ஞாயிறு, 21 டிசம்பர், 2014

உழைப்புக்காகச்சென்று உயிரிழந்த ஓர் அப்பாவி யாழ். இளைஞன்

"நொச்­சி­யா­கம பிர­தே­சத்தை அண்­மித்­த­வேளை மேற்­படி இளை­ஞ­னான துசாந்­தனை, டயர்­களை கழற்றப் பயன்­படுத்­தப்­படும் இரும்­பி­லான வீல் பிற­ச­ரினால் தாக்­கி­ய­தா­கவும் இதனால் அவன் மயக்­க­ம­டைந்து விட்­ட­தா­கவும் பின்னர் தூக்­கிச்­சென்று காட்­டினுள் வீசி­ய­தா­கவும் சாரதி கூறினான்"

கொ ள்ளை, வழிப்­பறி, கொலை என்­பன இன்று நாட்டில் சர்­வ­சா­தா­ர­ண­மாக மாறி விட்­டன. பணத்­துக்­கா­கவும் இதர சிறிய தேவை­க­ளுக்­கா­கவும் கூட ஈவி­ரக்­க­மின்றி கொலைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

குடும்ப வறுமை கார­ண­மா­கவும், பொரு ளா­தாரக் கஷ்­டங்­களின் நிமித்­தமும் இளம் வய­தினர் ஏதா­வது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்­பத்தைக் காக்கும் நோக்­குடன் புறப்­ப­டு­கின்­றனர். அதே­வேளை, பணத்­தாசை பிடித்த சில கழு­கு­க­ளுக்கு அவர்கள் இரை­யா­கவும் நேரு­கின்­றது. அப்­படி ஒரு சம்­பவம் தான் அண்­மையில் வட பகு­திக்கு பொருட்­களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒரு­வ­னுக்கும் நேர்ந்­தது.



தனது குடும்­பத்தைக் காப்­பாற்றும் நோக்­குடன் லொறி­யொன்றில் வேலைக்குச் சென்ற மல்­லாவி, வவுனிக்குளத்தைச் சேர்ந்த 20 வய­தான இளை­ஞனே திடீ­ரெனக் காணாமல் போயி­ருந்தான். இந்­நி­லையில் பெற்றோர் பொலி­ஸிற்குச் சென்று முறை­யிட்­ட­துடன் தமக்கு தெரிந்த அனை­வ­ரி­டமும் அது­கு­றித்து விசா­ரித்­தனர். இறு­தியில் கொழும்­பி­லி­ருந்தும் சீனி ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்று காணாமல் போயி­ருந்­தமை தெரிய வந்­தது. அந்தப் பார ஊர்­தியில் மேற்­படி மல்­லாவி வவுனிக்குளம் பகு­தியைச் சேர்ந்த 20 வய­தான தியா­க­லிங்கம் துஷாந்­தனும் பய­ணித்­தமை தெரி­ய­வந்­தது.

இந்­நி­லையில் துஷாந்தன் எங்கே? சீனி ஏற்றி வந்த அந்த பார ஊர்தி எங்கே? என்று பொலி­ஸாரும் வர்தகர்களும் குறித்த இளை­ஞனின் பெற்­றோரும் பெரும் அதிர்ச்­சிக்கு ஆளா­னார்கள். இறு­தி யில் அந்தப் பெற்­றோ­ருக்குப் பேர­திர்ச்சி காத்­தி­ருந்­தது. அதுதான் துஷாந்தன் ஈவி­ரக்­க­மின்றி படு­கொலை செய்­யப்­பட்ட விடயம்.

யாழ்ப்­பாணம் திரு­நேல்­வேலிப் பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு உணவுப் பொருட்­களைக் கொண்டு வந்த பார ஊர்தி காணாமல் போன சம்­ப­வமும் குறித்த இளைஞன் படு­கொலை செய்­யப்­பட்ட விட­யமும் காட்டுத் தீயாய் பர­வி­யது. இது அந்த இளை­ஞனின் குடும்­பத்தை மட்­டு­மல்ல, வட பகு­தியைச் சேர்ந்த வர்த்­த­கர்கள் அனைவர் மத்­தி­யிலும் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தவே செய்­தது.

முல்­லைத்­தீவு கொல்­ல­வி­ளங்­குளம் மல்­லா­வியைச் சேர்ந்த தியா­க­லிங்கம் துஷாந்தன் (20வயது) தனது குடும்­பத்தின் பொரு­ளா­தார நெருக்­க­டியைக் கருத்­திற்­கொண்டு கொழும்­பி­லி­ருந்து வட­ப­கு­திக்கு பொருட்­களை ஏற்றி இறக்கும் தனியார் நிறு­வ­ன­மொன்றில் தன்னை வேலைக்கு அமர்த்திக் கொண்டான்.

இந்­நி­லையில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு ஆட்­டுப்­பட்டித் தெருவில் வைத்து யாழ்.வர்த்­த­கர்­க­ளினால் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான சீனி, கடலை, எண்ணெய் போன்ற ஒரு பெரும் தொகுதி உணவுப் பொருட்கள் யாழ்ப்­பா­ணத்­துக்கு கொண்­டு­வரும் பொருட்டு குறித்த பொருட்­களை இட­மாற்றும் ஓர் நிறு­வ­ன­மொன்­றிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்.காரை­ந­கரைச் சேர்ந்த வர்த்­தகர் ஒரு­வரே இந்தப் பொருட்­களை இட­மாற்றும் நிறு­வ­னத்தை நடத்தி வரு­கிறார். கொழும்பு ஆட்­டுப்­பட்டித் தெருவில் இயங்கும் இந்த நிறு­வனம் வழ­மை­யாக பொருட்­களை, யாழ்ப்­பா­ணத்­துக்கும் கொழும்­புக்கும் ஏற்றி இறக்கி வரு­கின்­றது.

இந்­நி­லையில் அன்­றைய தினம் தங்கள் வசம் பார ஊர்தி ஒன்றும் இல்­லாத கார­ணத்­தினால் தனக்கு அறி­மு­க­மான பிறி­தொரு நபரின் பார ஊர்­தியை வாட­கைக்கு அமர்த்தி அதில் பொருட்­களை ஏற்றி அனுப்பி வைத்­த­தாகத் தெரிய வரு­கி­றது.

பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த குறித்த பார­வூர்­தியின் சாரதி மற்றும் நடத்­து­ன­ருடன் தனது நிறு­வ­னத்தின் ஊழி­ய­ரென குறித்த இளை­ஞ­ரையும் பொருட்­களின் பாது­காப்பு, கருதி நிறு­வன உரி­மை­யாளர் அனுப்­பி­ வைத்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு கடந்த மாதம் 29ஆம் திகதி பொருட்­களை ஏற்றிப் புறப்­படும் சமயம் பார­வூர்­தியின் டயர் திடீ­ரெனக் காற்­றுப்­போ­ன­மை­யினால் இரவு அதனை சீர்­செய்ய முடி­யாமல் ஆட்­டுப்­பட்டித் தெரு பிர­தே­சத்­தி­லேயே தரித்து நின்று மறுநாள் 30ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பகல் 10.30க்கு பின்­னரே பார­வூர்தி யாழ். நோக்கி புறப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு புறப்­படும் வேளையில் மேற்­படி இளைஞன் தனது தொலை­பே­சி­யி­லி­ருந்து நிறு­வன உரி­மை­யா­ள­ருடன் தொடர்­பு­கொண்டு விப­ரத்தைத் தெரி­வித்­துள்ளான்.

இதேபோல் பார­வூர்­தியின் சாரதி புத்­த­ளத்தை அண்­மித்த பிர­தே­சத்தில் இருந்து இறு­தி­யாக நிறு­வன உரி­மை­யா­ள­ருடன் தொடர்­பு­கொண்டு உரை­யா­டி­யுள்ளார். அதன் பின்னர் எந்தத் தொடர்பும் இருக்­க­வில்லை.

மறுநாள் 1ஆம் திகதி திங்­கட்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள வர்த்­த­கர்கள் தங்­க­ளு­டைய பொருட்கள் இன்னும் வந்து சேர­வில்லை என்ற தக­வலை கொழும்­பி­லுள்ள குறித்த நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ள­ருக்குத் தெரி­வித்­தனர். அதே­வேளை, குறித்த இளைஞன், சாரதி, நடத்­துனர் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து எந்­த­வித தக­வல்­களும் கிடைக்­கா­மை­யினால் மாலையில் நிறு­வன உரி­மை­யாளர் ஆட்­டுப்­பட்­டித்­தெரு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்றைப் பதி­வு ­செய்தார். இதேபோல் யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள பொருட்­களின் உரி­மை­யா­ளரால் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பா­டொன்று பதிவு செய்­யப்­பட்­டது.

ஆட்­டுப்­பட்டித் தெரு பொலிஸார் முதலில் இது விபத்­தாக அல்­லது குற்­றச்­செ­ய­லாக இருக்­கலாம் என்ற கோணத்தில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். அதே­வேளை குறித்த இளை­ஞ­னின் குடும்­பத்தார், இவர்கள் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என்ற அடிப்­ப­டையில் மறு­நா­ளான இரண்டாம் திகதி குறித்த பிர­தேச வைத்­தி­ய­சாலை மற்றும் பொலிஸ் நிலை­யங்கள் அனைத்­திலும் தொடர்­பு­கொண்­ட­போதும் இவை­போன்ற எந்தச் சம்­ப­வமும் இடம்­பெ­ற­வில்லை என அறிந்­தனர். அப்­போ­துதான் நிலைமை மோச­ம­டை­வதை அவர்கள் உணர்ந்­தனர்.

இந்த நிலையில் பொலிஸார் தமது விசா­ர­ணை­களை மேலும் முடுக்­கி­விட்­டதன் பய­னாக, குறித்த பார­வூர்­தின் சார­தியின் மீது சந்­தேகம் வலு­வ­டைந்­தது. அதே­வேளை, அவன் பயன்­ப­டுத்தும் மற்­றுமோர் தொலை­பேசி இலக்­கமும் கிடைத்­தது. இதன் மூலம் மூன்றாம் திகதி பல வழி­க­ளிலும் சிந்­தித்த பொலிஸார் இறு­தியில் ஓர் உத்­தியைக் கையாண்­டனர். ஓர் ஊட­கத்தில் இருந்து உரை­யா­டு­வது போல் உரை­யாடி "தற்­பொ­ழுது உங்­க­ளுக்கு பெறு­மதி மிக்க பரிசில் கிடைத்­துள்­ளது என்றும் அப்­ப­ரி­சினை குடும்ப சகிதம் இன்றே வந்து பெற்­றுக்­கொள்­ளுங்கள்" என்றும் சார­திக்குக் கூறி­யுள்­ளனர். பின்னர் அந்த ஊடக நிறு­வனம் அமைந்­துள்ள பிர­தே­சத்தில் பொலிஸார் குவிக்­கப்­பட்­டனர். குறித்த சார­தியை இனங்­காண்­ப­தற்­காக பொருட்கள் இட­மாற்று நிறு­வ­னத்­தினைச் சேர்ந்த ஒரு­வ­ரையும் அழைத்து வந்­தி­ருந்­தனர். இவ்­வாறு திட்­ட­மிட்டு பொலிஸார் விரித்த வலையில் சாரதி மனைவி சகிதம் அவ்­வி­டத்­திற்கு வந்­த­போது மடக்கிப் பிடிக்­கப்­பட்டான்.

இவ்­வாறு கைது­செய்­யப்­பட்ட சார­தி­யிடம் 3ஆம் திகதி பல வழி­க­ளிலும் விசா­ரணை மேற்­கொண்ட பொலிஸார் பொருட்­களை மீட்­பதை விட அந்த பார­வூர்­தியில் வந்த இளைஞன் தொடர்பில் அதிக அக்­க­றை ­காட்­டினர்.

இதை உணர்ந்த சாரதி, இளைஞன் தொடர்பில் உறு­தி­யான பதில் ஏதும் கூறாது முன்­னுக்குப் பின் முர­ணான தக­வல்­க­ளையே வழங்கி வந்தான். இவ்­வாறு தொடர்ச்­சி­யாக 3 நாட்கள் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் எவ்­வித முன்­னேற்­றமும் எட்­ட­வில்லை. இறு­தி­யாக இம்­மாதம் 7ஆம் திகதி மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணையின் பய­னாக சாரதி வாய்­தி­றந்தான். அவன் அளித்த வாக்­கு­மூ­லத்தின் மூலம் இளைஞன் எவ்­வாறு கொலை செய்­யப்­பட்டான் என்ற விட­யத்தை அறிந்த பொலிஸார் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

அவனின் வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் குறித்த பிர­தே­சத்­திற்கு நேரில் சென்று ஆய்வை மேற்­கொண்ட பின்னர் பொலிஸார், இளை­ஞனின் சட­லத்தை மீட்­ப­தற்­கான அனு­ம­தியை அன்­றைய தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை என்­ப­தனால் நீதி­மன்­றத்தால் பெற­மு­டி­யாமல் போனது. மறுநாள் 8ஆம் திக­தியே அதற்­கான உரிய அனு­ம­தியைப் பெற்­றனர். மேற்­படி விட­யங்கள் குறித்து நிறு­வன உரி­மை­யா­ள­ரினால், இளை­ஞ­னனின் உற­வி­னர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்டு அவர்­க­ளுடன் சார­தி­யையும் அழைத்துக் கொண்டு கடந்த 9ஆம் திகதி காலை பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு நேரில் சென்­றனர்.

சார­தி­யினால் அடை­யாளம் காட்­டப்­பட்ட பிர­தே­ச­மா­னது, கொழும்­பி­லி­ருந்து யாழ்.நோக்கி வரும் பாதையில் நொச்­சி­யா­கம பிர­தே­சத்தைத் தாண்டி அநுரா­த­புரம் செல்லும் இடத்தில் 67ஆவது கிலோ­மீற்றர் பிர­தே­சத்தில் இடது பக்கக் காட்டில் அமைந்­துள்­ளது. மேற்­படி இனங்­காட்­டப் ­பட்ட இடத்தில் பொலிஸார் தேடுதல் நடத்­ தி­ய­போது பார­வூர்­தியில் விரிக்­கப்­பட்­டி­ருந்த பொலித்தீன் இரத்­தக்­கறை படிந்த நிலையில் முத­லா­வது தட­யப்­பொ­ரு­ளாக மீட்­கப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து காட்­ டினுள் சென்­ற­போது இளை­ஞனின் பாத­ணி­களும் மேலும் சிறிது தூரத்தில் பார­வூர்­தி­க­ளுக்கு சக்­க­ரங்கள் மாற்­றப்­ப­யன்­ப­டுத்­தப்­படும் வீல் பிரசர் எனப்­படும் இரும்பும் மீட்­கப்­பட்­டது. தொடர்ந்து 25 மீற்றர் தூரம் சென்­ற­வே­ளையில் ஓர் 20 வயதை மதிக்­கத்­தக்க இளைஞர் ஒரு­வரின் முக­மற்ற உடல் காணப்­பட்­டது.

அந்த உடலில் அணிந்­தி­ருந்த ஆடை­களைக் கொண்டு அது தி.துசாந்­தனின் உடல்தான் என குறித்த நிறு­வன உரி­மை­யா­ள­ரி­னாலும் துஷாந்­தனின் சகோ­த­ர­ராலும் அடை­யாளம் காட்­டப்­பட்­டது. இந்­நி­லையில் குறித்த பார ஊர்­தியின் சார­தியை பொலிஸார் முறை­யாக விசா­ரித்­ததில் குறித்த சடலம் பொலி­ஸாரின் உத­வி­யுடன் அன்­றைய தினம் 9ஆம் திகதி மீட்­கப்­பட்டு அனு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லையில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

"தாங்கள் நொச்­சி­யா­கம பிர­தே­சத்தை அண்­மித்­த­வேளை மேற்­படி இளை­ஞ­னான துசாந்­தனை டயர்­களை கழற்றப் பயன்­படுத்­தப்­படும் இரும்­பி­லான வீல் பிற­ச­ரி னால் தாக்­கி­ய­தா­கவும் இதனால் அவன் மயக்­க­ம­டைந்து விட்­ட­தா­கவும் பின்னர் தூக்­கிச்­சென்று காட்­டினுள் வீசி­ய­தா­கவும் கூறினான்.

தொடர்ந்து சார­தி­ய­ளித்த வாக்கு மூலத் தில், பின்னர் அங்­கி­ருந்து புறப்­பட்டு திஸ்ஸ மஹ­ராகம பிர­தே­சத்­திற்கு பார­வூர்­தியை செலுத்­தி­ய­தா­கவும், அப்­பி­ர­தே­சத் தில் வீடொன்றை வாட­கைக்குப் பெற்று பொருட்­களை இறக்­கி­ய­துடன் குறித்த சில பொருட்­களை தனி­யா­ருக்கு கேட்ட விலையில் விற்­பனை செய்­த­தா­கவும் தெரி­வித்தான். இத­னை­ய­டுத்து பொலிஸார் அங்கு சென்று தேடுதல் நடத்­தி­ய­போது குறிப்­பிட்ட அளவு பொருட்­களை மீட்­ட­தோடு இளை­ஞனின் தொலை­பே­சி­ மற்றும் அடை­யாள அட்­டைகள் என்­ப­வற்­றையும் மீட்­டனர்.

இவ்­வாறு நொச்­சி­யா­கம காட்­டுப்­பி­ர­தே­சத்தில் வைத்து மீட்­கப்­பட்ட சடலம் அநு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லையில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. பின்னர் பெற்றோர் சட­லத்தைப் பொறுப்பேற்று இறு­திக்­கி­ரி­யை­களை மேற் ­கொண்­டனர். இவ் விடயம் குற்­றச்­செ­ய­லு டன் தொடர்­பு­பட்­ட­மை­யினால் வழக்குப் பதி­வு ­செய்­யப்­பட்டு வழக்­கின்­போது சாட்­சி­யாக உத­வக்­கூ­டிய சட்ட ஆவ­ண­மான மர­பணு பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட் ­டது.

மேற்­படி இளை­ஞனின் தந்­தையார் வன்­னியில் நடை­பெற்ற இறுதி யுத்­தத்தில் எறி­க­ணைத்­தாக்­கு­தலில் இறந்­த­மை­யினால் குடும்ப வறுமையைப் போக்கும் முகமாக இள வயதிலேயே தொழில் முயற்சியில் இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  
ந.லோகதயாளன்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல