புதன், 5 ஜூன், 2013

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் 1

1.மால்களில் பார்க்கக்கூடிய பெண்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கும் போது தட்டுப்படுவார்களா?

2.நண்பர்களுடன் சாப்பிட்டு முடிச்ச பின்னாடி, பில் தரும்பொழுது அழைப்பு வர மாதிரி செல்போன எங்கைய்யா வாங்குறீங்க?

3.இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா?

4.வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து வோட்டு கேட்கும்போது, தேர்தல் கமிஷன் ஏன் வீடு வீடாக வந்து வோட்டு வாங்கி செல்லகூடாது..?

5.மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும் இன்னும் ஏன் மாற்ற வில்லை ..?

6.பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்..?

7.கையில் தோசை கரண்டி வைத்திருக்கும் போதே "தோசை எப்புடியுருக்குங்க" என்பது குடும்ப வன்முறையின் கீழே வராதா ..?

8. (a + b)2 = a2 + 2ab + b2... தக்காளி, என்னிக்கு இந்த கணக்கு எனக்கு வாழ்க்கைல எப்படி உதவப்போகுது..?

9.கஞ்சா கடத்தும்போது புடிச்சா அதுக்கு மதிப்பு போடுறாங்களே அதுலென்ன MRP போட்டுருக்குமா?

10. 500-வதாக எடுத்துப் போட்ட சேலையை விடுத்தும் வேறொன்றை தேடிய பெண்ணை எதிர் கொள்ளும் சேல்ஸ்மேனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு இன்னும் ஏன் தரவில்லை ..?

@ களவாணி பய
முகநூல்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல