செவ்வாய், 27 நவம்பர், 2012

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த காதல் ஜோடி போலீசில் தஞ்சம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் 74 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் வசித்து வருகின்றனர். முகாமை சேர்ந்த சுகில்ராஜ் மகன் சரண்ராஜ் (எ) சுமன் (23) முகாமில் வசிக்கும் சுஜாதா (21) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் சுஜாதாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், சுஜாதாவை சிவகங்கை பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த சுஜாதா ஒரு வாரத்துக்கு முன்பு தப்பிவந்தார்.

தகவல் அறிந்த காதலன் சுமன், காதலியை அழைத்துக்கொண்டு வெளிமாநிலத்துக்கு சென்று விட்டார். சிவகங்கையில் இருந்து சுஜாதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காட்டுமன்னார்கோவில் முகாம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 குடும்பத்தாரின் பெற்றோர்களை மீறி திருமணம் செய்து கொண்டதால் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி இன்று காட்டுமன்னார்கோவில் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல