வியாழன், 28 ஜனவரி, 2010

நெட்டில் அரட்டை

இன்றைய செய்தித்தாள்களில் பல மோசடிகள், குறிப்பாக பாலியல் மோசடிகள் குறித்துப் படிக்கையில் பலர் இன்டர்நெட் சாட் ரூமில் தொடங்கிய பழக்கமே குற்ற வலையில் விழ தொடக்கமாயிருந்தது என வாக்குமூலம் கொடுத்திருப்பதைப் படித்திருக்கலாம். இன்டர்நெட்டில் சாட் ரூம் வழியே அரட்டை அடிப்பதைப் பல பள்ளி சிறுவர்களும் கல்லூரி மாணவர்களும் ஒரு போதையான பழக்கம் போல கொண்டுள்ளனர். தாமாகச் சென்று விழுந்தவர்கள் சிலர்; ஆனால் பலரும் குறிப்பிட்ட சில கிரிமினல்களின் வலையில் விழுந்தவர்களாகவே இருப்பார்கள். காரணம், இவர்கள் சாட் அறையில் பாதுகாப்பு வழிகளைக் கடைப் பிடிக்காதவர்களாக இருந்திருப்பார்கள். இந்த வழிகள் என்னவென்று பார்க்கலாம்.

1.இணையத்தில் பல அபாயகரமான பேர்வழிகள் இருப்பார்கள். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். எனவே எந்த சாட் அறையிலும் உங்கள் உண்மையான பெயர், பெயர் அடங்கிய இமெயில் முகவரி, போன் எண், முகவரி போன்றவற்றைத் தரக் கூடாது.

2. எந்த நிலையிலும் உங்களுடைய அன்றாட வாழ்க்கை முறையினைக் கூற வேண்டாம். இது கிரிமினல்களுக்கு உங்களை வலை விரித்துப் பிடிக்க நேரத்தைத் தந்துவிடும்.

3. கம்ப்யூட்டர் வழி பழக்கமாகும் நபர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்கவும். உங்களுடைய நிஜ வாழ்வும் இன்டர்நெட் வாழ்வும் வெவ்வேறு. எனவே தவிர்ப்பது நல்லது. இல்லை சந்திப்பது நல்லதுதான் என எண்ணினால் பலர் இருக்கும் இடத்தில் சந்திக்கவும். தனியே சந்திப்பதோ அல்லது இதுவரை செல்லாத தனி இடத்தில் சந்திப்பதோ கூடவே கூடாது.

4. அரட்டை அரங்கங்களில் செல்கையில் மாடரேட்டர் என பொதுவான ஒரு மானிட்டர் இருக்கும் அறையில் செல்லவும். இதனால் ஒருவர் மற்றொருவருக்கு விரிக்கும் வலை தெரிந்துவிடும். மேலும் உங்களிடமிருந்து தகவல்களைப் பெற்று அவர் சென்றுவிட முடியாது.

5. அரட்டை அடிக்கையில் எதிர் நபரிடமிருந்து ஏதேனும் இணைய தள முகவரி கிடைத்தால் அதனைக் கிளிக் செய்து திறக்க வேண்டாம். அதில் நிச்சயமாய் வைரஸ் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. 6. எந்த நிலையிலும் உங்கள் போட்டோவினை அரட்டையில் எதிரில் உள்ளவருக்கு அனுப்ப வேண்டாம். உங்களை அவர் அறிந்து கொள்ளும் வழி இருப்பதுடன் அதனை அவர் தவறான வழிகளில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

இன்டர்நெட் வழி சென்று அரட்டை அறைகளில் மற்றவருடன் பேசுவது நல்ல மகிழ்ச்சியான அனுபவத்தினை தரலாம். ஆனால் இதனை உங்களுக்கு மிகத் தெரிந்த நண்பர், உறவினர், உடன் பிறந்தவர் மற்றும் உடன் பணியாற்றுபவர்களுடன் வைத்துக் கொள்ளுங்களேன். புதிய நண்பர்களை அளவில் தூரத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொன்னவை அனைவருக்கும் பொருந்தாது என்றாலும் ஆபத்தை தவிர்ப்பதற்கான வழிகளைத் தருகின்றன என்பது உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல