சனி, 7 டிசம்பர், 2013

மின்­னு­யர்த்­தியில் தனித்து விடப்­பட்ட பால­கனை மாடி­யி­லி­ருந்து வீசிய சிறுமி (படங்கள் இணைப்பு)

தாயால் தவ­று­த­லாக மின் உயர்த்தி உப­க­ர­ணத்தில் தனித்து விடப்­பட்ட பால­கனை 10 வயது சிறு­மி­யொ­ருவர் அடித்து, உதைத்து மாடி­யி­லி­ருந்து தூக்கி வீசி படு­கொலை செய்த விப­ரீத சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. தென் மேற்கு சீனாவில் சொங்கிங் நகரைச் சேர்ந்த மேற்­படி தாயார் யுவன்­யுவான் என்ற தனது 2 வய­துக்கும் குறை­வான வய­து­டைய பால­கனை சம்­பவ தினம் தள்ளு வண்­டியில் வைத்து மின்­னு­யர்த்தி உப­க­ர­ணத்தில் அழைத்துச் சென்­றுள்ளார்.

இந்நிலையில், அவர் மின்னுயர்த்தி உரிய மாடிப்பகுதியை அடைந்ததும் அதிலிருந்து வெளியேறிய வேளை அதன் கதவு மூடியுள்ளது. இதனால் தள்ளுவண்டியிலிருந்து குழந்தை அதனுள் சிக்கியுள்ளது. இந்நிலையில், மேல் நோக்கி நகர்ந்த அந்த மின்னுயர்த்தியில் பிரவேசித்த 10 வயது சிறுமி அந்த பாலகனை அடித்து உதைத்து மாடி மாடத்திலிருந்து வீசியுள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு வீடியோ கருவியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்­பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல