ஞாயிறு, 8 மே, 2016

பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி இராணுவதினரின் பிடியில் உயிருடன் அகப்பட்டதாக ஒரு காணொளி வெளியீடு!! (காணொளி)

கடைசிக்கட்ட போரில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியும் (??), அவரின் மெய் பாதுகாவலர்களையும் இலங்கை இராணுவதினர் உயிருடன் பிடித்து வைத்திருக்கும் புதிய வீடியோ வெளிவந்துள்ளது.



சாள்ஸ் அன்ரனியின் மெய் பாதுகாவலர்கள் புலிகளின் சீருடையிலும், பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி சரத்துடன் காணப்படுகிறார்.



கடைசிக்கட்ட போரில் புலிகளின் முக்கியஸ்தர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக பொதுமக்களோடு பொதுமக்களாக சரத்துடன் நின்றதாக நாம் ஏற்கனவே அறிந்ததே.



கடைசிக் கட்டப்போரில் காயமடைந்த நிலையில் இராணுவத்தினர்களின் பிடியில் இவர்கள் சிக்கியுள்ளாாகள் போன்றே தெரிகிறது. இவர்கள் அனைவரும் பின்பு இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம்??

இதுவரை வெளிவந்த காணொளிகளில், இலங்கை இராணுவத்தினர் புலிகளை சீருடையுடன் பிடித்து வைத்திருக்கும் காட்சிகள் எதுவும் காண்பிக்கப்படவில்லை.

இக்காணொளியில் முதன்முறையாக காயப்பட்ட புலிகள் சீருடையுடன் காணப்படுகிறார்கள். அத்தோடு.., சாள்ஸ் அன்ரனியின் உருவத்தை ஒத்த உருவம் கிடக்கும் காட்சிகள் பிரத்தியோகமாக எடுத்துக்காட்டப்படுகின்றன என்பதும், புலி முக்கியஸ்தவர்கள் மட்டுமே கடைசிக்கட்டபோரில் மெய்பாதுகாப்பாளர்களுடன் வலம்வந்திருப்பார்கள் என்பதும் இங்கு குறிப்பாக கவனிக்கதக்கதாகும்.

(இக்காணொளி சம்பந்தமாக உறுதியான தகவல்கள் இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை )


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல