திங்கள், 29 ஜூலை, 2013

நோய்வாய்ப்பட்டு கவனிக்க ஆளில்லாமல் நடிகை கனகா மருத்துவமனையில் தவிப்பு

புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றதாகவும் தகவல்

பிர­பல நடிகை கனகா, நோய் வாய்ப்­பட்டு கவ­னிக்க ஆளில்­லாமல் ஆலப்­பு­ழாவில் உள்ள மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

தமிழ் சினி­மாவில் 1989 இல் ராம­ரா­ஜ­னுடன் ‘கர­­காட்­டக்­காரன்’ என்ற திரைப்­ப­டத்தில் கதா­நா­ய­கி­யாக அறி­மு­க­மா­னவர் நடிகை கனகா. இந்த திரைப்­ப­டத்தின் வெற்­றியைத் தொடர்ந்து ரஜினி, கார்த்திக், பிரபு உள்­ளிட்ட தமிழ் திரை­யு­லகில் பல முன்­னணி நடி­கர்­க­ளுடன் பல திரைப்­ப­டங்­களில் நடித்­துள்ள இவர், மலை­யாளம், தெலுங்கு, கன்­னட திரைப்­ப­டங்­க­ளிலும் நடித்­துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளி­வந்த ‘குஸ்­ருதி’ என்ற மலை­யாள திரைப்­ப­டத்தைத் தொடர்ந்து வாய்ப்­பின்றி இருந்த இவர், எங்­கி­ருக்­கிறார் என்­பது தெரி­யா­மலே இருந்­தது.

இந்­நி­லையில், அவர் தற்­போது ஆலப்­பு­ழாவில் உள்ள தனியார் மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரு­வது தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்பு வேறொரு மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த அவர், ஆலப்­புழா மருத்­து­வ­ம­னைக்கு தற்­போது மாற்­றப்­பட்­டுள்ளார்.

மேலும், புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு கவனிக்க ஆளில்லாதவர்களுக்கான மருத்துவ மையத்திலும் கனகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல