ஞாயிறு, 8 மே, 2016

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்

ஒவ்­வொரு பெண்ணும் திரு­ம­ண­மாகி ஒரு குழந்­தைக்குத் தாயாகும் போது அக்­கு­ழந்­தையைப் பற்­றியும் அதன் எதிர்­காலம் பற்­றியும் பல்­வேறு கற்­ப­னை­க­ளையும் ஆசை­க­ளையும் வளர்த்துக் கொள்­கிறாள். அந்­தக்­கு­ழந்தை ஒரு ஆரோக்­கி­ய­சா­லி­யா­கவும் புத்­தி­சா­லி­யா­கவும் வள­ரு­வ­தையே எந்­த­வொரு தாயும் விரும்­பு­கிறாள்.



எந்தக் குழந்­தைக்கும் முதல் உணவு தாய்ப்பால் ஆகும். இது குழந்­தையின் வளர்ச்­சிக்­குத் ­தே­வை­யான சகல போச­ணைப் பொருட்­க­ளையும் சரி­யான அளவில் வழங்கும்.

தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்கும் குழந்­தைகள் நன்கு வளர்­வார்கள்.

முதல் பால்

குழந்தை பிறந்து ஒரு மணித்­தி­யா­லத்­துக்குள் தாய்ப்பால் கொடுக்­கத் ­தொ­டங்­கலாம். பிர­ச­வத்­திற்குப் பின் தொடக்க நாட்கள் சில­வற்­றிற்கு சுரக்கும் பால் முதல் பால் ஆகும். இலே­சான மஞ்சள் நிற ஒட்டும் தன்­மை­யுள்ள திர­வ­மாகும். இது சகல பிள்­ளை­க­ளுக்கும் கிடைக்க வேண்­டிய உண­வாகும்.

* பிள்­ளை­க­ளுக்­குத் ­தே­வை­யான நோய் எதிர்ப்­புச்­சக்­தியை வழங்கி நோயி­லி­ருந்து பாது­காப்புப் பெற உத­வு­கி­றது.

* பிள்­ளையின் உடல் உறுப்­புக்­களின் விருத்­திக்கு உத­வு­கின்­றது.

* பிள்ளை மஞ்சள் நிற­மா­வ­தைத்­த­டுக்க உத­வு­கின்­றது.

* ஒவ்­வாமை அஜீ­ரணம் என்­ப­ன­வற்­றி­லி­ருந்து பா­து­காக்கிறது.

* கண் நோய்­க­ளி­லி­ருந்து ­பா­து­காக்கி­றது.

தாய்ப்பால் கொடுக்கும் போது கவ­னிக்க வேண்­டி­யவை

பிள்ளை பால் உறிஞ்சும் போது பால் சுரப்பு ஆரம்­ப­மா­கின்­றது. பால் வெளி­யேறும் அள­வுக்­கேற்ப பால் சுரப்பும் இருக்கும். ஆகையால் அடிக்­கடி குழந்­தைக்­குப் பால் கொடுக்­கும்­போது பால் சுரப்பு அதி­க­ரிக்கும். இர­விலும் பால் கொடுக்க வேண்டும். பால் கொடுக்­கும்­போது வச­தி­யாக அமர்ந்து ஒரே முலையில் பால் கொடுப்­பது சிறந்­தது.

அடுத்த முறை பால் கொடுக்­கும்­போது மற்­றைய முலையில் பால் கொடுக்க தொடங்க வேண்டும்.

தொடக்­கத்தில் முலை­யி­லி­ருந்து வெளி­யேறும் பாலில் நீர்த்­தன்மை அதி­க­முள்­ளதால் பிள்­ளையின் தாகம் தீர்க்­கப்­படும். பின்­னைய பாலில் கொழுப்பு அதி­க­முள்­ளதால் பிள்ளை நன்கு வளர அது உத­வு­கின்­றது.
(சரி­யான முறையில் பிள்­ளைக்கு பால் கிடைப்­பதை அது விழுங்கும் முறை­யிலும் சத்­தத்­திலும் கன்­னங்கள் உப்­பு­வதாலும் அறிந்து கொள்­ளலாம்)

* போது­மான அளவு பால் கிடைக்­கும்­போது பிள்­ளைகள் நாளொன்­றுக்கு 6--7 தட­வை­க­ளுக்கு மேல் சிறுநீர் கழிப்பர். நாளொன்­றிற்கு சிறு நீர் கழிக்கும் தட­வை­களை கணக்­கி­டலாம். இதன் மூலம் குழந்­தைக்கு போது­மான தாய்ப்பால் இருப்­பதை உறுதி செய்­யலாம்.

* தாய்ப்பால் கொடுக்க முன்னர் தாய் சூடான பான­மொன்று அருந்­துதல் சிறந்­தது. வேலைக்குச் செல்லும் தாய்மார் அல்­லது பிள்­ளையை விட்டு வெளியில் செல்ல வேண்டி ஏற்­ப­டும்­போது முலை­யி­லி­ருந்து பாலை எடுத்து அதை கரண்­டி­யிலோ அல்­லது கோப்­பை­யிலோ பிள்­ளைக்கு பருக்­கலாம். எனவே தாய்மார் பாலை கறக்கும் முறை, பருக்கும் முறை மற்றும் அதை பாத்­தி­ரத்தில் இட்டு குளிர்­சா­த­னப்­பெட்­டியில் சேமிக்கும் முறை என்­ப­வற்றை அறிந்­தி­ருத்தல் அவ­சியம்.

ஒரு பக்க முலை வெறு­மை­யாகும் வரை அதி­லி­ருந்து பாலை எடுத்த பின் மற்­றைய முலை­யி­லி­ருந்து பாலை எடுக்­கவும். அறை வெப்ப நிலையில் 6 மணித்­தி­யா­லமும் குளிர்­சா­த­னப்­பெட்­டியின் கீழ் தட்டில் 24 மணித்­தி­யா­லமும் பால் பழு­த­டை­யாது பாது­காக்­கலாம்.

தாய் வேலைக்­குப்­போன பின் வேலை ஸ்தானத்தில் 3 மணித்­தி­யா­லத்­திற்கு ஒரு முறை முலை­யி­லி­ருந்து பாலை வெளியகற்­று­வதன் மூலம் முலையில் பால் இறுக்­க­ம­டை­வ­தைத்­த­விர்ப்­ப­துடன் பால் சுரப்­பையும் தொடர்ச்­சி­யாகப் பேணலாம்.

பிள்­ளைக்­குப்பால் கொடுக்கும் முறை

பால் குடித்த பின் பிள்­ளைக்கு வாயு வெளி­யேற்றல் மற்றும் நித்­தி­ரை­யாக்கும் முறை என்­ப­ன­வற்றை அதற்­கென சிறப்­புப்­ப­யிற்சி பெற்ற தாதி­ய­ரிடம் உங்கள் பிர­சவம் நடை­பெற்ற பின் கேட்­டுத்­தெ­ரிந்து கொள்ள வேண்டும்.

* குழந்தை பிறந்து ஆறு மாதம் முடி­யும்­வரை தனித்­தாய்ப்பால் கொடுப்­பது சிறந்­தது. ஆனால் குழந்­தைக்கு தேவை­யான அளவு பால் கிடைக்­காதவிடத்து தற்­போது வைத்­திய ஆலோ­ச­னை­யுடன் ஏனைய முறை­களில் (போத்தல்) பாலூட்டல் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றது.குழந்­தைக்குத் தேவைப்­படும் ஒவ்­வொரு முறையும் பால் கொடுப்­பது சிறந்­தது. குழந்­தையின் பசியை சைகை மூலம் அறிந்து அது அழும்­வரை காத்­தி­ருக்­காமல் பால் கொடுப்­பது சிறந்­தது.
தாய்ப்பால் கொடுப்­பதால் தாய்க்கு ஏற்­படும் நன்­மைகள்

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்­க­ளுக்கு மார்­ப­கப்­புற்று நோய் சூல­கப்­புற்று நோய் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் கு­றையும்.

* பிர­ச­வத்­திற்கு பின் தாயின் உடல் நிறை குறை­வ­டைதல்

* தாய்க்கும் பிள்ளைக்குமான ஒட்டுறவு அதிகரிக்கும் தாய்க்கு உளரீதியான ஆறுதல் கிடைக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல