செவ்வாய், 27 நவம்பர், 2012

60 தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் நாடு திரும்பினர்!

சவூதி அரேபியாவில் நிர்கதி நிலைக்குள்ளாகியும் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்த 60 தமிழ் , முஸ்லிம் ,சிங்கள இளைஞர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்


மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், பதுளை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த நபர்கள் சித்ததா நகரிலுள்ள சிறையில் 2 முதல் 7 மாதம் வரை சிறைவாசம் அனுபவித்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


உரிய முறையில் சம்பளம் வழங்கப்படாமை மற்றும் தொழில்வாய்ப்புகள் கிடைக்காமை போன்ற காரணங்களால் வேலைத்தளங்களில் இருந்து வெளியேறிய தடுப்பு முகாமில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களை வீடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாடடு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல