சனி, 5 பிப்ரவரி, 2011

அரசியல் நோயாளிகள் மத்தியில் தான் சுகதேகி என்கிறார் மஹிந்த

வதந்திகளைப் பரப்பும், சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் நோயாளிகளுக்கு மத்தியில் மிகவும் சுகதேகியாக தான் இருக்கிறார் என்று ஜனாதிபதி நேற்றுக் கூறினார். 63 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி புத்தலையில் "தேசத்துக்கு மகுடம்" கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:

புலிகள் மாத்திரம் அல்லாமல் நாட்டையும் அரசையும் அழிக்கமுனையும் பெய்ப் பிரசாரங்கள் மூலம் பதவிக்கு வரச்சிலசக்திகள் முயற்சிக்கின்றன. அரசுக்கு எதிராகச் சேறுபூசும் முயற்சிகளுடன் பல்வேறு வதந்திகளையும் அவை பரப்பி வருகின்றன.

இத்தகையவர்களை நான் அரசியல் நோயளிகள் என்றே கருதுகின்றேன். இத்தகைய அரசியல் நோயளிகளுக்கு மத்தியில் மிகவும் சுகதேகியாக நான் இருகின்றேன் என்றார்.

ஆங்கிலேயருக்கு எதிராக ஊவா வெல்லச்சாவில் இடம்பெற்ற கிளர்ச்சியை சித்தரிக்கும் வகையிலான கலைநிகழ்ச்சியுடன் கண்காட்சி ஆரம்பமானது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல