அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர உணவகத்தில் 50 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு தடுத் துவைக்கப்பட்டிருந்த நிலையில் கடும் போ ராட்டத்தின் மத்தியில் இரண்டு உயிரிழப்புக்களுடன் 16 மணிநேர போராட்டத்தின் பின் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாடகத்தினால் உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து உலக மக்கள் விடுபடுவதற்கு முன்னர் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 132க்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் உட்பட 145 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
உலகில் பல நாடுகளில் உள்நாட்டு யுத்தத்தினால் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 145 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டுவரும் பெஷாவார். பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர் கள் படித்து வருகின்றனர். இராணுவத்தினரின் பிள்ளைகள் கல்விகற்கும் மேற்படி பாடசாலை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது..
சம்பவத்தன்று வழக்கம்போலவே வீட்டிலிருந்து கிளம்பிய மாணவர்களுக்கு 'அதுதான் தங்களது பெற்றோரை கடைசியாக சந்திக்கும் நாள்' என தெரியாது. பெற்றோர்களுக்கு விடைகொடுத்துவிட்டு பரீட்சை எழுத ஆர்வத்துடன் சென்றனர். பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பாடசாலையில் சுமார் 500 மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்துள்ளனர். நேரம் காலை 10.30 மணி இருக்கும். இராணுவ சீருடை அணிந்திருந்த ஆறு தலிபான் துப்பாபக்கிதாரிகள் பாடசாலையின் உள்ளே நுழைந்தனர்.
அவர்களிடம் இயந்திரத் துப்பாக்கிகளும் கைக்குண்டுகளும், அதிநவீன ஆயுதங்களும் இருந்தன. அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டதும் பதறிப் போன ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் மாணவர்களை உட்புறமாக வைத்து கதவைப்பூட்டி வைத்தனர். ஒவ்வொரு வகுப்பறையாக தேடித் தேடிச் சென்ற துப்பாக்கிதாரிகள் சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் சுட்டுக் கொன்றனர்.
மாணவர்களை உடனடியாக தரையில் படுத்துக்கொள்ளும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். பல மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறினார்கள். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். பொலிஸாரும் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பள்ளியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிக ளும் சுட்டுக்கொல்லப் பட்டனர். பாடசாலை இராணுவத்தின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக வும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருந்தும் பயனில்லை. துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். மேலும் ஒன்பது ஆசிரியர், அலுவ லர்கள் உட்பட 145 பேர் கொல்லப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் 5வயது முதல் 10 வயதிற்குட்பட்டவர்கள்தான் என்பது பெரும் சோகமான தகவலாகும். 'தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம்' என்பதைப்பற்றி அறியாமலேயே அவர்கள் மரண த்தை தழுவினார்கள். பிஞ்சுகளின் தலையிலும், நெஞ்சிலும், வயிற்றுப்பகுதியிலும் சுட்டுத் தங்களின் வெறியைத் தணித்துக்கொண்டனர் துப்பாக்கிதாரிகள்.
அதுமட்டுமன்றி, துப்பாக்கிதாரிகளில் ஒருவன் தற்கொலை குண்டுதாரியாக இருந்துள்ளான். இவன் குண்டுகளை உடலில் பொருத்தியிருததுடன் அவன் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்த வகுப்பறைக்குள் தற்கொலை தாக்குதலை நடத்தி தானும் உயிரிழந்தான். மிகுதியாக இருந்த துப்பாக்கிதாரிகள் ஏனைய மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள்மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
படுகாயமடைந்த 125க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும் அதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ள மாணவர்களிடம் இது தொடர்பாக வினவிய போது "துப்பாக்கிதாரிகள் அரபியில் பேசியதாகவும் அவர்கள் பார்ப்பதற்கு வெளிநாட்டவர்கள் போன்று இருந்ததாகவும்" தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த "தெஹ்ரீக் இ தாலி பான்" என்ற அமைப்பு இத்தாக்குதலுக்கு தாமே காரணம் என பொறுப்பேற்றுள்ளது. இதுபற்றி அந்த இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் தமது தற்கொலைப்படையினரே இந்த தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்திருந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இத்தாக்குதலை நடத்த காரணம் என்ன? எதற்காக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது? இதனால் அவர்களுக்கு கிடைக்கப்போவது என்ன? என பல கேள்விகள் எழுந்தாலும் அதற்கு செய்தித் தொடர்பாளர் அளித்த பதில் "தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் நடத்தி வரும் அதிரடித் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த தாக்குதலை நடத்தினோம், எங்கள் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகளை சுட்டுத்தள்ளும் இராணுவம் எங்களது வலியை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தாக்குதலை நடத்தினோம்" என்று சற்றும் மனச்சாட்சியின்றி கூறுகின்றார்.
மேலும் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி கூறுகையில், இந்த தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான். இனி இது போன்று பல்வேறு தாக்குதல்கள் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிர்தப்பி பாரிய மன அழுத்தத்திற்கு ஆளாகிய ஒரு மாணவன் கூறுகையில், "வகுப்பறையில் தீவிரவாதிகள் புகுந்து சுடத் தொடங்கியபோது மேஜைக்கு அடியில் ஒடுங்கியபடி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்தோம். என் கண் முன்னே என் நண்பர்களை சுட்டு சாய்த்தார்கள். நடுங்கியபடியே உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தோம். தப்பியோடியவர்களைப் பார்த்து தீவிரவாதிகள் கொன்று குவித்தனர்.
என் நண்பர்கள் இரத்தம் சொட்ட உயிரை விட்டது இன்னமும் கண் முன் நிற்கிறது. நாம் இறைவன் அருளினால் காப்பாற்றப்பட்டோம் என்று கண்களில் அச்சம் விலகாமல் நடந்த சம்பவத்தை விவரித்தான். ஆனால் பெற்றோர்களோ "காலையில் பரீட்சைக்கு சென்ற தம் பிள்ளைகள் சடலமாகவே திரும்பிவந்தனர்" என்று கதறி அழுகின்றனர். இவை காலத்தால் அழியாத வடுக்களாக அவர்களின் மனதில் என்றுமே பதிந்திருக்கும்.
நடந்த சம்பவத்தை ஊடகங்களில் பார்த்தும் செய்தியாக படிக்கும் போதே உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் துப்பாக்கி தாரிகளின் வெறியாட்டத்தை நேரில்பார்த்த மாணவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதற்கு மாணவர்களின் இந்த அதிர்ச்சியான நடுக்கமான குரல்களும் பிள்ளைகளை இழந்த பெற்றோரின் அழு குரல்களுமே சாட்சியங்களாகும்.
பெஷாவரில் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் உயிரிழந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ஏராளமானோர் பெஷாவர் நோக்கி சென்றனர். மெழுவர்த்திகள் ஏற்றி வைத்து பலரும் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உலக நாடுகள் பலவற்றிலும் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன், இந்த கொடூர செயல். கடுமையான கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கொடிய செயலுக்கு எந்தவித நியாத்தையும் கற்பிக்கமுடியாது. இதுபோன்ற பயங்கரவாதத்திற்கு எந்த பிரச்சினையையும் காரணமாக கூறமுடியாது. பாடம் கற்றுக்கொண்டிருக்கும் தற்காப்பில்லாத பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்துவது கோழைத்தனமான, கொடிய மனிதாபிமானமற்ற செயல், ஒரு போர் நடைபெறும் போதும் கூட குழந்தைகள் முதியவர்களை கொல்லக்கூடாது என்பதுதான் விதி. அவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். ஆனால் கல்நெஞ்சம் மிக்க உணர்ச்சிகளற்ற இந்த கொடியவர்கள் நடத்திய தாக்குதலில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது'' என்றார்.
இந்தியாவில் பாடசாலைகளில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் உயிரிழந்த மாணவர்களுக்கு பிரார்த்தனையும் செய்தனர்.
இதேவேளை இந்தத்தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தானிலுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவுனரான ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என்று தெஹிரீத் இ தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளபோதும் இந்தியாவே காரணம் என ஹபீஸ் சயீத் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர் வேஸ் முஷாரபும் கூட இந்தத் தாக்குதலின் மூளையாக இந்தியா செயற்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செழியன்
உலகில் பல நாடுகளில் உள்நாட்டு யுத்தத்தினால் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 145 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டுவரும் பெஷாவார். பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர் கள் படித்து வருகின்றனர். இராணுவத்தினரின் பிள்ளைகள் கல்விகற்கும் மேற்படி பாடசாலை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது..
சம்பவத்தன்று வழக்கம்போலவே வீட்டிலிருந்து கிளம்பிய மாணவர்களுக்கு 'அதுதான் தங்களது பெற்றோரை கடைசியாக சந்திக்கும் நாள்' என தெரியாது. பெற்றோர்களுக்கு விடைகொடுத்துவிட்டு பரீட்சை எழுத ஆர்வத்துடன் சென்றனர். பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பாடசாலையில் சுமார் 500 மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்துள்ளனர். நேரம் காலை 10.30 மணி இருக்கும். இராணுவ சீருடை அணிந்திருந்த ஆறு தலிபான் துப்பாபக்கிதாரிகள் பாடசாலையின் உள்ளே நுழைந்தனர்.
அவர்களிடம் இயந்திரத் துப்பாக்கிகளும் கைக்குண்டுகளும், அதிநவீன ஆயுதங்களும் இருந்தன. அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டதும் பதறிப் போன ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் மாணவர்களை உட்புறமாக வைத்து கதவைப்பூட்டி வைத்தனர். ஒவ்வொரு வகுப்பறையாக தேடித் தேடிச் சென்ற துப்பாக்கிதாரிகள் சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் சுட்டுக் கொன்றனர்.
மாணவர்களை உடனடியாக தரையில் படுத்துக்கொள்ளும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். பல மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறினார்கள். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். பொலிஸாரும் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பள்ளியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிக ளும் சுட்டுக்கொல்லப் பட்டனர். பாடசாலை இராணுவத்தின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக வும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருந்தும் பயனில்லை. துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். மேலும் ஒன்பது ஆசிரியர், அலுவ லர்கள் உட்பட 145 பேர் கொல்லப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் 5வயது முதல் 10 வயதிற்குட்பட்டவர்கள்தான் என்பது பெரும் சோகமான தகவலாகும். 'தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம்' என்பதைப்பற்றி அறியாமலேயே அவர்கள் மரண த்தை தழுவினார்கள். பிஞ்சுகளின் தலையிலும், நெஞ்சிலும், வயிற்றுப்பகுதியிலும் சுட்டுத் தங்களின் வெறியைத் தணித்துக்கொண்டனர் துப்பாக்கிதாரிகள்.
அதுமட்டுமன்றி, துப்பாக்கிதாரிகளில் ஒருவன் தற்கொலை குண்டுதாரியாக இருந்துள்ளான். இவன் குண்டுகளை உடலில் பொருத்தியிருததுடன் அவன் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்த வகுப்பறைக்குள் தற்கொலை தாக்குதலை நடத்தி தானும் உயிரிழந்தான். மிகுதியாக இருந்த துப்பாக்கிதாரிகள் ஏனைய மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள்மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
படுகாயமடைந்த 125க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும் அதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ள மாணவர்களிடம் இது தொடர்பாக வினவிய போது "துப்பாக்கிதாரிகள் அரபியில் பேசியதாகவும் அவர்கள் பார்ப்பதற்கு வெளிநாட்டவர்கள் போன்று இருந்ததாகவும்" தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த "தெஹ்ரீக் இ தாலி பான்" என்ற அமைப்பு இத்தாக்குதலுக்கு தாமே காரணம் என பொறுப்பேற்றுள்ளது. இதுபற்றி அந்த இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் தமது தற்கொலைப்படையினரே இந்த தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்திருந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இத்தாக்குதலை நடத்த காரணம் என்ன? எதற்காக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது? இதனால் அவர்களுக்கு கிடைக்கப்போவது என்ன? என பல கேள்விகள் எழுந்தாலும் அதற்கு செய்தித் தொடர்பாளர் அளித்த பதில் "தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் நடத்தி வரும் அதிரடித் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த தாக்குதலை நடத்தினோம், எங்கள் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகளை சுட்டுத்தள்ளும் இராணுவம் எங்களது வலியை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தாக்குதலை நடத்தினோம்" என்று சற்றும் மனச்சாட்சியின்றி கூறுகின்றார்.
மேலும் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி கூறுகையில், இந்த தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான். இனி இது போன்று பல்வேறு தாக்குதல்கள் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிர்தப்பி பாரிய மன அழுத்தத்திற்கு ஆளாகிய ஒரு மாணவன் கூறுகையில், "வகுப்பறையில் தீவிரவாதிகள் புகுந்து சுடத் தொடங்கியபோது மேஜைக்கு அடியில் ஒடுங்கியபடி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்தோம். என் கண் முன்னே என் நண்பர்களை சுட்டு சாய்த்தார்கள். நடுங்கியபடியே உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தோம். தப்பியோடியவர்களைப் பார்த்து தீவிரவாதிகள் கொன்று குவித்தனர்.
என் நண்பர்கள் இரத்தம் சொட்ட உயிரை விட்டது இன்னமும் கண் முன் நிற்கிறது. நாம் இறைவன் அருளினால் காப்பாற்றப்பட்டோம் என்று கண்களில் அச்சம் விலகாமல் நடந்த சம்பவத்தை விவரித்தான். ஆனால் பெற்றோர்களோ "காலையில் பரீட்சைக்கு சென்ற தம் பிள்ளைகள் சடலமாகவே திரும்பிவந்தனர்" என்று கதறி அழுகின்றனர். இவை காலத்தால் அழியாத வடுக்களாக அவர்களின் மனதில் என்றுமே பதிந்திருக்கும்.
நடந்த சம்பவத்தை ஊடகங்களில் பார்த்தும் செய்தியாக படிக்கும் போதே உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் துப்பாக்கி தாரிகளின் வெறியாட்டத்தை நேரில்பார்த்த மாணவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதற்கு மாணவர்களின் இந்த அதிர்ச்சியான நடுக்கமான குரல்களும் பிள்ளைகளை இழந்த பெற்றோரின் அழு குரல்களுமே சாட்சியங்களாகும்.
பெஷாவரில் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் உயிரிழந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ஏராளமானோர் பெஷாவர் நோக்கி சென்றனர். மெழுவர்த்திகள் ஏற்றி வைத்து பலரும் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உலக நாடுகள் பலவற்றிலும் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன், இந்த கொடூர செயல். கடுமையான கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கொடிய செயலுக்கு எந்தவித நியாத்தையும் கற்பிக்கமுடியாது. இதுபோன்ற பயங்கரவாதத்திற்கு எந்த பிரச்சினையையும் காரணமாக கூறமுடியாது. பாடம் கற்றுக்கொண்டிருக்கும் தற்காப்பில்லாத பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்துவது கோழைத்தனமான, கொடிய மனிதாபிமானமற்ற செயல், ஒரு போர் நடைபெறும் போதும் கூட குழந்தைகள் முதியவர்களை கொல்லக்கூடாது என்பதுதான் விதி. அவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். ஆனால் கல்நெஞ்சம் மிக்க உணர்ச்சிகளற்ற இந்த கொடியவர்கள் நடத்திய தாக்குதலில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது'' என்றார்.
இந்தியாவில் பாடசாலைகளில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் உயிரிழந்த மாணவர்களுக்கு பிரார்த்தனையும் செய்தனர்.
இதேவேளை இந்தத்தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தானிலுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவுனரான ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என்று தெஹிரீத் இ தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளபோதும் இந்தியாவே காரணம் என ஹபீஸ் சயீத் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர் வேஸ் முஷாரபும் கூட இந்தத் தாக்குதலின் மூளையாக இந்தியா செயற்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செழியன்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக