சனி, 20 மார்ச், 2010

துணிச்சலான யாழ். மாணவி தனன்சிகாவுக்கு தங்க விருது

தேசிய வீர மாணவர்களுக்கான விருது நிகழ்வு நேற்று கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.நிகழ்வில் மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சின்னராசா தனன்சிகா என்ற தமிழ் மாணவிக்குத் தங்க விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

தனது உயிரை துச்சமென மதித்து உயிராபத்தை எதிர்நோக்கிய மாணவர்களுக்குத் தக்க சமயத்தில் உதவிபுரிந்த மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேசிய வீர மாணவர்களாக கௌரவிக்கப்பட்டு
வருகின்றனர். உக்கிரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், செல்தாக்குதல்களுக்கு மத்தியில், பதுங்கு குழிக்குள் சிக்கிக் கொண்ட (11 வயது) மாணவரை பேராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காகவும், மேலும் சிலரை உயிராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காகவும் இந்த விருது
மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல