ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ஆறாயிரம் தமிழ் யுவதிகள் கட்டாய சேர்ப்பு

அடேல் பாலசிங்கம் மீது போர்க் குற்ற விசாரணை?

மறைந்த புலி ஆலோசகரின் மனைவி மீது புகார்

ஆறாயிரம் இளம் தமிழ் யுவதிகள் மற்றும் பெண்களை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக, விடுதலைப்புலிகள் அமைப்பில் அவர்களை கட்டாயமாக சேர்த்த அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. இதற்கான பல சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அடேல் பாலசிங்கம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்.

தற்கொலை குண்டு தாக்குதல்களை அங்கீரித்து அவர் ஆற்றிய உரை அடங்கிய பதிவுகள் வன்னி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட் டுள்ளன என கொழும்பு சிங்கள ஊடக மொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல