வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?

காற்றுக் குழாயை திறந்து சுவாசம் சீராக இருக்கிறதா என்று பார்க்கலாம்.
சுவாச மீட்பும் மார்பை அழுத்தம் செயலையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
அவர் சீராக சுவாசித்துக் கொண்டிருந்தால் குணமடைவதற்குத் தோதான நிலையில் அவரைச் சாய்த்துப் படுக்க வைக்கவும்.
நாடித் துடிப்பு, சுவாசம் இரண்டையும் தொடர்ந்து கவனிக்கவும்.
எத்தனை நேரம் வலிப்பு நீடிக்கிறது என்று குறித்து வைத்துக்  கொள்ளவும்.

கவனம்
நிலைமை மோசமாக இருந்தால் மட்டுமே அவரை வேறொரு பகுதிக்கு அழைத்துச் செல்லலாம்.
அவரது வாயில் எதையும் திணிக்கக் கூடாது.
பலவந்தப்படுத்தி அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.

எச்சரிக்கை
கீழ்க்கண்ட முறையில் ஏதாவத நடந்தால் உடனடியாக ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
பத்து நிமிடங்களுக்கு மேலாக அவர் பேச்சு மூச்சின்றி இருந்தால்
ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு தொடர்ந்தால்.
வலிப்பு வந்ததன் காரணத்தை அவர் உணராது போனால்.

மயக்கம்
மூளைக்குப் போய்ச் சேர வேண்டிய ரத்தம் போதிய அளவு போகாமல் போனால் மயக்கம் ஏற்படுகிறது. குறுகிய காலம் மட்டுமே இது ஏற்படும்.
மயக்கத்தால் பெரிய ஆபத்து இல்லை என்று சொல்லிவிட முடியாது. எதற்காக மயக்கம் ஏற்பட்டது என்பதை உணர முடியாத பட்சத்தில் உடனடி மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

எப்படிச் சமாளிக்கலாம்?
1. பின்புறமாக சாய வைக்கலாம். கால்களை உயர்த்தி விடுவது நல்லது.
2. காற்றுக் குழாயை சரிபார்க்கவும், வாந்தி வருகிறதா என்று கவனிக்கவும்.
3. சுவாசம், இருமல் போன்றவை இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்றால் சிறிசிஸி-ஐத் தொடங்கவும். தகுந்த உதவி வரும் வரை அல்லது பாதிக்கப்பட்டவரின் நிலைமை சீராகும் வரை சிறிசிஸி -ஐத் தொடரவும்.
4. தலை மட்டத்தை விட உயரமாக காலை உயர்த்தவும். இப்படிச் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும். இறுக்கமான உடைகளைத் தளர்த்துங்கள். ஒரு நிமிடம் அவகாசம் கொடுத்துப் பாருங்கள். விழித்துக் கொள்ளவில்லை என்றால் அவசர சிகிச்சைப் பிரிவை நாடவும்.

அதீத ரத்தப் போக்கு
பாதிக்கப்பட்டவரின் ரத்தப்போக்கை நிறுத்த முயற்சி செய்தவற்கு முன்னால் உங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்வது நல்லது. முடிந்தால், கையுறை அணிந்து கொள்ளுங்கள். கிருமிகள் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்கலாம். ஏதேனும் பாகங்கள் பிதுங்கி வெளியில் வந்து விட்டால் அவற்றை மீண்டும் உள்ளே தள்ள முயற்சிக்க வேண்டாம். கட்டு மட்டும் போட்டு வைக்கவும்.
தவிரவும், கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.

1. கீழே படுக்க வைக்கவும், உடலைவிடத் தலையைச் சற்றுத் தாழ்த்தி வைப்பது நல்லது. கால்களையும் கால்களையும் உயர்த்தி வைக்கவும். இப்படிச் செய்தால் ரத்தம் மூளைக்குள் வேகமாகப் பாய்ந்தோடுவதைத் தடுக்கலாம். எந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகுகிறதோ அந்த இடத்தைக் கொஞ்சம் உயர்த்தியது போல் தூக்கி வைத்தால் நல்லது.

2. கையுறை அணிந்து கொண்ட பின், காயத்திலுள்ள அழுக்குகளை நீக்கலாம், உள்ளேகுத்திக் கிடக்கும் பொருளை பலவந்தமாக இழுக்க முயலக்கூடாது. காயத்தை சுத்தப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.

3. ரத்தம் வரும் இடத்தை அழுத்திப் பிடிக்க வேண்டும். கட்டுப்போட்டு நிறுத்தலாம். அல்லது கையுறை அணிந்த கையால் அழுத்திப் பிடிக்கலாம்.

4. ரத்தப்போக்கு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்க வேண்டும்.

5. கட்டுப்போட்ட பின்னும் ரத்தப் போக்கு தொடர்ந்தால் கட்டைப் பிரிக்க முயற்சிக்க வேண்டாம்.

6. ரத்தப் போக்கு நிற்காத பட்சத்தில் குருதிக் குழாயை அழுத்திப் பிடிக்கலாம். முழுங்கைக்கும் அக்குளுக்கும் இடைப்பட்ட பகுதியில் கைக்கு உண்டான குருதிக் குழாய் உள்ளது. காலுக்கான குருதிக் குழாய் முட்டிக்கும் இடுப்புக்கும் மத்தியில் உள்ளது. இவற்றை அழுத்திப் பிடிக்கலாம்.

7. ரத்தப் போக்கு நின்று விட்டதே என்பதற்காக போட்டு வைத்திருந்த கட்டைப் பிரிப்பத சரியல்ல. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

உட்புறமாக ரத்தக் கசிவு இருந்தால் அவசர சிகிச்சைப் பிரிவை அணுகுவதுதான் ஒரே வழி.

சில அறிகுறிகள் -
காது, மூக்கு, மலக்குடல், பெண்ணின் கருப்பை, வாய்க்குழாய் போன்ற பகுதிகளிலிருந்து ஏற்படும் ரத்தக் கசிவு.

இருமும்போதும், வாந்தி எடுக்கும்போது ரத்தம் வெளிப்படுதல்.

கழுத்தில், மார்பில், அடி வயிறு போன்றவற்றில் அடிபட்டால் ரத்தம் கசிதல்.

மார்பு, வயிறு, மண்டை ஓட்டை ஊடுருவி அடிபட்டால்

வயிற்றுத் தசைகள் இறுக்கமடைந்தால், சுருங்கினால்

எலும்பு முறிவு ஏற்பட்டால்

ஜீல்லிடும் தோல் பகுதி, தளர்ச்சி, சோர்வு, அதிர்ச்சி



பெரியவர்களுக்கு ஏற்படும் திடீர் நோய்ப்பிடிப்பு வலிப்பு நோய்

காக்கை வலிப்பு என்று பரவலாக அழைக்கப்படும் வலிப்பு நோய் ஏற்படும்போது உடலிலுள்ள பல தசைகள் சுருங்குகின்றன. மூளையில் ஏற்படும் மின் அதிர்வுகளின் விளைவு இது. வலிப்பு ஏற்படும்போது, நினைவு தப்பிப் போகும். பாதிக்கப்பட்ட நபர் மூர்ச்சையடைந்து விடுவார்.

வலிப்பு நோய் எதனால் ஏற்படுகிறது?

தலை காயத்தினால்

மூளை பாதிக்கும் நோய்களால்

மூளையில் பிராண வாயு, குளுகோஸ் அளவு குறையும்போது

விஷம் சாப்பிடுவதால், மது அருந்துவதால்

வலிப்பு நோய் திடீர் என்று தாக்கும். தாக்குவதற்கு முன்னால் சில அறிகுறைகளைக் கண்டுகொள்ளலாம். புதிய சுவை, புதிய வாசத்தை உணர முடியும். வலிப்பு எந்த வகையில் வந்தாலும் சரி, எப்போது வந்தாலும் சரி, உடனடியாக சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். முதலில், அவர்களுக்குக் காற்றோட்டம் தேவை. அதை ஏற்படுத்தித் தர வேண்டும். பிறகு, அவரது நாடித் துடிப்பையும் சுவாசத்தையும் சரிபார்க்க வேண்டும்.சுற்றியிருக்கும் பொருள்களால் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

கண்டுபிடிப்பது எப்படி?

பொதுவான காரணிகள் திடீரென மயக்கமடைதல்

ஆர்ச் வடிவில் பின்புறம் வளைதல்

தாக்குப்பிடிக்க முடியாமல் திணறல்

வலிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழும்

சத்தம் போட்டுக் கொண்டே திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுதல்.
அசைவில்லாமல் இருந்தல்

சுவாசம் தடைபடுதல்

திணறல், தாடைகள் இறுகுதல், இரைச்சலுடன் கூடிய சுவாசம்,

உதட்டையோ நாக்கையோ கடித்தல், கட்டுப்பாட்டை இழந்து விடுவது.

சில நிமிடங்களில் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புதல், என்ன நடந்தது என்பதையே உணராமல் இருத்தல்.

சோர்வடைந்து, உடனே தூங்குதல்.

முதலுதவி செய்பவரின் பணி

காயமடையாமல் பாதுகாக்க வேண்டும்.

நினைவு தப்பிப் போனால், அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுதல்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல்

சிகிச்சை

சம்பந்தப்பட்டவர் கீழே விழ நேர்ந்தால், அவரைத் தாங்கிப் பிடித்தல்.
காற்றோட்டம் ஏற்படுத்தலாம். கும்பல் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல்.
கூரான பொருள்கள், சூடான பானங்கள் போன்றவை அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்.

எப்போது வலிப்பு ஆரம்பித்தது என்று குறித்து வைத்துக் கொள்ளுதல்.

அவரது தலையைப் பாதுகாக்க வேண்டும். முடிந்தால் தலையணையில் அவரது தலையைச் சாய்த்து வைக்கலாம்.

கழுத்துப் பகுதியில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல