பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தொலைக்காட்சியில் குழந்தைப் பிரசவம் தொடர்பான ஆவணப்பட நிகழ்ச்சியை இரகசியமாக கண்டுகளித்த 10 வயது சிறுமியொருவர், அந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி பிரசவ வலியால் துடித்த தனது தாய்க்கு குழந்தையை பிரசவிக்க உதவிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
எஸெக்ஸில் பிங்கிறிங்ஹோ எனும் இடத்தை சேர்ந்த திறின்ரி கல்லி என்ற மேற்படி சிறுமி, தனது படுக்கையிலிருந்த தொலைக்காட்சியில் தனது பெற்றோருக்கு தெரியாமல் 'வண் போர்ன் எவ்றி மினுட்' என்ற குழந்தை பிரசவ நிகழ்ச்சியைக் கண்டுகளித்துள்ளார்.
இந்நிலையில் அவரது தாயரான டீ கல்லிக்கு உரிய பிரசவ காலத்திற்கு இரு வாரங்கள் முன்பாக பிரசவ வலி ஏற்பட்டு பன்னீர் குடம் உடைந்துள்ளது.
இதனையடுத்து திறின்ரியின் தந்தை டெறி (34 வயது) மருத்துவமனைக்கு மனைவியைக் கொண்டு செல் வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தொலை பேசி மூலம் முயன்று கொண்டிருந்தவேளை திறின்ரி தனது தாயாருக்கு குழந்தையை பிரசவிக்க உதவியுள்ளார்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக