ஞாயிறு, 3 நவம்பர், 2013

அலெக்சாண்டரின் இறுதி வேண்டுகோள்!

லகில் தான் சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய மாவீரன் அலெக்சாண்டர் தனது 33ம் வயதில் மரணத் தருவாயில் தம் படைத் தளபதியை அழைத்து, தனது மரணத்துக்குப் பிறகு செய்யப்பட வேண்டிய மூன்று காரியங்களை கூறினான்...

1. தனது சவப்பெட்டியை தனக்கு மருத்துவம் பார்த்த நாட்டின் மிகச் சிறந்த மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும்.

2. தனது சவ ஊர்வலம் செல்லும்போது, பாதையில் பொன்னையும் பொருளையும் வாரி இறைக்க வேண்டும்.

3. சவப்பெட்டியில் மேல்புறம் துளையிட்டு தனது 2 கைகளையும் விண்ணை நோக்கி உயர்ந்திருக்கச் செய்து, அதை மக்கள் காணச் செய்ய வேண்டும்.

இப்படி 3 வேண்டுகோள்களை விடுத்துவிட்டு அதற்கான காரணங்களையும் அலெக்சாண்டர் கூறினான்...

1. எவ்வளவுதான் சிறந்த மருத்துவம் பார்த்தாலும் உயிர் போவதை எப்போதும், யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

2. இம்மண்ணுலகில் வாழும் போது எவ்வளவு சம்பாதித்தாலும் அது இங்கேதான் இருக்கும். கூட வராது.

3. மாவீரன் அலெக்சாண்டர் எவ்வளவுதான் நாடுகளையும், பொருளையும் சம்பாதித்தாலும் செத்தபின்பு வெறும் கையுடன்தான் போகின்றான் என மக்கள் அறியவேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல