சென்றார்.

இந்த மாநாடு, இந்­தி­யாவின் மீது பெரிய சந்­தே­கங்­களை எழுப்பிச்சென்­றுள்­ளது. எம்­மக்­க­ளிடம் இந்­தியா மீதான கோபம் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது'' என்று உள்­ளூர்­வா­சி­களின் கொந்­த­ளிப்­பான மன­நி­லையைப் பிர­தி­ப­லித்தார்.

53 நாடுகள் அங்கம் வகிக்கும் பொது­ந­ல­வாய கூட்­ட­மைப்பின் 49 நாடு­களே, கொழும்பில் இடம்­பெற்ற மாநாட்டில் பங்­கேற்­றன. அதிலும் 23 நாடு­களே மேல்­நிலை பிர­தி­தி­களை அனுப்­பி­வைத்­தன. ஏனைய நாடுகள், ஒப்­புக்குச் சிலரைப் அனுப்­பி­ய­தோடு அமை­தி­யா­கி­விட்­டன.

இந்த மாநாட்டில் அதீத கவ­னத்தை ஈர்த்­தது, மொரி­ஷியஸ் நாட்டின் புறக்­க­ணிப்­புத்தான். காரணம், 2015-ஆம் ஆண்டு வரை இலங்­கைதான், பொது­ந­ல­வாய கூட்­ட­மைப்பின் தலை­மைத்­துவ நாடு. அடுத்­த­ப­டி­யாக அந்­தப்­பொ­றுப்பை ஏற்கவிருக்கும் நாடு மொரி­ஷியஸ். ஆனால், 'இலங்­கையில் மனித உரி­மைகள் கவலையளிக்கும் விதத்தில் இருப்­பதால், இந்த மாநாட்டில் பங்­கேற்க முடி­யாது’ என்று அறி­வித்­தது. இந்­நி­லையில், அடுத்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்­கக் ­க­லந்­து­கொள்­ளு­மாறு பொது­ந­ல­வாய செயலர் விடுத்த அழைப்­பையும் நிரா­க­ரித்தார் மொரி­ஷியஸ் பிர­தமர் நவீன் ராம் கூலம்.

சர்­வ­தேச அரங்கில் இலங்கை அர­சுக்கு எதி­ரான மூக்­க­றுப்­பாக மொரி­ஷி­யஸின் திட­மான நட­வ­டிக்­கையைக் குறிப்­பி­டு­கி­றார்கள் மனித உரிமை ஆர்­வ­லர்கள். '`இன்னும் ஐந்து மாத காலத்­துக்குள் உள்­நாட்டு மனித உரிமை தொடர்­பான நம்­பத்­த­குந்த உள்­நாட்டு விசா­ரணை தேவை. நல்­லி­ணக்க ஆணைக் குழுவின் பரிந்­து­ரைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும். இல்­லை­யெனில், மார்ச் மாதம் நடை­பெறும் ஐ.நா. அமர்வில் இலங்­கையில் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அழுத்தம் கொடுப்போம்'’ என்ற இங்­கி­லாந்து பிர­தமர் டேவிட் கம­ரூனின் காலக்­கெ­டுவை சடு­தியில் நிரா­க­ரித்­தது இலங்கை அர­சாங்கம்.

`'இலங்கை மீது அனைத்­து­லக போர்க்­குற்ற விசா­ரணை என்ற பேச்­சுக்கே இடமில்லை. ஏனென்றால், நாங்­களே சொந்­த­மாக விசா­ரிக்க ஆணைக்­குழுவை அமைத்­துள்ளோம். புலி­களை அழித்தோம். அவர்­களின் 80 சத­வீதக் கட்­ட­மைப்பை மீட்டோம். இதை­யெல்லாம் செய்த எம்மால், நம்­ப­க­மான விசா­ர­ணையை மட்டும் மேற்­கொள்ள முடி­யாதா? எங்­க­ளுக்கு எவரும் கெடு விதிக்க முடி­யாது!'’ என்று கம­ரூ­னுக்கு உடனே பதி­லடி கொடுத்­தது இலங்கை அரசு.

டேவிட் கம­ரூனின் அழுத்தம், மொரி­ஷி­யஸின் புறக்­க­ணிப்பு, ஊட­கங்­களின் கூக்­குரல் எல்லாம் இடம்­பெற்றது பொது­ந­ல­வாய அமைப்­புக்கு வெளி­யில்தான். இலங்கைப் போரில் கொல்­லப்­பட்ட மக்கள் பற்­றியோ, இப்­போது எஞ்­சி­யி­ருப்­ப­வர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியோ பொதுநலவாய அமைப்பினுள் யாரும் வாய் திறக்கவே இல்லை.

பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளின் கூட்டமைப்பான பொதுநலவாய அமைப்புக்கு ராஜபக் ஷவைத் தலைவராக்கி ஓய்ந்துவிட்டது கொழும்பு மாநாடு. இனி அடுத்தகட்ட காட்சிகள் மார்ச் மாதம் ஜெனீவாவில் அரங்கேறும். அதற்குள் உலகை இன்னொருமுறை அதிரச்செய்யும் ஆவணப்படம் ஒன்றை `சனல் 4' தயாரித்திருக்கும்.

போருக்கு முன்னர் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்த அத்தனை நாடுகளும், இப்போது மனித உரிமை பாவனை காட்டுகிறது. ஆனால், இது எதையும் அறியாத இலங்கை மக்கள், கைகளில் மனுக்களோடு அலைந்துகொண்டு இருக்கிறார்கள்... யாராவது வந்து தங்களின் துன்பங்களைத் தீர்க்க மாட்டார்களா என்று!

[ ‘விகடன்’ ]
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல