ஞாயிறு, 21 டிசம்பர், 2014

'காணி, தனி வீடு கொடுத்தால் வெளி­யா­ருக்கு விற்று விடு­வார்­களா?'

மலை­யக மக்­க­ளி­டையே 7 பேர்ச் சஸ் காணி மற்றும் தனித்­தனி வீடுகள் அமைத்­துக்­கொ­டுக்­க ப்­பட வேண்டும் என்ற கோஷம் வலுப்­பெற்­றுள்­ளது. மக்கள் சுய­மாக சிந்­திக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர் என்­ப­தற்கு இந் தக் கோஷம் முன்­னு­தா­ர­ண­மாகும். இனி­மேலும் மலை­யக மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­ப­தற்கு இது ஒரு எச்­ச­ரிக்­கை­யா­கவும் அமை­கி­றது.



காணி, தனி வீடு என்­ப­வற்­றுக்­காக மக்கள் போராட்டம் ஆங்­காங்கே நடை­பெற்று வரு­கின்ற போதிலும், அதைப் பற்றி மலையகத் தலை­வர்கள் கண்­டு­கொள்­ளா­த­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர். மக்கள் எழுச்­சிக்கு வழி­காட்டி அதனை முன்­னெ­டுத்துச் செல்ல வேண்­டிய தலை­மைகள் மெளனம் சாதிப்­பது குறித்து இன்று எல்­லோரும் கேள்வி எழுப்­பு­கின்­றனர்.

அதே­வேளை, இந்தத் தலை­மை­களின் மெள­னத்தில் பல மர்­மங்கள் இருப்­பதை மக்கள் புரிந்து கொள்­ளாமல் இல்லை. மக்­களை மெள­னத்தால் ஏமாற்றி விடலாம் என்று நினைத்தால் அது தப்­புக்­க­ணக்­கா­ கவே இருக்கும் என்­பதை தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.

காணி மற்றும் தனித்­தனி வீடுகள் ஏன் அவ­சியம் என்­பது பற்­றிய கார­ணங்­களும், விளக்­கங்­களும், அவ­சி­யமும் சமூக ஆர்­வ­லர்கள், நிபு­ணர்கள், மனித உரிமை ஆர்­வ­ லர்கள் முதல் சாதா­ரண பொது­மக்கள் வரை அவ்­வப்­போது தெரி­வித்து வரு­கின்­றனர். மனித உரி­மை­களில், 'ஒரு மனிதன் தாம் வசிப்­ப­தற்கு வீடொன்றைப் பெறு­வ ­தற்­கான உரி­மையை கொண்­டுள்ளான்' என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் மலை­யக இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்­கப்­ப­டு­வ­தற்­கான காரணம் என்ன?

2013ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்­ட த்­தினை சமர்ப்­பித்த ஜனா­தி­பதித் மலை­ய­கத்தில் சுமார் 38 ஹெக்­டேயர் தரிசு நிலம் உள்­ள­தா­கவும், அவற்றை தோட்ட மக்­க­ளுக்கு குறிப்­பாக தொழில் இல்­லாத இளைஞர், யுவ­தி­க­ளுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப் ­போ­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். அந்தத் திட்டம் அறி­விப்­புடன் நின்றுவிட்­டது.

2014ஆம் ஆண்­டுக்­கான வரவு-– செலவுத் திட்­டத்தில் மலை­யக மக்­க­ளுக்கு 50 ஆயி ரம் மாடி வீடுகள் அமைத்­துக் ­கொ­டுக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் அந்தத் திட்­டத்­திற்கு நிதி ஒதுக்­கீடு உள்­ளி ட்ட எந்­த­வொரு ஏற்­பாடும் முன்­னெ­டுக்­கப்­ப­டாத நிலையில் கிடப்பில் போடப்­பட்டு விட்­டது. இவ்­வாறு இந்தத் திட்­டங் கள் கிடப்பில் போடப்­ப­டு­வ­தற்கு யார் காரணம்?

மலை­யக மக்­களால் தேர்­தலின் மூலம் தெரிவு செய்­யப்­பட்டு பாரா­ளு­மன்றம் சென்­ற­வர்கள் என்ன செய்­கி­றார்கள்? எதற்­காக அவர்­களை மக்­களை தெரிவு செய்து பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பி­னார்கள்? வெறு­மனே அமர்ந்­தி­ருக்­கவா? அல்­லது அரசின் சலு­கை­களைப் பெற்று சுக­மாக இருப்­ப­தற்­கா­கவா?

தமக்­கான உரி­மை­க­ளுக்­காக குரல் கொடு க்­கவும், அவற்றைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கா­க­வுமே மக்­களை தமது வாக்­குகள் மூலம் தெரிவு செய்து பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பினர்.

அந்த வகையில் இந்த மலை­யகத் தலை­ வர்கள் மலை­யக மக்­க­ளுக்­காக காணி, தனித்­தனி வீடுகள் போன்­ற­வற்றை கேட்­டுப்­பெ­று­வ­தற்கு குரல் கொடுக்காவிட்­டா லும் அர­சாங்கம் தாமாக அறி­வித்த திட்­ட ங்­களை விரைந்து முன்­னெ­டுப்­ப­தற்கு குரல் கொடுத்­தி­ருக்­க­லா­மல்­லவா? குறிப்­பாக, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மலை­யக மக்­களின் நலன்­க­ருதி இந்தத் திட்­டங்­களை அறி­வித்­தி­ருந்தார்.

மக்கள் மீது உண்­மை­யான அக்­கறை இருந்­தி­ருக்­கு­மானால் அல்­லது அவர்­க­ ளுக்கு காணி, தனி வீடுகள் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டு­மென்று உளப்­பூர்­வ­மாக நினைத்­தி­ருந்தால் மலையகத் தலைவர்கள் பாரா­ளு­மன்­றத் தில் தொடர்ச்­சி­யாகக் குரல் கொடுத்­தி­ருப்­பார்கள். அர­சுக்கு அழுத்தம் கொடுத்­தி­ருப்­பார்கள். அல்­லது ஜனா­தி­ப­தி­யிடம் குறித்த திட்­டங்­களை விரை­வு­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்­தி­யி­ருப்­பார்கள். ஆனால் அவர்கள் அவ்­வாறு எத­னையும் செய்­ய­வில்லை.

உண்­மையில் காணி மற்றும் தனி வீடு­களை மலை­யக மக்கள் பெற்­றுக்­கொள்­வ­திலோ அல்­லது பெற்­றுக்­கொ­டுப்­ப­திலோ மலை­யக தலை­வர்­க­ளுக்கு கொஞ்­சமும் இஷ்டம் இல்லை என்­ப­தையே இது­போன்ற நட­வ­டிக்­கைகள் மூலம் புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

ஆரம்ப காலம் முதல் சில மலை­யகத் தலை­வர்கள் மலை­யக சமூ­கத்­துக்கு காணி மற்றும் தனித்­தனி வீடுகள் வழங்­கு­வதில் விருப்­ப­மில்­லா­த­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர். இதற்கு இவர்கள் சொல்லும் கார ணம் என்ன?

'தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு காணி வழங்­கினால் அதை வெளி­யா­ருக்கு விற்று விடு­வார்கள். அதே­போன்று தனித்­தனி வீடு கள் அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட்டால் அதை யும் வெளி­யா­ருக்கு விற்­று­வி­டு­வார்கள். அவர்­க­ளுக்கு காணியோ அல்­லது தனித்­தனி வீடு­களோ அமைத்­துக்­கொ­டுக்­கக்­கூ­டாது. தொடர்ந்தும் காணி­யு­ரி­மை­யற்­ற­வர்­க­ளா­கவும், லயன் காம்­பி­றாக்­க­ளி­லுமே அவர்கள் இருக்க வேண்டும்' என்­பதே இந்த மலை­யகத் தலை­வர்கள் கூறும் கார­ண­மாகும்.

அப்­ப­டி­யானால் இது­வரை எவ்­வ­ளவு பேருக்குத் காணித்­துண்­டுகள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன? எத்­தனை பேரு க்கு தனித்­தனி வீடுகள் அமைத்­துக்­கொ­டு க்­கப்­பட்­டி­ருக்­கின்­றன? இது தொடர்­பான விப­ரங்­களை தெரி­விப்­பார்­களா? சில வேளை ஓரி­ருவர் பல்­வேறு பிரச்­சி­னைகள் கார­ண­மாக வீடு­களை விற்­றி­ருக்­கக்­கூடும். அதை வாங்­கி­ய­வர்­கூட ஒரு வீடில்­லாத தோட்­டப்­புற தமி­ழ­ராக இருக்­கக்­கூடும்.

ஓரி­ருவர் இவ்­வாறு நடந்து கொண்­டி­ருப்­பதைக் காரணம் காட்டி முழு மலை­யக சமூ­கத்­துக்கும் காணி மற்றும் தனி வீடுகள் அமைத்­துக்­கொ­டுக்­கக்­கூ­டாது என்று கார ணம் கூறும் இந்தத் தலை­வர்­களின் செயற்­பாட்டை என்­ன­வென்று சொல்­வது?

மறு­பு­றத்தில் உண்­மை­யான காரணம் இதுவா? இல்லை! தோட்ட மக்கள் தொட ர்ந்து லயன் காம்­பி­ரா­வி­லேயே இருக்க வேண்டும். தனித்­தனி வீடோ அல்­லது காணியோ வழங்­கினால் அவர்கள் சிந்­தி க்கத் தொடங்கி விடு­வார்கள். அர­சியல் தெளிவு பெற்று விடு­வார்கள். அதனால் தமக்கு அர­சியல் செய்ய முடி­யாமல் போய்­விடும் என்ற பயமே இதற்குக் கார­ண­மாகும்.

எனவே, தொடர்ந்து இந்த மக்­களை லயன் காம்­பி­ராக்குள் அடைத்து வைப்­பதே இந்த மலை­யகத் தலை­வர்­களின் திட்­ட­மாகும். இதனை மாற்­றிக்­கொள்ள அவர் கள் தயா­ராக இல்லை.

ஆனால், மலை­யக மக்கள் சுய­மாக சிந்­திக்கத் தொடங்கி விட்­டனர். தம்மை தொடர்ந்து அடி­மை­க­ளா­கவே வைத்­தி­ரு க்க நினைக்கும் தலை­வர்­களின் செயற்­பா­டு­களை நன்கு புரிந்து கொண்­டி­ருக்­கின்­ற னர் என்­பதை இந்தத் தலை­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனை மக்கள் நன்றாக உணர்ந்துள்ள னர். எனவே, பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பது நிச்சயம். இதனை மலையகத் தலைமைகள் என்றும் நினைவில் வைத்தி ருக்க வேண்டும்.

என்­னென்ஸி

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல