அந்த வீட்டில் வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளன.
வீட்டின் முன்நவீன கெமரா பொருத்தப்பட்டு உள்ளது. வெளியே யார் நின்றாலும் வீட்டுக்குள் இருந்து பார்க்கலாம். வீட்டின் கதவுக்கு பூட்டு கிடையாது. அதற்கு பதில் வாய்ஸ் லேசர் சிஸ்டம் என்ற தொழில் நுட்பம் புகுத்தப்பட்டு உள்ளது.
திரிஷாவும், தாய் உமா கிருஷ்ணனும் கதவு அருகில் நின்று குரல் கொடுத்தால் உடனே திறக்கும். வீட்டுக்குள் நுழைந்ததும் மீண்டும் சாத்திக் கொள்ளும்.
வெளியே யாரேனும் வந்து அழைத்தால் வீட்டுக்குள் இருந்து திரிஷாவோ அல்லது அவர் தாயோ குரல் கொடுத்தால் தான் கதவு திறக்கும்.
எம். ஜி. ஆரின் பழைய அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் ‘அண்டக்கா கஜம் அபுக்சா குஜம் திறந்திடு சீசேம்’ என்று சொன்னதும் மர்ம குகையின் ராட்சத கதவு தானாக திறக்கும். அது போல திரிஷா வீட்டு கதவும் அவர் குரல் கேட்டால் மட்டுமே திறக்கிறது.
திரிஷா அடிக்கடி ஓய்வெடுக்க வெளிநாட்டு போவதுண்டு. அங்குள்ள புது டெக்னாலஜிகளை தெரிந்து கொண்டு வீட்டில் அறிமுகப்படுத்துகிறார். அது போல் வந்ததுதானாம் வாய்ஸ்லேசர் சிஷ்டம் பூட்டு.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக