சனி, 7 டிசம்பர், 2013

உல­க­ளா­விய ரீதியில் அதி­க­ரித்து வரும் சிறுவர் பிரச்­சி­னைகள்

உல­க­ளா­விய ரீதியில் சிறு­வர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் நாளுக்­குநாள் அதி­க­ரித்த வண்­ண­மாக உள்­ளன. சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்தின் அதி­க­ரித்த தன்­மை­யா­னது ஒழுக்­க­முள்ள சமூக உரு­வாக்­கத்­துக்கு சவா­லாக விளங்­கு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும். சிறு­வர் உரி­மை­களை பேணும் பொருட்டு பல்­வேறு ஆவ­ணங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள போதும் அவை அனைத்தும் ஏட்­ட­ளவில் முடங்கிக் கிடப்­ப­த­னையே பெரும்­பாலும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. சட்­டங்­களை நடை­முறைப்­ப­டுத்தும் அதி­கா­ரி­களின் வலு­வற்ற போக்­குகள் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களை உக்­கி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது என்ற குற்­றச்­சாட்­டு­களும் இல்­லா­ம­லில்லை.

ஆசி­யாவில் சுமார் பத்து இலட்­சத்­துக்கும் அதி­க­மான சிறு­வர்கள் பாலியல் வர்த்­த­கத்­துக்கு பலி­யாகும் நிலை உரு­வாகி வரு­வ­தாக 2010ஆம் ஆண்டில் வெளி­யான தகவல் ஒன்றில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துடன் அதி­க­மான ஆண்­களே தொடர்­பு­பட்­டி­ருந்­த­தா­கவும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. 1996க்கும் 2000க்கும் இடையில் நிய­ூஸி­லாந்து நாட்டில் தீர்ப்பு பெற்ற 99 சத­வீ­த­மான சிறு­வர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோக வழக்­கு­களில் ஆண்­களே குற்­ற­வா­ளி­க­ளாக இருந்­துள்­ளனர். உல­க­ளா­விய ரீதியில் சிறு­வர்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­படும் பாலியல் குற்­றங்­களில் 3இல் 1பங்கு 18 வய­துக்கும் குறைந்­த­வர்­க­ளா­லேயே புரி­யப்­ப­டு­கின்­றது என்­பது அன்டேர்ஸ் நைமான் என்­ப­வரின் கருத்­தாக உள்­ளது. சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோக விட­யத்தில் பாலியல் சுரண்­ட­லுக்கு எதி­ரான போராட்டம் இல­கு­வா­ன­தல்ல என்­பதே உண்­மை­யாகும்.

வறுமை சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்தை மேலும் அதி­க­ரிக்கச் செய்­கின்­றது. சுற்­றுலாப் பய­ணி­கள்­கூட வறு­மையை சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு குற்­ற­மி­ழைப்­பதை அறிந்­து­கொள்ள முடி­கின்­றது. யுத்தம் சிறு­வர்­களின் வாழ்க்­கை­யையும் சுதந்­தி­ர­மாக சுற்­றித்­தி­ரியும் நிலை­மை­க­ளையும் பாதிப்­ப­டையச் செய்­துள்­ளது. உலகில் சுமார் இரண்டு இலட்­சத்து ஐம்­ப­தா­யி­ரத்­துக்கும் அதி­க­மான சிறு­வர்கள் போர் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக கடந்த வருடம் ஜூலை மாதம் வெளி­யான செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், யுத்தம் பல சிறு­வர்­களை விசேட தேவை கொண்­ட­வர்­க­ளாக மாற்­றி­ய­மைத்­துள்­ளது. யுத்­தத்தின் கார­ண­மாக அவ­ய­வ­ங்­களை இழந்தும், உளக் குறை­பாடு­க­ளுடன் பல சிறு­வர்கள் வாழ்க்­கையை கொண்டு செல்ல வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலையில் உள்­ளனர். உலக நாடு­களில் இடம்­பெறும் போர்­களே பல்­லா­யி­ரக்­க­ணக்­கான சிறு­வர்கள் உயி­ரி­ழப்­ப­தற்கு உந்­து­சக்­தி­யா­கி­யுள்­ளது. சிரி­யாவில் மூன்று வருட கால­மாக இடம்­பெற்ற உள்­நாட்டு யுத்­தத்­தின்­போது பதி­னோ­ரா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அதிர்ச்சி தரும் புதிய அறிக்கை ஒன்று கூறு­கின்­றது. லண்­டனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் ஒக்ஸ்போர்ட் ஆய்வுக் குழுவால் வெளி­யி­டப்­பட்ட கள­வா­டப்­பட்ட எதிர்­கா­லங்கள்! சிரி­யாவில் சிறுவர் படு­கொ­லை­களில் மறைந்­துள்ள தொகை என்ற தலைப்­பி­லான அறிக்­கை­யி­லேயே மேற்­கண்ட தகவல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த சிறு­வர்­களில் அநேகர் தமது அயற்­பு­றங்­களில் வெடித்த குண்­டுகள், ஷெல்­க­ளா­லேயே கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

உள்­நாட்டுப் போரில் பலி­யா­ன­வர்­களில் 11 ஆயி­ரத்து 420 பேர் 17க்கும் அதற்கு கீழ்ப்­பட்­ட­து­மான வய­து­டை­ய­வர்­க­ளாவர். இவர்­களில் 389 பேர் சினைப்பர் தாக்­கு­தலில் பலி­யா­கி­யுள்­ளனர். உயி­ரி­ழந்­த­வர்­களில் 764 பேர் உட­ன­டி­யாக கொல்­லப்­பட்­டுள்­ளனர். நூற்­றுக்கும் அதி­க­மா­ன­வர்கள் சித்­தி­ர­வதை செய்து கொல்­லப்­பட்­டுள்­ளனர். கொல்­லப்­பட்ட சிறு­வர்­களில் 13க்கும் 17வய­துக்கும் இடைப்­பட்ட சிறு­வர்­களே அதி­க­மாக உள்­ளனர். இரண்­டா­யி­ரத்து 223 சிறு­வர்கள் அலெப்போ நகரில் கொல்லப்பட்டுள்ளனர். இந்­ந­கரில் கடந்த மாதம் நவம்பர் 23ஆம் திகதி நடத்­தப்­பட்ட வான் தாக்­கு­தலில் குறைந்­தது 40 சிறு­வர்கள் ஒரே நாளில் பலி­யா­கினர்.

சிறு­வர்கள் காணா­மற்­போகும் அல்­லது கடத்­தப்­படும் நிலை­மை­களும் வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றன. பணம், பாலியல் உள்­ளிட்ட பல தேவை­க­ளுக்­காக சிறுவர் கடத்­தப்­ப­டு­கின்­றனர். இன்னும் சில உலக நாடு­களில் பலி கொடுக்கும் நோக்­கத்­துக்­கா­கவும் சிறு­வர்கள் கடத்­தப்­ப­டு­வது வழக்­க­மாக உள்­ளது. இந்­தி­யாவின் மத்­திய பிர­தேச மாநி­லத்தில் கடந்த நான்கு மாதங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான சிறு­மியர் காணாமல் போயுள்­ளனர். இவர்கள் கடத்தல் கும்­பலால் கடத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என்று காங்­கிரஸ் கட்சி குற்றம் சுமத்­தி­யுள்­ளது. மத்­திய பிர­தே­சத்தில் பழங்­குடி இனத்து மக்கள் வசிக்கும் மாவட்­டங்­களில் ஆட்­க­டத்தல் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் இந்த சம்­ப­வங்­களை மாநில அர­சாங்­கமும் பொலிஸும் கண்­டு­கொள்­ளாமல் அலட்­சி­ய­மாக உள்­ள­தா­கவும் மத்­திய பிர­தேச மாநில காங்­கிரஸ் தலைவர் காந்­திலால் பூரியா கவலை தெரி­வித்­தி­ருக்­கின்றார். இதை சாதா­ரண சம்­ப­வங்­க­ளாக எடுத்­துக்­கொண்­டுள்ள மாநில அரசு சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த தவ­றி­யுள்­ள­தா­கவும் தமது நிலைப்­பாட்டை பூரியா தெளி­வு­ப­டுத்­து­கிறார்.

சிறுவர் ஆபாச வீடியோ தொடர்பில் உலக­ளா­விய ரீதியில் 348 பேர் அண்­மை யில் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். சிறு­வர்­க­ளது நிர்­வாணப் படங்­களைக் கொண்ட வீடி­யோக்கள் மற்றும் இறு­வட்­டு­க்களை விற்­பனை செய்த குற்­றச்­சாட்டில் ரொரண்டோவை அடிப்­ப­டை­யாகக் கொண்ட நிறு­வ­ன­மொன்று விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. நிறு­வ­னத்தின் வீடியோ காட்­சிகள் 94 நாடு­களில் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்து சிறுவர் ஆபாச வீடியோ படங்கள் தொடர்பில் கன­டாவில் 108 பேரும், அமெ­ரிக்­காவில் 76 பேரும், ஏனைய பல நாடு­களில் 164 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்த ஆபாச வீடியோ படங்கள் தொடர்பில் அவுஸ்­தி­ரே­லியா, ஸ்பெயின், மெக்­சிக்கோ, தென் ஆபி­ரிக்கா, நோர்வே, கிறீஸ், அயர்­லாந்து குடி­ய­ரசு ஆகிய நாடு­க­ளிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது.

உலகில் ஒரு மில்­லியன் சிறு­மி­க­ளுக்கு பிறப்­பு­றுப்பு சிதைக்­கப்­படும் அபாயம் உள்­ள­தாக உலக சிறுவர் நிதி­ய­மா­னது அண்­மையில் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும். இச்­செ­ய­லுக்கு உலக நாடுகள் எதிர்ப்­பினை வெளி­யிட்டு வரு­கின்ற போதும் இச்­செயல் இன்னும் நடை­மு­றையில் இருந்து வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். மதச்­ச­டங்­காக மேற்­கொள்­ளப்­படும் இச்­செ­யலை தடுத்து நிறுத்த சட்டம் மட்­டுமே போது­மா­ன­தல்ல என்­ப­தையும் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். புதைக்­கப்­பட்ட சட­லத்தை தோண்டி எடுத்து பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தப்­பட்ட சம்­பவம் பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்தில் இடம்­பெற்­றமை சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்தின் உச்­சக்­கட்­ட­மாக உள்­ளது.

உலக நாடு­களில் சிறுவர் பிரச்­சி­னைகள் மற்றும் துஷ்­பி­ர­யோ­கங்கள் என்­பன கணி­ச­மாக அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் இலங்­கை­யிலும் இதன் எதி­ரொ­லி­யினைக் கேட்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இலங்­கையில் உள்ள சிறு­வர்­களும் பல­த­ரப்­பட்ட சிக்­கல்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர். இலங்­கையில் 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் சுமார் இரு­பத்­தே­ழா­யி­ரத்து மூன்று சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் 2007 இல் இரண்­டா­யி­ரத்து 624 சிறு­வர்­களும் 2008 இல் மூவா­யி­ரத்து 196 சிறு­வர்­களும் 2009இல் இரண்­டா­யி­ரத்து 954 சிறு­வர்­களும் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். 2000க்கும் 2006க்கும் இடைப்­பட்ட காலத்தில் 14 ஆயி­ரத்து 200 சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மா­க­வுள்­ளது.

இதே­வேளை, 2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை­யிலும் 18 ஆயி­ரத்து 777 சிறுவர், சிறு­மியர் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார அமைச்சர் திஸ்ஸ கர­லி­யத்த அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். முன்­ன­தாக கேள்­வி­யெ­ழுப்­பிய ரோசி சேன­நா­யக்க எம்.பி.க்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் கர­லி­யத்த இவ்­வி­ப­ரங்­களை வெளி­யிட்­டி­ருந்தார். தாய் அல்­லது தந்தை வெளி­நாடு சென்­றதால் பல சிறு­மி­யர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். கட்­டாயக் கல்வி சட்­டத்தை மீறிய சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.

2011 மற்றும் 2012ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் இலங்கை சிறுவர்கள் தத்தெடுக்கப்படுவது தொடர்பிலும் அதிருப்திகள் தெரிவிக்கப்படுகின்றன. வருடந்தோறும் சுமார் ஆயிரத்து நூறு சிறுவர்கள் உள்நாட்டவர்களாலும் வெளிநாட்டவர்களாலும் தத்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

தத்தெடுக்கப்படும் பொறிமுறை­யினை ஒழுங்காக ஒரு பொறிமுறை­யின் கீழ் கொண்டு வருவதற்கு புதிய கொள்கை ஒன்றை முன்வைப்ப­தற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் சிறுவர்கள் என்போர் மிகப்பெரும் சொத்துக்களாவர். நாட்டில் எதிர்கால சிற்பிகள் இவர்களே. இந்த வகையில் சிறுவர் உரிமைகளை பேணுவதற்கும் அவர்களின் சுதந்திரத்தை பறிக்காதிருப்பதற்கும் சகலரும் உறுதி பூண வேண்டும்.

சிறுவர்களின் மேன்மை தொடர்பில் உலக நாடுகள் உரிய நடைமுறை சாத்தியமான திட்டங்களை வகுத்து செயற்படல் வேண்டும். சிறுவர்களை புறந்தள்ளுவோர் பல்வேறு பாதக விளைவுகளை சந்திக்க நேரிடும்.

- துரைசாமி நடராஜா -
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல