அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விசா வழங்கப்பட்டுள்ளதானது புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலைமையை ஒத்ததாக உள்ளது என்பதே உண்மை நிலையாகும்.
புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விசா வழங்கப்படுகின்றது.
2012.08.13ஆம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தவர்களுக்கே இவ்வாறான நிபந்தனைகளுடன் தற்காலிக விசா வழங்கப்படுகின்றது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில், தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு, தனது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்த கடல் வழியான அவுஸ்திரேலியா பயணமாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடல் மார்க்கமாக பயணிப்பது என்பது ஒரு மனிதனின் மரணப் பயணமாகவே அமைகின்றது. தமிழ் அகதிகள் தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இவ்வாறான பாதுகாப்பற்ற இந்த கடல் பயணத்தை தொடர்கின்றனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், தற்போது அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களமானது தனது சட்டத்தில் பாரிய திருத்தங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருத்தங்களுடன் வழங்கப்படும் தற்காலிக விசாவானது தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆனால், இந்த சட்டங்கள் தெரிந்தும் ஆட்கடத்தல் தரகர்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் நோக்குடன் பாதுகாப்பற்ற கடல் பயணத்தை ஏற்பாடு செய்கின்றனர். இவற்றில் பல படகுகள் நடுக்கடலில் சங்கமம் ஆகிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பல இலட்சக்கணக்கான பணத்தை கடனாகப் பெற்று இன்று ஒரு சந்தோசமற்ற சூழ்நிலையில் குடும்பத்தார் நடுத்தெருவில் நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடல் பயணத்தினை எவரும் மேற்கொள்ளாதிருப்பது சிறந்த செயலாகும் என்பதே எமது அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நல்ல படிப்பினையாகும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
ஆட்கடத்தலை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையில், அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை ஆட்கடத்தல் சம்பந்தமான சட்டங்களை ஒருங்கிணைப்பது பற்றிய மாநாடொன்று அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தில், ஆட்கடத்தல் பற்றிய திருத்தங்களின் நிலைமை, ஆட்கடத்தலுக்கு எதிரான சட்ட அமுலாக்கல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல், ஆட்கடத்தல் சட்டங்களை மேலும் ஒருங்கிணைப்பதற்கு அவுஸ்திரேலியாவும், இலங்கையும் இணைந்து பணியாற்றக்கூடிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விடயங்கள் குறித்து இரு நாடுகளினதும் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடினர்.
2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட இடம்பெயர்வோரைக் நாடு கடத்துவதற்கெதிரான ஒத்துழைப்பு பற்றிய அவுஸ்திரேலிய -– இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான சட்ட அமைப்புக்களில் உள்ள குறைபாடுகளை உபயோகிப்பதைத் தடுக்கும் பொருட்டு, ஆட்களைக் கடத்துவதற்கெதிரான சட்டவரைபுகளை பலப்படுத்தி ஒருங்கிணைக்கவென அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து பணியாற்றி வருகின்ற நிலையிலும் ஆட்கடத்தல் நடைமுறைகள் அதிகரித்து வருவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
ஒரு செல்லத்தக்க விசா இல்லாமல் படகுமூலமாக வந்த மக்களில் சிலர் அவுஸ்திரேலிய சமூகத்தில் வாழலாம் என அவுஸ்திரேலிய அரசு முடிவுசெய்துள்ளது.
ஆனால் அவுஸ்திரேலிய சமூகத்தில வாழும் இவர்களுடைய வழக்குகள் தொடர்பாக எந்த நேரமும் 3ஆம் தரப்பு நாடான பப்புவா நியுகினியா அல்லது நவுறு போன்றதொரு பிராந்திய செயலாக்க நாட்டிற்கு மாற்றப்படலாம்.
சமூகத்தில் வாழ்வதற்கு இணைப்பு விசா வழங்கப்படுகின்றது. இது ஒரு தற்காலிக விசாவாகும் இந்த இணைப்பு விசாவானது பாதுகாப்பு கோரிக்கையில் ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.
இந்த இணைப்பு விசா, தற்காலிகமாக குடியேற்றத் தடுப்புக் காவலுக்கு வெளியே வாழ்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு விசா நிபந்தனைகளைச் சரிபார்க்கும் வரை படிப்பதற்கு கூட முடியாது அப்படி படிக்க வேண்டுமானால் சொந்தப் பணத்திலேயே படிக்க வேண்டும். வேலை செய்ய முடியாது. யாரும் சட்டவிரோதமாக வேலை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களுடைய விசா ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்படும்.
இப்படியான பல நிபந்தனைகளுக்கு மத்தியில் அகதிகளாகச் செல்பவர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் உண்மை நிலை தெரியாமல் இலங்கை தமிழர்களை ஆசைவார்த்தை கூறி ஆட்கடத்தும் தரகர்கள் ஏமாற்றுகின்றனர் . ஆகவே, தமிழர்கள் இனிமேலும் ஏமாறாது இருக்கவேண்டும். இதுதான் இலங்கை யிலிருந்து புகலிடக் கோரிக்கையுடன் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளின் இன்றைய நிலை.
சசிகரன் புண்ணியமூர்த்தி
புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விசா வழங்கப்படுகின்றது.
2012.08.13ஆம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தவர்களுக்கே இவ்வாறான நிபந்தனைகளுடன் தற்காலிக விசா வழங்கப்படுகின்றது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில், தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு, தனது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்த கடல் வழியான அவுஸ்திரேலியா பயணமாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடல் மார்க்கமாக பயணிப்பது என்பது ஒரு மனிதனின் மரணப் பயணமாகவே அமைகின்றது. தமிழ் அகதிகள் தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இவ்வாறான பாதுகாப்பற்ற இந்த கடல் பயணத்தை தொடர்கின்றனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், தற்போது அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களமானது தனது சட்டத்தில் பாரிய திருத்தங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருத்தங்களுடன் வழங்கப்படும் தற்காலிக விசாவானது தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆனால், இந்த சட்டங்கள் தெரிந்தும் ஆட்கடத்தல் தரகர்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் நோக்குடன் பாதுகாப்பற்ற கடல் பயணத்தை ஏற்பாடு செய்கின்றனர். இவற்றில் பல படகுகள் நடுக்கடலில் சங்கமம் ஆகிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பல இலட்சக்கணக்கான பணத்தை கடனாகப் பெற்று இன்று ஒரு சந்தோசமற்ற சூழ்நிலையில் குடும்பத்தார் நடுத்தெருவில் நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடல் பயணத்தினை எவரும் மேற்கொள்ளாதிருப்பது சிறந்த செயலாகும் என்பதே எமது அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நல்ல படிப்பினையாகும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
ஆட்கடத்தலை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையில், அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை ஆட்கடத்தல் சம்பந்தமான சட்டங்களை ஒருங்கிணைப்பது பற்றிய மாநாடொன்று அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தில், ஆட்கடத்தல் பற்றிய திருத்தங்களின் நிலைமை, ஆட்கடத்தலுக்கு எதிரான சட்ட அமுலாக்கல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல், ஆட்கடத்தல் சட்டங்களை மேலும் ஒருங்கிணைப்பதற்கு அவுஸ்திரேலியாவும், இலங்கையும் இணைந்து பணியாற்றக்கூடிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விடயங்கள் குறித்து இரு நாடுகளினதும் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடினர்.
2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட இடம்பெயர்வோரைக் நாடு கடத்துவதற்கெதிரான ஒத்துழைப்பு பற்றிய அவுஸ்திரேலிய -– இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான சட்ட அமைப்புக்களில் உள்ள குறைபாடுகளை உபயோகிப்பதைத் தடுக்கும் பொருட்டு, ஆட்களைக் கடத்துவதற்கெதிரான சட்டவரைபுகளை பலப்படுத்தி ஒருங்கிணைக்கவென அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து பணியாற்றி வருகின்ற நிலையிலும் ஆட்கடத்தல் நடைமுறைகள் அதிகரித்து வருவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
ஒரு செல்லத்தக்க விசா இல்லாமல் படகுமூலமாக வந்த மக்களில் சிலர் அவுஸ்திரேலிய சமூகத்தில் வாழலாம் என அவுஸ்திரேலிய அரசு முடிவுசெய்துள்ளது.
ஆனால் அவுஸ்திரேலிய சமூகத்தில வாழும் இவர்களுடைய வழக்குகள் தொடர்பாக எந்த நேரமும் 3ஆம் தரப்பு நாடான பப்புவா நியுகினியா அல்லது நவுறு போன்றதொரு பிராந்திய செயலாக்க நாட்டிற்கு மாற்றப்படலாம்.
சமூகத்தில் வாழ்வதற்கு இணைப்பு விசா வழங்கப்படுகின்றது. இது ஒரு தற்காலிக விசாவாகும் இந்த இணைப்பு விசாவானது பாதுகாப்பு கோரிக்கையில் ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.
இந்த இணைப்பு விசா, தற்காலிகமாக குடியேற்றத் தடுப்புக் காவலுக்கு வெளியே வாழ்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு விசா நிபந்தனைகளைச் சரிபார்க்கும் வரை படிப்பதற்கு கூட முடியாது அப்படி படிக்க வேண்டுமானால் சொந்தப் பணத்திலேயே படிக்க வேண்டும். வேலை செய்ய முடியாது. யாரும் சட்டவிரோதமாக வேலை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களுடைய விசா ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்படும்.
இப்படியான பல நிபந்தனைகளுக்கு மத்தியில் அகதிகளாகச் செல்பவர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் உண்மை நிலை தெரியாமல் இலங்கை தமிழர்களை ஆசைவார்த்தை கூறி ஆட்கடத்தும் தரகர்கள் ஏமாற்றுகின்றனர் . ஆகவே, தமிழர்கள் இனிமேலும் ஏமாறாது இருக்கவேண்டும். இதுதான் இலங்கை யிலிருந்து புகலிடக் கோரிக்கையுடன் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளின் இன்றைய நிலை.
சசிகரன் புண்ணியமூர்த்தி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக