ஞாயிறு, 8 மே, 2016

வித்தியா படுகொலை - கடந்தது ஒருவருடம் தொடர்கிறது விசாரணை

புங்­கு­டு­தீவு, வித்­தியா என்ற மாணவி கூட்டு வன்­பு­ணர்வில் படு­கொலை செய்யப் ­பட்டு ஒரு வரு­டத்தை அண்­மித்த நிலை­யி லும் விசா­ர­ணைகள் இன்­று­வரை தொடர்ந்த வண்­ணமே காணப்­ப­டு­கி­ன்றன.


அர­சியல்வாதி­க­ளி­னதும், மாற்று சக்­தி­க­ளி­னதும் துண்­டு­தல்­களால் மாத்­தி­ரமே போராட முயற்­சித்த எமது சமூகம் இந்தக் கொடூர படு­கொலைச் சம்ப­வத்தைக் கண்­டித்து இனம், மதம் பாராமல் நாட­ளா­விய ரீதியில் ஒன்று திரண்டு ஆர்ப்­பாட்­டங்­களையும் கண்­டன ஊர்­வ­லங்­களையும் முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

படு­கொலை அரங்­கேறி சில நாட்கள் கடந்த நிலையில் "வித்­தி­யா­விற்கு நீதி வழங்கு" எனக்­கோரி பல்­லா­யிரக் கணக்­கானோர் வீதியில் குதித்­தனர்.
இவ்­வாறு நாட்டின் பல்­வேறு பாகங்­க­ளிலும் உள்ள மக்கள் வித்­தி­யாவின் கொலைக்கு நீதி­கோ­ரியும் மீண்டும் அவ்­வாறு வன்­பு­ணர் வுக் கொலைகள் அரங்­கே­றாமல் தவிர்க்க நீதித்­துறை உச்­ச­பட்ச தண்­ட­னையை வித்­தி­ யாவின் படு­கொ­லை­யா­ளி­க­ளுக்கு வழங்­க வேண்டும் எனக்கோரி ஆர்ப்­பாட்­டங்களை முன்­னெ­டுத்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவி வித்­தியா?

புங்­கு­டு­தீவு ஒன்­பதாம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்த சிவ­லோ­க­நாதன் என்­ப­வரின் மகளே வித்­தி­யா­. வித்­தி­யா­விற்கு இரண்டு சகோ­த­ரர்கள்.
இவர் புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்தில் உயர்­தர பிரிவில் கல்வி கற்று வந்­துள்ளார். வித்­தி­யாவை யாழி­லுள்ள பாட­சா­லையில் சேர்ப்­ப­தற்கு தாய் விரும்­பி­ய­போதும் படிப்­பி லும் பண்­பிலும் சிறப்­பாக விளங்­கிய வித்­தி­யாவை குறித்த பாட­சாலைச் சமூகம் இழக்க விரும்­பா­ததால் அதி­பரின் வேண்­டு­கோ­ளு க்கு அமைய தொடர்ந்து அங்­கேயே உயர்­த­ரத்­தையும் கற்று வந்தார்.

வித்­தி­யாவின் எதிர்­கால இலட்­சி­யம் சிறந்த ஊட­க­விய­லாள­ராக உரு­வாகி மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வ­தாகும். இதற்­காக அவள் தன்னை பல்­து­றை­களிலும் வளர்த்துக் கொண்­டுள்ளாள்.எதிர்­கால இலட்­சிய நோக்­கத்­தோடு சமூ­கத்தில் மிளி­ர­வி­ருந்த வித்­தி­யாவை காமு­கர்கள் வேட்­டை­யாடி சிதைத்­தனர்.
வித்­தி­யா­வுக்கு நடந்­தது என்ன?

கடந்த ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி காலை 7.30 மணி­ய­ளவில் வழமை போலவே "அம்மா நான் பள்­ளிக்­கூடம் போட்­டு­வாறன்" என வித்­தியா தனது தாயிடம் கூறி­விட்டு தான் செல்­ல­மாக வளர்க்கும் நாயின் தலை யில் கைகளால் தட­வி­விட்டு வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டாள்.

காலையில் வீட்­டை­விட்டு சென்ற மகள் மாலை­யா­கியும் வீடு திரும்­பா­ததால் குடும்­பத்­தா­ரி­டையே பயம் பற்றிக் கொண்­டது. நாளி­கைகள் கடக்கக் கடக்க வித்­தி­யாவைத் தேடி தாயொரு பக்­கமும் தமையன் ஒரு பக்­க­மு­மாக தேட ஆரம்­பித்­தனர். எனினும் வித்­தியா அவர்­களின் கண்­களில் தென்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்து தாயும் தமை­யனும் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாட்டை பதியச் சென்­றி­ருந்­தனர்.

அங்­கி­ருந்த பொலி­ஸா­ரிடம் தனது மக­ளான வித்­தி­யாவை காண­வில்லை என கூற 'உங்கள் மகள் காத­ல­னோடு சென்­றி­ருப்பார்' என பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து ஏள­ன­மாக பதில் கிடைத்­தது.

பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து வீடு திரும்ப நேர­மா­னதால் மறுநாள் அதி­காலை மீண்டும் மகளை தேடு­வதில் தாய், தமையன் ஈடு­பட்­டனர். இவ்­வாறு தமையன் தேடிச்­செல்லும் போது புங்­கு­டு­தீவு ஆலடிச் சந்­தியில் இருந்து செல்லும் சிறு வீதி­யொன்றின் (கண்­ணகி அம்மன் கோவில்) பகு­திக்கு ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஆள் நட­மாற்றம் அற்ற பற்றைப் பகு­தியிலுள்ள பாழ­டைந்த வீட்டின் பின்­புறம் இருந்து சப்­பாத்து ஒன்றை வித்­தி­யா­வினால் செல்­ல­மாக வளர்க்­கப்­பட்ட நாய் எடுத்து வந்­துள்­ளது.

இதனை அவ­தா­னித்த வித்­தி­யாவின் தமையன் நாயைப் பின் தொடர்ந்து அப் பகு­தியை சென்று பார்த்­துள்ளார். இதன்­போது ஆடைகள் களை­யப்­பட்ட நிலையில் கைகள் இரண்டும் கழுத்துப் பட்­டியால் இழுத்து கட்­டப்­பட்டு கால்கள் இரண்டும் இடுப்பு பட்­டி யால் அருகில் இருந்த மரங்­க­ளோடு கட்­டப்­பட்டு வாய்க்குள் துணிகள் அடைக்­கப்­பட்ட நிலையில் வித்­தியா சட­ல­மாக காணப்­பட்­டுள்ளார்.
சந்­தேக நபர்கள் கைது

மாணவி வித்­தியா படு­கொலை என்ற செய்தி காட்­டுத்­ தீ போல் எங்கும் பரவ சட லம் இருக்­கும்­ இ­டத்­திற்கு விரைந்­தனர் பொ லிஸார். இதன்­போது தட­யங்­களை அழிக்கும் வகையில் மழையும் பெய்­து­கொண்­டி­ருந்தது.

பொலி­ஸாரின் தட­ய­வியல் நிபு­ணர்கள் சான்றுப் பொருட்­களை எடுத்­ததன்
பின்னர் வித்­தி­யாவின் சடலம் பிரேத பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டது.

சட­லத்தின் நிலை கண்டு வன்­பு­ணர்வு என ஊகித்துக் கொண்­ட ­பொ­லிஸார் காமு­கர்­களைக் கண்டு பிடிப்­ப­தற்கு தேடுதல் வேட்­டையில் ஈடு­பட்­டனர்.
அதற்­க­மைய சடலம் மீட்­கப்­பட்ட 14ஆம் திக­தி­யான அன்­றைய தினம் மாலை வித்­தி­ யாவின் தாயார் வழங்­கிய தக­வலின் பேரில் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். குறித்த நப­ரிடம் பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களைத் தொடர்ந்து மேலும் இருவர் என மொத்­த­மாக மூவர் குறித்த தினம் கைது செய்­யப்­பட்­டனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட மூவரும் சகோ­த­ரர்­க­ளாக இருந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. பொலிஸார் குறித்த மூவ­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டை யில் சடலம் மீட்­கப்­பட்டு ௩ நாட்­கள் கடந்த நிலையில் மேலும் ஐவர் கைது செய்­யப்­பட்­ டனர்.

இவ்­வாறு பொலிஸார் தேடுதல் வேட்­டையை மேற்­கொண்­டி­ருக்க, அப்­ப­குதி மக்கள் ஒரு நபர் மீது சந்­தேகம் கொண்டு அவரை கட்டி வைத்துத் தாக்­கி­யி­ருந்­தனர். அவ்­வாறு கட்டி வைத்துத் தாக்­கப்­பட்டவர் சுவிஸ் குமார் என அழைக்­கப்­படும் ராஜ­சிங்கம் சசிக்­குமார் என்­பவர் ஆவார். இவர்
பின்­னாளில் வித்­தியா படு­கொலை வழக் கின் ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ராக பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

படு­கொ­லையால் ஏற்­பட்ட அதிர்­வ­லைகள்

வித்­தியா படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப வம் குடா­நாடு முழு­வதும் பர­வி­யது. இந்­நி­லையில் யாரு­டைய தூண்­டு­தல்­களும் இன்றி சுய­மாக ஒன்று திரண்ட மக்கள் கண்ட ஆர்ப்­பாட்­டத்தை யாழ். நகரில் முன்­னெ­டுத்­தனர். இதில் கலந்து கொள்ள யாழ். மாவட்­டத்தில் அனைத்துப் பகு­தி­யி­லி­ருந்தும் மக்கள் திரண்டு­ வந்­தனர்.

கண்­ட­னத்தில் ஈடு­பட்­ட­வரின் கோஷங்­க­ளாக, படு­கொ­லை­யா­ளி­களை எம் முன்னே நிறுத்து நாம் அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கு­கின்றோம், விரைவில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மர­ண­தண்­டனை வழங்­குங்கள், மீண்டும் இத்­த­கைய குற்­றங்கள் அரங்­கே­று­வது, தடுத்து நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என காணப்­பட்­டி­ருந்­தன. இவ்­வாறு நீதி­கோ­ரிய ஆர்ப்­பாட்­டத்தைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்­க­ளிலும் கண்­டன ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இன, மத, மொழி பாராமல் நாட­ளா­விய ரீதியில் பல இடங்­களில் ஒன்று திரண்ட மக்கள் வித்­தியா என்ற மாண­விக்கு நீதி வழங்­குங்கள் என ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இதே­வேளை, யாழ். நகரில் இடம்­பெற்ற கண்­டன ஆர்ப்­பாட்­டத்தின் போது யாழ். நீதி­மன்ற கட்­டட தொகுதி தாக்­கப்­பட்­ட­துடன் பொலிஸார் மீதும் இளைஞர் குழு ஒன்­றி னால் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இத் தாக்­கு­தலில் 4 பொலிஸார் காய­ம­டைந்­தி­ருந்­த­துடன், பல இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான பொருட்கள் சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில், குறித்த வன்­முறைச் சம்­பவம் தொடர்பில் 127 பேர் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்டு பல மாதங்­களின் பின்னர் கட்டம் கட்­ட­மாக விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

வித்­தியா படு­கொ­லையில் அதிர்ச்சி நாட­ளா­விய ரீதியில் பேசப்­பட, நாட்டின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழிற்கு விஜயம் மேற்­கொண்டு வித்­தி­யாவின் குடு ம்­பத்­தாரை சந்­தித்து அனு­தாபம் தெரிவித் ­தி­ருந்தார். இதன்­போது குற்­ற­வா­ளி­க­ளுக்கு விஷேட நீதி­மன்றம் அமைத்து அத­னூ­டாக தீர்ப்பு வழங்­கப்­படும் எனவும் ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். இதன் தொடர்ச்­சி­யாக நாட்டின் பிர­தம நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர் ஆகி­யோரும் யாழ்ப்­பா­ணத்­திற்கு நேரடி விஜயம் மேற்­கொண்டு நிலை­மைகளை அவ­தா­னித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்கது.

தொடரும் வழக்கு விசா­ர­ணையும் அதன் திருப்­பங்­களும்

வித்­தியா படு­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் பொறுப்பு ஊர்­கா­வற்­துறை பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரிடம் பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. இத­னை­ய­டுத்து, இவ் வழக்கு தொடர்­பான விசா­ர­ணை­களை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.
மேலும் படு­கொலை தொடர்பில் ஆதாரங் ­களை சேக­ரிக்கும் பொருட்டு கொலை நடந்த இடத்தில் இருந்து மீட்­கப்­பட்ட சான் றுப் பொருட்கள் விசா­ர­ணை­களை மேற் கொள்­வ­தற்­காக ஜின்ரெக் நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்த நிலையில் வழக்கில் சில திருப்­பங்­களும் ஏற்­பட்­டன.

இதன்­படி குறித்த படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டை­யவர் என்ற குற்­றச்­சாட்டில் பத்­தா­வது சந்­தேக நப­ராக கடந்த நவம்பர் மாத­ம­ளவில் யாழ்ப்­பாணம் சுழி­பு­ரத்தை சேர்ந்த ராஜ்­குமார் என்­பவர் கைது செய்­யப்­பட்டார். இவர் வித்­தி­யாவின் வீட்­டிற்கு அண்­மை­யி­லுள்ள குள­மொன்று திருத்தும் பணியில் ஈடு­பட்­டி­ருந்­த­தா­கவும் இவ­ரிடம் வித்­தி­யாவின் புகைப்­ப­டங்கள் மற்றும் சந்­தேக நபர்கள் தொடர்­பான சில தக­வல்கள் இருந்­தன என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில், கைது செய்­யப்­பட்ட பத்து சந்­தேக நபர்கள் தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் ஊர்­கா­வல்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி லெனின்­குமார் தலை­மையில் இடம்­பெற்று வந்த நிலையில் அவரின் இட­மாற்­றத்தின் கார­ண­மாக இவ் வருடம் ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து இவ் வழக்­கா­னது நீதிவான் வை.எம்.எம்.றியால் தலை­மையில் இடம்­பெற்று வரு­கின்­றது.

குறித்த வழக்கு விசா­ரணை நீண்டு செல்­வதால் நீதி­மன்ற செயற்­பாட்டில் மக்கள் அவ­நம்­பிக்கை கொண்­டுள்­ளதால் அதனை தவிர்க்கும் வகையில் குறித்த வழக்கு தொடர்­பான ஆரம்ப கட்ட விசா­ர­ணை அறிக்­கையை மன்றில் சமர்­ப்பிக்­கு­மாறு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­விக்கு நீதிவான் உத்­த­ரவிட்­டி­ருந்தார்.

இவ் உத்­த­ர­வை­ய­டுத்து குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் மன்றில் கடந்த மூன்­றாம் ­மாதம் நான்காம் திக­தி­யன்று முதற்­கட்ட விசா­ர­ணை அறிக்­கை­யொன்றை சமர்­பித்­தி­ருந்­தனர். அந்த அறிக்­கையில் வித்­தி­யாவின் படு­கொ­லைக்கு ஒரு தலைக் காதலும் பழி­வாங்க வேண்­டு­மென்ற எண்­ண­முமே காரணம் எனவும் இப்படு­கொலைத் திட்­டத்­திற்கு பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ரான சசிக்­குமார் (சுவிஸ்­குமார்) விளங்­கி­யி­ருந்­த­துடன், அவருக்கு உடந்­தை­யாக ஆறு சந்­தேக நபர்கள் நேர­டி­யாக சம்பந்­தப்­பட்­டுள்­ளனர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், இச் சம்­ப­வத்தை நேரில் பார்த்த ஒருவர் இருப்­ப­தா­கவும் அவரே இச் செயலை செய்­த­வர்­க­ளுக்கு போதைப் பொருட்­களை பெற்­றுக்­கொ­டுத்­தவர் எனவும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் நீதி­மன்ற ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை அறிக்­கையின் போது மன்றில் தெரி­வித்­தனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட பதி­னொ­ரா­வது நபர் உட்­பட மேலும் ஒரு நபர் தொடர்பு பட்­டுள்ளார் என்ற குற்­றச்­சாட்டில் மொத்­த­மாக பன்­னி­ரண்டு சந்­தேக நபர்கள் குறித்த வழக்கில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை, குறித்த வழக்கு விசா­ர­ணையில் சந்­தேக நபர்­களில் ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ரான சசிக்­குமார் எவ்­வாறு தப்­பித்து சென்றார் என்­பது தொடர்பில் விசா­ர­ணை அறிக்­கை­யினை சமர்­ப்பிக்­கு­மாறு நீதிவான் குற்றப் புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், குற்­றப்­பு­ல­னாய்வு அதி­காரி நீதிவான் குறிப்­பி­டாத ஒரு­வ­ரது பெயரை குறிப்­பிட்டு அவரை நீதிவான் கைது செய்ய உத்­த­விட்­ட­தாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் கூறி­யுள்ளார். இதனால் மறு வழக்கு தவ­ணையின் போது கூறித்த குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரியை நீதிவான் மிகக் கடு­மை­யாக எச்­ச­ரித்­த­துடன், நீதி­மன்ற விட­யங்கள் தொடர்பில் கவ­ன­மாக செயற்­பட வேண்­டிய அவ­சி­யத்­தையும் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தார்.

படு­கொலை சம்­பவம் தொடர்­பாக சமர்­பிக்­கப்­ப­டாத அறிக்கைள்

கொலை சம்­பவம் தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் ஒரு­வ­ருட கால­மாக நீதி­மன் றில் இடம்­பெற்று வரு­கின்ற போதும் வழக்­ கிற்கு ஆதா­ர­மாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரி வால் சேக­ரிக்­கப்­பட்ட தட­யங்கள் தொடர்­ பான அறிக்­கைகள் எதுவும் மன்றில் சமர்­பிக் ­கப்­ப­ட­வில்லை.

குறிப்­பாக, வித்­தி­யாவின் சடலம் இருந்த இடத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்ட இரத்த கறையு­ட­னான உள்­ளாடை தொடர்­பான விசா­ர­ணை அறிக்கை, ஜின்ரெக் நிறு­வ­னத்­ திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட வித்­தி­யாவின் கண்ணில் இருந்து பெறப்­பட்ட விந்­தணு தொடர்­பான அறிக்கை, சட்ட வைத்­திய அதி­காரியி­னு­டைய உடற்­கூட்டு பரி­சோதனை அறிக்கை, சடலம் மீட்­கப்­பட்ட இடத்­திலி­ ருந்து பெறப்­பட்ட ஏனைய தட­யங்கள் தொட ர்­பான அறிக்கை, வித்­தி­யாவின் தாயிடம் பெறப்­பட்ட இரத்த மாதிரி தொடர்­பான அறி க்கை போன்ற அறிக்­கைகள் எதுவும் மன்றில் சமர்­ப்பிக்­கப்­பட்­டி­ருக்­க ­வில்லை.

இந்­நி­லையில் வித்­தி­யாவின் மர­பணு தொடர்­பாக விசா­ர­ணை மேற்­கொள்ளும் ஜின்ரெக் நிறு­வன அதி­கா­ரியை நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்­த­ர­விட்­டி­ருந்­ததற்­க­மைய அந் நிறு­வன அதி­காரி, மர­பணு அறிக்கை தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­கான பண த்தை குற்றப் புல­னாய்வு பிரி­வினர் தமக்கு தர­வில்­லை­யெ­னவும் அதன் கார­ண­மா­கவே அறிக்கை சமர்­பிப்­பதில் தாமதம் ஏற்­ப­டு­வ­தா­கவும் கடிதம் மூலம் நீதி­வா­னுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்தார். அத்­துடன் பணத்தை செலுத்­து­கின்ற போது மர­பணு அறிக்கை எதிர்­வரும் வழக்கு தவ­ணையில் மன்றில் சமர்­ப்பிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என கடி­தத்­தி­னூ­டாக நீதி­ப­திக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இதே­வேளை, குறித்த மாண­வியின் படு­கொலை தொடர்பில் சந்­தே­க­ந­பர்கள் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் ஒரு­வ­ருட கால­மாக நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் அவர்­களை நீதிவான் நீதி­மன்றில் தடுத்து வைத்­தி­ருப்­ப­தற்கு மேல் நீதி­மன்றின் அனு­மதி பெறப்­பட வேண்­டி­யுள்­ளது.

இது தொடர்­பாக சட்­டமா அதிபர் மேல் நீதி­மன்றில் விஷேட மனு ஒன்றை நீதி­பதி இளஞ்­செ­ழியன் முன்­னி­லையில் தாக்கல் செய்­தி­ருந்தார். இந்­நி­லையில், இக்காலத்தை நீடிப்­பது தொடர்­பாக விசா­ர­ணை­யினை மேற் ­கொள்­வ­தற்­காக சந்­தேக நபர்­களில் முதல் ஒன்­பது பேரை எதிர்­வரும் புதன் கிழ­மை­யன்று யாழ். மேல் நீதி­மன்றில் ஆஜர் படுத்துமாறு அநு­ரா­த­புரம் சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­க­ருக்கு நீதி­பதி பணித்­துள்ளார். இதே­வேளை, குறித்த சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்டு ஓராண்டு முடி­வுறும் தறு­வாயில் பிணைச் சட்­டத்தின் 17ஆவது உறுப்­பு­ரையின் பிர­காரம் விளக்­க­ம­றியல் காலத்தை மேலும் நீடிக்கும் அதி­காரம் மேல் நீதி­மன்­றத்­துக்கே வழங்­கப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அதி­க­ரித்து செல்­கி­றது பாலியல் வன்­பு­ணர்­வுகள்

வித்­தியா படு­கொலை அரங்­கே­றி­யதன் விளைவு நாட்டில் பாரிய அதிர்­வ­லையை மக்கள் மனதில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்­நி­லையில், அந்த அதிர்­வ­லையின் வடுக்கள் காய­முன்னர் மீண்டும் பல வன்­பு­ணர்வுச் சம்­ப­வங்கள் நாட்டில் இடம்­பெற்­றன. குறிப்­பாக தென்­ப­கு­தியைச் சேர்ந்த சேயா என்ற சிறுமி ஒருவர் காமு­கனால் கடத்திச் செல்­லப்­பட்டு, பாலியல் வன்­பு­ணர்வின் பின்னர் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தாள். தொடர்­சி­யாக இந்த வருட ஆரம்­பத்தில் வவு­னி­யாவைச் சேர்ந்த 13 வய­தான ஹரிஸ்­ணவி என்ற மாணவி வீட்டில் இருக்­கும்­போது மர்­மான முறையில் பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில், இவ் இரு சம்­ப­வங்­களும் வித்­தி­யாவின் படு­கொ­லைக்கு பின்னர் இடம்­பெற்ற பாரிய சம்­ப­வங்­க­ளாக காணப்­பட்­ட­துடன் இதில் சேயா கொலை தொடர்­பான குற்­ற­வா­ளிக்கு தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருந்­த­போதும் வித்­தியா, ஹரிஸ்­ணவி ஆகிய மாண­வி­களின் படு­கொ­லைக்­கான விசா­ர­ணைகள் இன்று வரை தொடர்ந்த வண்­ண­மே­யுள்­ளன.

இதே­வேளை, பெண்கள், சிறு­வர்­களுக் எதி­ரான பாலியல் வன்­பு­ணர்வு சம்­ப­வங் கள் நாட்டில் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்து செல்­கின்­றன. நாட­ளா­விய ரீதியில் இடம்­பெற்ற பாலியல் வன்­பு­ணர்வு சம்­ப­வங்கள் தொடர்பில் வெளி­யான தக­வ­லுக்­க­மைய கடந்த 2007ஆம் ஆண்டு ஆயி­ரத்து 397 சம்­ப­வங்­களும், 2008 ஆம் ஆண்டு ஆயி­ரத்து 582 சம்­ப­வங்­களும், 2009 ஆம் ஆண்டு ஆயி­ரத்து 624 சம்­ப­வங்­களும், 2010 ஆம் ஆண்டு ஆயி­ரத்து 854 சம்­ப­வங்­களும், 2011ஆம் ஆண்டு ஆயி­ரத்து 871 சம்­ப­வங்­களும், 2012 ஆம் ஆண்டு ஆயி­ரத்து 463 சம்­ப­வங்­களும் 2014ஆம் ஆண்டு ௨ ஆயி­ரத்து 8 பாலியல் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

இதே போன்று 2015ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி வரை­யான காலப் பகு­தியில் ஆயி­ரத்து 854 பாலியல் வன்­பு­ணர்வு சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.
இவற்றில் பெரும்­பா­லான சம்­ப­வங்கள் 18 வய­துக்கு குறைந்­த­வர்கள் மீதே மேற்­கொள் ளப்­பட்­டுள்­ள­துடன் ஒவ்­வொரு 90 நிமி­டத் திற்கும் ஒருவர் என்ற வீதத்தில் பாலியல் வன்­முறைச் சம்­பவம் இடம்­பெ­று­வ­தாக புள்­ளி­ வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன. அத்­துடன் இவற்றில் பெரும்­பா­லா­னவை உறவு முறை சார்ந்­த­வர்­க­ளா­லேயே இடம்­பெ­று­வ­தா­கவும் புள்­ளி­வி­பர தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

2015 ஆம் ஆண்டு பதி­வா­கி­யுள்ள ஆயி­ர த்து 854 சம்­ப­வங்­களில் ஆயி­ரத்து 501 சம்­ப­ வங்கள் சிறு­மிகள் மீதான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளாகும். இதேவேளை கடந்த மாதம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ்.மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா. யாழ். மாவட்டம் உட்பட வடக்கில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் வீதம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

1995ஆம் ஆண்டு தண்டனை சட்டக் கோவையின் திருத்தத்தின் பிரகாரம் 16 வய தின் கீழான சிறுமி ஒருவரை அவரது விருப் பத்துடனேயே துஷ்பிரயோகம் செய்வதும் பாலியல் பலாத்காரமாகவே கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக் கது.

இதேவேளை, சிறுவர் பெண்களுக்கு எதி ரான சம்பவங்களை கட்டுபடுத்துவது தொட ர்பில் பல விடயங்களை பெண்கள் சிறுவர் அமைப்புகளும் பொலிஸாரும் பல்வேறு வழி

முறைகளை தெரிவித்து வருகின்றன.பிள்ளைகள் ஒரு வயது மட்டத்தை அடையும் போது அவர்களுக்கு பாலியல் கல்வியை வழங்குவதனூடாகவும் தொடுகைகள் தொட ர்பான துஷ்பிரயோகங்கள் பற்றி தெளிவான விளக்கங்களை அளிப்பதன் ஊடாக இவற்றை தவிர்க்கலாம் என அவர்கள் குறிப் பிடுகின்றனர்.

மேலும், குறித்த விட­யங்கள் தொடர்­பாக பாட­சாலை மட்­டங்­களில் மாண­வர்­க­ளி ­டையே விழிப்­பு­ணர்வு செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­த­னூ­டா­கவும் இவற்றை கட்­டு­ப்ப­டுத்­தலாம் எனவும் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். இத்­த­கைய கருத்­துக்கள் மாண­வர்­கள் ­மத்­தியில் விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பொருத்­த­மா­ன­தாக அமைந்­தாலும் காமு­கர்­களின் கைப்­பி­டிக்குள் அகப்­பட்டு மீண்­டெழ­ மு­டி­யாது சிதைக்­கப்­படும் சிறு­மி­களின் படு­கொலைகளை கட்­டுப்­ப­டுத்­து­வது காமு­கர்­க­ளுக்கு வழங்­கப்­படும் அதி­உச்ச தண்­ட­னை கள் மூல­மே­யாகும்.

அத்­துடன், மீண்டும் இந்த வன்­செ­யல்கள் நாட்டில் அரங்­கே­றாத வகையில் வழக்­குகள் விரைவில் முடி­வுக்குக் கொண்­டு­வரப்­பட்டு காமு­கர்கள் சிறையில் அடைக்கப்பட்டு தண்­ ட­னைக்குள் உள்­வாங்­கப்ப­ட ­வேண்டும். அதற்­கே­ற்­றாற்போல் நாட்டின் சட்டங்களை மாற்றியமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பி னர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரி.விரூஷன்

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல