பின்னாளில் காவல் துறை ஆணையரான அவர் 1918 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். காவல் துறையில் ஹென்றி ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு ‘சேர்’ பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் ‘சேர் ஹென்றி’ என அழைக்கப்பட்டது அரிது. அவர் பொதுவாக ‘திருவாளர் கைரேகை’ என்று தான் அழைக்கப்பட்டார்.
கைரேகைகளை வகைப்படுத்து வதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய மற்றொரு காவல்துறை அதிகாரி ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூவன் வுசெட்டிக்என்பவர். ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு மிகவும் நம்பத்தகுந்த ஆதாரமாக கைரேகை விளங்குகிறது. ஏனெனில் எந்த இரு மனிதர்களின் கைரேகையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
அவர்கள் ஒன்றாகப் பிறந்த இரட்டையர்களாக இருந்தாலும் கூட! ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறைத் தடயவியல் நிபுணர்கள் முதலில் கைரேகையைத்தான் தேடுவார்கள். பதிவான கைரேகை ‘பளிச்சென்று தெரிவதில்லை. எனவே கைரேகை நிபுணர்கள் கைரேகை பதிந்திருக்கக்கூடும் என்று நினைக்கும் இடத்தில் அதற்கென உள்ள பொடியைத் தூவிப் பார்ப்பார்கள்.
கையில் இயல்பாகவே உள்ள எண்ணைப் பசையால் கைரேகைப் பதிவுகள் ஏற்படுகின்றன. பொடி தூவப்படும்போது அது எண்ணைய்ப் பசை பகுதியில் படிவதால் கைரேகைப் பதிவு நன்றாகத் தெரிகிறது.
அந்த கைரேகைப் பதிவுகள் புகைப்படம் எடுக்கப்பட்டு ஏற்கனவே காவல் துறையினரின் வசம் இருக்கும் குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமானவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.
கைரேகைகளை விட்டுவிடக் கூடாது என்பதற்காக குற்றவாளிகள் கையுறைகளை அணிவது உண்டு. ஆனால் கையுறைகளின் பதிவுகளின் மூலமும் அவை வாங்கப்பட்டு எவ்வளவு நாட்களாகின்றன. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூல் என்ன தைக்கப்பட்டிருக்கும் விதம் என்ன என்பது போன்ற விவரங்களை அறியலாம்.
சந்தேகத்துக்கு இடமான ஒருவரிடம் கையுறைப் பதிவுகளுடன் ஒத்துப்போகும் கையுறை இருந்தால் அது குறிப்பிட்ட நபருக்கு எதிரான வலுவான ஆதாரமாகிவிடும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக