சனி, 26 ஜூலை, 2014

சுப்­பி­ர­ம­ணிய சுவா­மியின் யதார்த்த­மற்ற கருத்­துக்கள்

இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த பார­தீய ஜன­தாக் ­கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணிய சுவாமி தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. இலங்கை வந்­தி­ருந்த சுப்­பி­ர­ம­ணிய சுவாமி சர்­வ­தேச கற்கை­க­ளுக்­கான பண்­டா­ர­நா­யக்க நிலை­யத்தின் ஏற்­பாட்டில் இடம் பெற்ற கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்டு கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார்.



இதன்­போது, இலங்­கையில் இன அழிப்பு இடம் பெற்­றது என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்கும் தீர்­மானம் கூட அவ்­வாறு கூற­வில்லை. லண்­ட­னிலும், நோர்­வே­யிலும், இருக்கும் தமிழ் அடிப்­ப­டை­வா­திகள் மட்­டுமே இலங்­கையில் இன அழிப்பு இடம் பெற்­றது எனக் கூறு­கின்­றனர். இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை என்ற ஒன்று இல்லை என்றும் நான் கரு­து­கின்றேன். பிரித்­தா­னி­யரால் நாம் மூளைச்­ச­லவை செய்­யப்­பட்­டுள்ளோம். அத­னா­லேயே இனம் என்ற விட­யத்தை முன்­வைத்து செயற்­ப­டு­கின்றோம். இந்­தி­யாவில் அண்­மையில் நடத்­தப்­பட்ட ஆய்­வொன்றின் மூலம் அனை­வ­ருக்கும் ஒரே மர­ப­ணுக்கள் காணப்­ப­டு­கின்­றன என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு தான் இலங்­கை­யிலும், அனை­வரும் ஒன்றுபட­வேண்டும் என்று சுப்­பி­ர­ம­ணிய சுவாமி தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­விட இலங்­கையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்­ற­தாக குற்றம் சுமத்தி இலங்கை மீது விரல் நீட்­டு­ப­வர்கள் யார் என்­பதை பார்க்­க­வேண்டும். இலங்­கையில் 13 ஆவது திருத்தச் சட்­ட­மா­னது போது­மான அள­விற்கு அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதில் சில ஏற்­பா­டு­களே மீத­மாக உள்­ளன. தனிப்­பட்ட ரீதியில் நாம் அவ் விடயம் குறித்து விளக்­க­ம­ளிக்க முடியும். ஆனால் உட­ன­டி­யாக அதனை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு சர்­வா­தி­காரப் போக்கில் அழுத்­தங்­களை வழங்க முடி­யாது என்றும் சுவாமி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இலங்­கைக்கும் எமக்­கு­மி­டையில் அடிப்­ப­டை­யி­லான முரண்­பா­டுகள் எவையும் இல்லை. ஆனால் தனி ஈழம் அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் தற்­போது வேறு வழியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிரி­வி­னைக்கோ அல்­லது தனி­யான ஈழம் அமைப்­ப­தற்கோ ஒரு­போதும் எமது நாடு அனு­ம­திக்­காது என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

சுப்­பி­ர­மணிய சுவா­மியின் இவ்­வா­றான கருத்­துக்கள் குறித்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தமது நிலைப்­பாட்டை விளக்­கி­யி­ருந்­தது. இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரி­வித்­தி­ருந்த தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் சுப்­பி­ர­ம­ணிய சுவா­மியின் கருத்­துக்கள் அவர் அர­ச­சார்­பு­டை­யவர் என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது என்று கூறி­யுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­தி­ரனும் விசனம் தெரி­வித்­தி­ருந்தார். இலங்­கையின் விட­யங்­களை எவ்­வாறு புரிந்­து­வைத்­துள்ளார் என்­பது சுப்­பி­ர­ம­ணிய சுவா­மியின் பேச்சில் தெளிவாக தெரி­கின்­றது. மேடையில் வார்த்­தை­களை விடு­வ­தற்கு முன்னர் வடக்­கிற்கு வந்து பார்த்தால் தமிழ் மக்­களின் நிலைப்­பாடு என்­ன­வென்­பது அவ­ருக்கு தெரிந்­தி­ருக்கும்.

இலங்கை அர­சாங்­கத்­திற்கு விசு­வா­ச­மான ஒரு­வ­ரா­கவே சுப்­பி­ர­ம­ணிய சுவாமி இருந்து வரு­கின்றார். யுத்­தத்தில் பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­மை­யையும் இரா­ணுவ கொடு­மை­க­ளையும் சரி­யென விவா­திக்­கக்­கூ­டிய ஒரு­வ­ரா­கவே அவர் காணப்­ப­டு­கின்றார். எனவே, அவரின் கருத்­துக்­களை நாம் பெரி­து­ப­டுத்­தப்­போ­வ­தில்லை. யுத்த கால கட்டத்தில் உறக்­கத்தில் இருந்­தவர் இன்­னமும் நித்­தி­ரையை விட்டு எழும்­ப­வில்லை என்று தெரி­கின்­றது என்று சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் தனது கருத்தை வெளியிட்­டி­ருக்­கின்றார்.

அன்று வழங்­கப்­பட்ட மாகா­ண­சபை முறையில் பல விட­யங்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. இந்த நிலை­யி­லேயே இன்று மாகா­ண­சபை செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. உண்மை நிலை­யினை தெ ளிவாக புரிந்து கொள்ள இவர்கள் முனை­ய­வேண்டும் என்றும் சுரேஷ் எம்.பி. தனது விச­னத்தை தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இலங்கை வந்­தி­ருந்த சுப்­பி­ர­ம­ணிய சுவாமி தலை­மை­யி­லான பார­தீய ஜனதா கட்சி குழு­வினர் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­

பக் ஷ, அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ, பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ உட்­பட பல­ரையும் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான பண்­டா­ர ­நா­யக்க நிலை­யத்தின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் உட்­பட பெரு­ம­ள­வான அர­சியல் தலை­வர்­களும் இரா­ஜ­தந்­தி­ரி­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர். இந்தச் சந்­திப்பில் இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவர் வை.கே. சின்­ஹாவோ அல்­லது தூதரக அதி­கா­ரி­களோ பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

இதி­லி­ருந்து சுப்­பி­ர­ம­ணிய சுவாமி தலை­மை­யி­லான தூதுக்­குழு­வி­னரின் விஜயம் இந்­திய அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இடம் பெற்­ற­தல்ல என்­பதை உறு­திப்­ப­டுத்த முடியும். ஏனெனில் இந்­திய அர­சாங்­கத்தின் ஏற்­பாட்டில் இந்த விஜயம் இடம் பெற்­றி­ருந்தால் இந்த வைப­வத்தில் இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவர் நிச்­ச­ய­மாக கலந்­து­கொண்­டி­ருப்பார்.

இந்­திய மத்­திய ஆட்­சி­யினை பார­தீய ஜனதா கட்சி கைப்­பற்­று­வ­தற்கு முன்­னரே சுப்­பி­ர­ம­ணிய சுவாமி இலங்­கைக்கு பல தட­வைகள் விஜயம் செய்­தி­ருந்தார். அந்த விஜ­யங்­களின் போதும் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­க­ளையே அவர் தெரி­வித்­தி­ருந்தார். தற்­போது இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த அவர் 13ஆவது திருத்தச் சட்­ட­மா­னது போது­மான அள­விற்கு அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று கொழும்பில் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் நாடு திரும்­பிய அவர் புது­டில்­லியில் செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் கருத்துத் தெரி­வித்த போது இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரப்­ப­கிர்வு அளிக்கும் அந்த நாட்டு அர­சியல் அமைப்புச் சட்­டத்தின் 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்த இலங்கை அரசு அக்­க­றை­காட்­ட­வேண்டும். அதற்குத் தேவை­யான யோச­னை­களை வழங்க இந்­தியா தயா­ராக உள்­ளது என்று இலங்கைத் தலை­வர்­க­ளிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளேன் என்று தெரி­வித்­துள்ளார்.

இதி­லி­ருந்து சுப்­பி­ர­ம­ணிய சுவாமி இலங்­கையில் ஒரு­க­ருத்­தையும், இந்­தி­யாவில் மற்­றொரு கருத்­தையும் தெரி­வித்­துள்­ளமை நிரூ­ப­ண­மா­கின்­றது. இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்­பது எட்­டாக்­க­னி­யா­கவே இருந்து வரு­கின்­றது. 13ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழ் அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பதில் இந்­திய மத்­திய அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கின்­றது. இந்­தி­யாவின் புதிய பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்ட நரேந்­தி­ர­மோ­டியின் பத­வி­யேற்பு வைப­வத்தில் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ கலந்து கொண்டார். இதன் போது நடை­பெற்ற சந்­திப்பில் 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வதன் அவ­சியம் குறித்து இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்திலும் இதே கொள்கை­யினையே இந்தியா கடைப்பிடித்திருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் புதுடில்லிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண தயார் என்று உறுதியளித்திருந்தார். இவ்வாறு உறுதிகள் வழங்கப்பட்டிருந்தபோதிலும், இன்னமும் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை நிலைவரமாக உள்ளது.

இத்தகையதொரு சூழலில் 13 ஆவது திருத்தச் சட்டம் போதுமான அளவிற்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இனப்பிரச்சினை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்றும் இனப்படுகொலை இடம் பெறவில்லை என்றும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதனையே கூட்டமைப்பும் எடுத்துக் கூறியுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல