சனி, 20 மார்ச், 2010

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

கையடக்க தொலைபேசி மூலம் பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய வசனங்களைப் பரிமாறிக் கொண்டமைக்காக இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் 3 மாத சிறைத்தண்டனை விதி த்து துபாய் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
துபாயிலுள்ள எமிரேட்ஸ் விமான சேவை உத்தியோகத்தர்களான மேற்படி ஆணினதும் (47 வயது) பெண்ணினதும் (42 வயது) பெயர்கள் சட்டக் காரணங்களுக்காக வெளியிடப்பட வில்லை.

இந்த பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய வசனங்கள், திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பை பேண மேற்படி ஜோடி திட்டமிட்டிருப்பதை அடையாளப்படுத்துவதாக உள்ளதென துபாய் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

துபாயில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பு சட்ட விரோதமானதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல