ஐரோப்பாவிற்கான பயணத்தை மனைவி மேற் கொண்டிருந்த போது வீட்டிலுள்ள தளபாடங்கள் உட்பட அனைத்தையும் மேற்படி தூதுவர் எடுத்துச் சென்றுள்ளார். வீடு திரும்பிய மனைவி தனது ஆடைகள், நகைகள் உட்பட அனைத்தையும் தனது கணவர் எடுத்துச் சென்றதுடன் அவருக் கான கடனட்டை மற்றும் காப்புறுதியும் கணவரால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தனது பொருட்களை இழந்ததை விட தான் அன்புடன் வளர்த்த 40 பூனைகளையும் இரு நாய்களையும் கணவர் எடுத்துச் சென்றதுதான் தனது மனதை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில் அவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சட்டக் காரணங்களுக்காக தூதுவர் மற்றும் அவரது மனைவியின் பெயர்களை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக