சனி, 10 ஜனவரி, 2015

சலிப்பாக இருந்ததால் நோயாளர்களை படுகொலை செய்த மருத்துவத்தாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்

தான் பணி­யாற்­றிய மருத்­து­வ­ம­னையில் 30 நோயா­ளர்­களை படு­கொலை செய்­ததை முன்னாள் ஜேர்­ம­னிய ஆண் மருத்­துவத்தாதி­யொ­ருவர் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.



நில்ஸ் எச் (38வயது) என்ற மேற்­படி மருத்­து­வத்­தாதி இரு­தய சிகிச்­சைக்­கான மருந்தை அள­வுக்­க­தி­க­மாக ஊசி மூலம் ஏற்றி நோயா­ளர்­களை படு­கொலை செய்­துள்ளார்.

தான் மிகவும் சலிப்­ப­டைந்­தி­ருந்­த­தா­கவும் அதனால் தனது உயிர்ப்­பிக்கும் திற­மையை மேம்­ப­டுத்த விரும்­பி­ய­தா­கவும் நில்ஸ் தெரி­வித்தார்.

அந்த மருத்­துவத் தாதி மீது வட ஜேர்­ம­னியில் ஓல்­டென்பேர்க் (Oldenburg) எனும் இடத்­தி­லுள்ள மருத்­து­வ­ம­னையில் 3 நோயா­ளர்­களை படு­கொலை செய்து இரு­வரை கொல்ல முயற்­சித்­த­தாக குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அவர் மேலும் 60 நோயா­ளர்­க­ளுக்கு அந்த ஊசி மருந்தை மிகை­யாக ஏற்­றி­யி­ருந்த போதும், அவர்­க­ளது உயிரை அவர் ஒரு­வாறு காப்­பாற்­றி­யுள்ளார்.

மேற்­படி மருத்­து­வ­ம­னையில் இடம்­பெற்ற 100க்கு மேற்பட்ட சந்தேகத்துக்கி டமான மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல