போலி விசாவை பயன்படுத்தி துருக்கியிலிருந்து தரைவழியூடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயற்சித்ததாக கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதான மேற்படி இளைஞன் தமிழ்-, சிங்கள புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி துருக்கிக்கு சென்றுள்ளார்.
துருக்கி விமான நிலையத்தில் நின்றிருந்த இளைஞன் மீது சந்தேகம்கொண்ட அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இளைஞனது விசாவை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது இளைஞனிடமிருந்த விசா போலியானது என்பது உறுதியாகியுள்ளது. அதனையடுத்தே குறித்த இளைஞனை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
சந்தேகநபர், இந்நாட்டில் இருக்கின்ற இலங்கை பிரஜை ஒருவருக்கு மூன்று இலட்சம் ரூபாவை கொடுத்து இத்தாலிக்கு செல்வதற்கான போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக வும் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதான மேற்படி இளைஞன் தமிழ்-, சிங்கள புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி துருக்கிக்கு சென்றுள்ளார்.
துருக்கி விமான நிலையத்தில் நின்றிருந்த இளைஞன் மீது சந்தேகம்கொண்ட அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இளைஞனது விசாவை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது இளைஞனிடமிருந்த விசா போலியானது என்பது உறுதியாகியுள்ளது. அதனையடுத்தே குறித்த இளைஞனை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
சந்தேகநபர், இந்நாட்டில் இருக்கின்ற இலங்கை பிரஜை ஒருவருக்கு மூன்று இலட்சம் ரூபாவை கொடுத்து இத்தாலிக்கு செல்வதற்கான போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக வும் கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக