திங்கள், 9 டிசம்பர், 2013

விடு­தலை வீரர் நெல்சன் மண்­டேலா

தென் ஆபி­ரிக்­காவில் ஆங்­கி­லே­யரின் அநி­யாய ஆட்­சிக்கு எதி­ராக ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் தோன்­றிய ஆறு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு நெல்சன் மண்­டேலா அர­சி­யலில் ஈடு­பட்டு ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ள­ரானார். புரட்­சி­க­ர­மான போராட்­டங்­களில் ஈடு­பட்டார். அவ­ருக்கு நீதி­மன்றம் ஆயுள் தண்­டனை விதித்­தது. 46 ஆவது வயதில் சிறை­சென்ற அவர் 27 ஆண்­டுகள் சிறைக் கொடு­மை­களை அனு­ப­வித்தார். ஆபி­ரிக்க கறுப்பு இன மக்­களின் விடு­த­லைக்­காக அவர் கடு­மை­யான சிறை­வாசம் அனு­ப­வித்தார்.

வன்­முறைப் போராட்­டத்தில் நம்­பிக்கை கொண்ட மண்­டேலா மனம்­மாறி காந்­தி­ய­டி­களின் அகிம்சைப் போராட்­டத்தில் நம்­பிக்கை கொண்டார். 1994 ஏப்­ரலில் நடந்த பொதுத் தேர்­தலில் வெற்றி பெற்று மண்­டேலா குடி­ய­ரசுத் தலை­வ­ராக பதவி ஏற்றார். கறுப்பர் இனம் விடு­தலை பெற்­றது.

ஒடுக்­கப்­பட்­டோர்­க­ளான கறுப்­பி­னத்தின் மீட்சி நாய­க­ரான தென்­னா­பி­ரிக்க விடு­தலை வேங்கை நெல்சன் மண்­டே­லாவின் வர­லாறு ஒரு வீர காவியம். அவர் நீந்­தி­யது நெருப்­பாறு. அவ­ரது வாழ்க்கை வர­லாறு மயிர்க்­கூச்­செ­றியச் செய்யும் மகத்­தான இலக்­கிய ஓவியம் ஆகும்.

இன்­றைய கதா­நா­யகன் நெல்சன் மண்­டேலா ஆபி­ரிக்­கா­வி­லுள்ள வெஸோ கிரா­மத்தில் 1918 ஆம் ஆண்டு, ஜுலை மாதம், 18 ஆம் திகதி பிறந்தார். அவரின் தந்­தை­யாரின் பெயர் காட்லா என்­ப­தாகும். அவர் தெம்பு இன மக்­களின் தலை­வ­ராக இருந்தார். தெம்பு இன அரசர் அவரை வெஸோவின் தலை­வ­ராக நிய­மித்­தி­ருந்தார். நிய­மனம் செய்த அரசர் பிரிட்­டனால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டவர்.

மரி­யா­தைக்­கு­ரிய பதவி, செல்­வாக்­குள்ள மனிதர் தன் இன மக்­க­ளோடு நெருக்­க­மான உறவு கொண்­டி­ருந்த தலைவர் என்­றாலும் பிரிட்­டி­ஷா­ருக்கு கட்­டுப்­பட்டு நடக்க வேண்­டிய நிலை­மை­யி­லேயே அவர் இருந்தார்.

மண்­டே­லா­வுக்கு அவர் தந்தை வைத்த பெயர் ‘ரோலி­லாவா’ என்­ப­தாகும். இதன் பொருள் ‘தொல்லை தரு­பவன்’ என்­ப­தாகும்.

பிற்­கா­லத்தில் தனது தந்­தையை நினைவு கூரும்­போதும் மண்­டேலா நன்கு சிந்­தித்­துத்தான் எனது தந்­தையார் எனக்கு இப்­பெ­யரைச் சூட்­டினார் போலும் என நகைச்­சு­வை­யாகக் கூறு­வ­துண்டு.

கிரா­மத்­த­லைவர் என்ற பத­வியில் தெம்பு. மன்­ன­ருக்கும் ஆங்­கில நீதி­ப­திக்கும் கட்­டுப்­பட்­டவர் மண்­டே­லாவின் தந்தை காட்லா. ஒருநாள் ஒரு விவ­சாயி தன் காளை மாடு காணாமல் போன­தாக நீதி­ப­தி­யிடம் புகார் கொடுத்தார். நீதி­பதி வழக்கை விசா­ரிக்க காட்­லாவை தன் முன் ஆஜ­ரா­கும்­படி பணித்தார். காட்­லாவே பதி­லுக்கு “இந்த வழக்கை நானே விசா­ரிக்க வேண்­டி­யவன். நான் நீதி­பதி முன் ஆஜ­ராக மாட்டேன்” என்று பதில் அனுப்­பினார். நீதி­பதி காட்­லாவை பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டார்.

இதனால் பட்டம், பதவி மட்­டு­மின்றி நிலம், கால்­ந­டைகள், வரி, வரு­மானம் ஆகிய அனைத்தும் காட்லா இழந்­து­விட்டார். தன்மா­னமே பெரி­தென எண்­ணிய காட்லா இதனால் உறுதி குலை­ய­வில்லை. பதவி பறிக்­கப்­பட்ட பின் இம் வேஸா கிரா­மத்தை விட்டு அங்­கி­ருந்து சில கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள ‘குனு’ என்று அழைக்­கப்­படும் சிற்­றூ­ருக்கு காட்லா குடி­பெ­யர்ந்தார். மண்­டே­லா­வுக்கு ஒன்­பது வயது ஆன­போது தந்தை காச நோயால் பாதிக்­கப்­பட்டு இயற்கை எய்­தினார்.

தந்­தையின் மரணம் சிறுவன் மண்­டே­லாவின் வாழ்க்கைப் பாதையில் ஒரு திருப்பு முனையை ஏற்­ப­டுத்­தி­யது. ஒரு நாள் மண்­டே­லாவின் தாயார் நாம் குனு கிரா­மத்­தி­லி­ருந்து வேறொர் ஊருக்குப் போகிறோம். நீ தயாராய் இரு என்று சொன்னார். தன் தாயின் கரத்தைப் பற்றிக் கொண்டு தந்­தையை இழந்த துயர நினை­வு­க­ளுடன் கொளுத்தும் வெயிலில் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் சிறுவன் மண்­டேலா நடந்தான். கையில் கொண்டு வந்­தி­ருந்த உணவை இரு­வரும் ஒரு மரத்­த­டியில் அமர்ந்து உண்­டனர். பல சிற்­றூர்­களைக் கடந்து மண்­டேலா களைத்துப் போன சமயம் மாலை நேரத்தில் தெம்பு நாட்டின் தலை­ந­க­ரான மெக்­கெஸ்­வெனி வந்து சேர்ந்­தனர்.

தெம்­புவின் அரசப் பிர­தி­நி­தி­யாக ஆண்டு வந்த ஜோங்­கிந்­தர்­பாவின் அரண்­ம­னைக்குள் நுழைந்­தார்கள். தன் கணவர் இறந்­து­போன துயரச் செய்­தியை மண்­டே­லாவின் தாயார் ஜோங்­கிந்­தர்­பா­விடம் தெரி­வித்தார். இதைக் கேட்டு அர­சப்­பி­ர­தி­நிதி துய­ரத்தில் ஆழ்ந்தார். தன்னை அர­சப்­பி­ர­தி­நி­தி­யாக்­கிய காட்­லா­வுக்கு தான் மிக்க நன்­றிக்­கடன் பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­வித்தார்.

தந்­தையை இழந்த சிறு­வ­னுக்கு தானே வளர்ப்புத் தந்­தை­யாக இருந்து பரா­ம­ரிப்பேன் என்று நெஞ்சு நெகிழ உறுதி கூறினார். தன் ஒரே மகனை அரண்­ம­னையில் விட்டுப் பிரி­கின்ற நேரத்தில் தாய்க்கு ஆழ்ந்த துயரம் இருந்­த­போதும் அதை வெளிப்­ப­டுத்­தாமல் சிறு­வனைக் கட்டிப்­பி­டித்து கண்ணீர் விட­வில்லை. போய் வரு­கிறேன் என்று மட்டும் மக­னிடம் கூறி­விட்டு பிரி­யா­விடை பெற்று குனு­வுக்கே மீண்டும் தனியே திரும்­பி­விட்டார். குடி­சை­யி­லி­ருந்து அரண்­ம­னைக்கு வந்த மண்­டேலா விரைவில் தன்னைப் புதிய சூழ்­நிலைக்கு தயார்ப்­ப­டுத்­திக்­கொண்டார்.

அரண்­ம­னைக்கு அடுத்த கட்­டடத்­தி­லேயே பாட­சாலை இருந்­தது. இப்­பள்­ளியில் தான் மன்­னரின் மகன் ஜஸ்டிஸ், மகள் ரொமாஃபு ஆகிய இரு­வ­ருடன் இணைந்து மண்­டேலா படிக்கத் தொடங்­கினார். மண்­டேலா கல்­வியில் ஆழ்ந்த அக்­கறை காட்­டினார். ஆங்­கிலம், கோசா மொழி, வர­லாறு, புவி­யியல் ஆகி­யவை கற்­பிக்­கப்­பட்­டன.

மண்­டே­லா­வுக்கு ஏட்டுக் கல்­வி­யுடன் இன்­னொரு பயிற்­சியும் கிட்­டி­யது. தெம்பு அரண்­ம­னையில் பழங்­குடி இனப் பெரி­ய­வர்கள் அவ்­வப்­போது கூடி பொதுப் பிரச்­சி­னை­களைப் பற்றி விவா­திப்­பது மரபு. விவா­தங்கள் ஒரு சிறிய சட்ட மன்ற விவா­தங்கள் போலவே நடை­பெறும்.

1942 ஆம் ஆண்டு பி.ஏ. பட்டத் தேர்வில் மண்­டேலா முத­லி­டத்தில் தேர்ச்சி பெற்றார். கல்வி மட்­டுமே வாழ்க்­கையில் வெற்றி அடைய ஒரே வழி அல்ல என்­பதை கவுர் போன்ற அவ­ரது நல்ல நண்­பர்கள் விளக்­கி­னார்கள். ஆபி­ரிக்கரின் அடி­மைத்­தனம் அகல வேண்­டு­மானால் 1912 இல் தொடங்­கப்­பட்ட ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸில் சேர்ந்து விடு­த­லைக்கு பாடு­ப­டு­வ­துதான் ஒரே ஒரு வழி என கவுர் வற்­பு­றுத்தி வந்தார்.

அந்தக் கால­கட்­டத்தில் தென்­னா­பி­ரிக்­காவில் இருக்கும் ஆபி­ரிக்­க­னுக்கு பிறப்பு என்­பதே அர­சி­யல்தான். பிறந்த அந்த நொடி­யி­லி­ருந்து அவன் அர­சி­ய­லாக்­கப்­ப­டு­கிறான். அவன் இதை ஒப்­புக்­கொண்­டாலும் சரி மறுத்­தாலும் சரி இதுதான் அந்த நேரத்து நிதர்­ச­ன­மான உண்மை.

ஒரு ஆபி­ரிக்கன் ஆபி­ரிக்­கர்­க­ளுக்கு மட்­டு­மே­யான மருத்­து­வ­ம­னையில் பிறக்­கிறான். ஆபி­ரிக்­கர்­க­ளுக்கு மட்­டு­மே­யான பேருந்தில் வீட்­டுக்கு அழைத்துச் செல்­லப்­ப­டு­கிறான். ஆபி­ரிக்­கர்கள் வாழும் பகு­தியில் மட்­டுமே அவனும் வாழ்­கிறான். ஒரு­வேளை அவன் கல்வி கற்­ப­தாக இருந்தால் ஆபி­ரிக்­கர்கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­படும் பள்­ளியில் படிக்­கிறான்.

வளர்ந்த பிறகு அவன் ஆபி­ரிக்­கர்கள் பணி­யாற்றும் அலு­வ­ல­கத்தில் மட்­டுமே சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்றான். ஆபி­ரிக்­கர்கள் மட்­டுமே வாழும் குடி­யி­ருப்பில் வாட­கைக்கு இருக்­கின்றான். சீவிக்­கிறான். இர­விலோ, பக­லிலோ எப்­போது வேண்­டு­மா­னாலும் எங்கே வேண்­டு­மா­னாலும் அவன் தடுத்து நிறுத்­தப்­ப­டலாம். கடவுச் சீட்டை காட்டச் சொல்லி கேட்­கப்­ப­டலாம். காட்­டா­விட்டால் சிறையில் தள்­ளப்­ப­டலாம்!

இதுதான் அப்­போ­தைய யதார்த்தம்! தென்­ஆ­பி­ரிக்க கறுப்­பர்கள் நம்­பிக்­கைக்கும் நம்­பிக்­கை­யின்­மைக்கும் இடையே வாழ்­வுக்கும் மர­ணத்­திற்கும் இடையே யதார்த்­தத்­திற்கும் கன­வுக்கும் இடையே மிரு­கத்­த­னத்­திற்கும் ஒடுக்கு முறைக்கும் இடையே ஊச­லாடிக் கொண்­டி­ருந்­தார்கள்.

22 வயது இளை­ஞ­ராக இருந்த மண்­டேலா இவற்றைக் கண்டு பொங்கி எழுந்தார். அர­சி­யலில் ஈடு­பட வேண்டும் என முடி­வெ­டுத்து ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸில் தம்மை இணைத்­துக்­கொண்டார்.

பல எதிர்ப்­பு­களின் மத்­தியில் 1944 ஆம் ஆண்டு ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸின் இளைஞர் மன்றம் நிறு­வப்­ப­டு­கி­றது. இதன் நிர்­வா­கக்­குழு உறுப்­பி­ன­ராக மண்­டேலா ஏக­ம­ன­தாக தெரிவு செய்­யப்­ப­டு­கிறார். அதே ஆண்டில் எவலின் என்ற பெண்ணைத் திரு­மணம் செய்து கொள்­கிறார்.

1948ஆம் ஆண்டு மண்­டேலா வாழ்க்­கையில் ஒரு திருப்பு முனை. ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸில் இளைஞர் மன்­றத்தின் பொதுச் செய­லா­ள­ராக மண்­டேலா தெரிவு செய்­யப்­ப­டு­கிறார்.

அதே ஆண்டு பொதுத்­தேர்­தலில் தேசியக் கட்சி வெற்றி பெற்று இன ஒதுக்­கலை அமுல்­ப­டுத்­து­கி­றது.

ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸும் மண்­டேலா தலை­மையில் போராட்­டத்தை விரி­வு­ப­டுத்­து­கி­றது.

ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸின் இளைஞர் மன்­றத்தின் தீவிர செயற்­பா­டு­களால் அதன் செயற்­றிட்­டங்­களை 1949 ஆம் ஆண்டு தேசிய காங்­கிரஸ் ஏற்­றுக்­கொள்­கி­றது.

1956ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்க அரசைக் கவிழ்க்க சதி செய்­த­தா­கவும் வன்­மு­றை­களைத் தூண்­டி­விட்­ட­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­பட்டு மண்­டே­லா­வுடன் சேர்ந்து 155 பேர் கைது செய்­யப்­ப­டு­கி­றார்கள். 5 ஆண்­டுகள் நீடித்த விசா­ர­ணையின் பின் அனை­வரும் விடு­தலை செய்­யப்­ப­டு­கி­றார்கள்.

இதற்­கி­டையே 1957 ஆம் ஆண்டு தமது மனைவி எவி­லினை விவா­க­ரத்து செய்த மண்­டேலா 1958 ஆம் ஆண்டு வின்னி என்­ப­வரைத் திரு­மணம் செய்­கிறார்.

1960ஆம் ஆண்டு ஷார்ப்வில் ஏற்­பட்ட சம்­ப­வத்தில் 69 போராட்ட வீரர்கள் கொல்­லப்­ப­டு­கி­றார்கள். ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி தடை செய்­யப்­ப­டு­கி­றது. மண்­டேலா தலை­ம­றை­வா­கிறார். ஆபி­ரிக்­காவின் ஈட்டி (எம்.கே.) என்னும் தீவி­ர­வாத கிளை இயக்­கத்தை ஆரம்­பிக்­கிறார்.

பதி­னேழு மாத கால தலை­ம­றைவு வாழ்க்­கைக்குப் பின்னர் 1962 ஆம் ஆண்டு, ஆவணி மாதம், 5 ஆம் திகதி கைது செய்­யப்­பட்டு ஜொகன்­னர்ஸ்பர்க் கோட்­டையில் சிறை வைக்­கப்­பட்டார். அக்­டோபர் மாதம் 25 ஆம் திகதி வாசிக்­கப்­பட்ட தீர்ப்பில் முதலில் மண்­டே­லா­வுக்கு ஐந்­தாண்டு சிறைத்­தண்­ட­னையே கிடைத்­தது.

தொடர்ந்து இரா­ஜ­து­ரோக குற்றம் சுமத்­தப்­பட்டு 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி 18 ஆண்­டுகள் சிறை வைக்க உத்­த­ர­வி­டப்­ப­டு­கி­றது.

சிறைச்­சா­லையில் மண்­டேலா இறந்­து­வி­டுவார் என்று எண்ணம் கொண்­டார்கள் ஆட்­சி­யா­ளர்கள். ஆனால், 27 ஆண்டு சிறை­வா­சத்தின் பின் 1990 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 11 ஆம் திகதி நெல்சன் மண்­டேலா விடு­த­லை­யா­கிறார்.

இதற்­கி­டையில் சொவேட்பி, ஷார்ப் பகு­தி­களில் நடை­பெற்ற மாணவர் எழுச்­சியில் 600 பேர் கொல்­லப்­ப­டு­கி­றார்கள். இப்­போ­ராட்­டத்­திற்கு தலைமை தாங்­கிய ஸ்டீவ் பிகோ என்­பவர் காவல் துறை­யி­னரால் தாக்­கப்­பட்டு மர­ண­ம­டை­கிறார்.

தொடர்ந்து தென்­னா­பி­ரிக்கா சர்­வ­தேச பொரு­ளா­தாரத் தடைக்கு ஆளா­கி­றது. ஆடிப்­போ­கி­றது. தென்­னா­பி­ரிக்கா அரசு!

1990 ஆம் ஆண்டு நெல்சன் மண்­டேலா விடு­விக்­கப்­பட்ட பின்னர் பிர­தமர் டி.கிளார்க் ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸின் தடையை நீக்கி ஜன­நா­யக அமைப்பைத் தோற்­று­விக்கும் முயற்­சியில் அக்­கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்த முற்­ப­டு­கிறார்.

1991 ஆம் ஆண்டு ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரசின் தலைவர் பத­வியை நெல்சன் மண்­டேலா விரும்பி ஏற்­றுக்­கொள்­கிறார். அதே ஆண்டு சர்­வ­தேச ஒலிம்­பிக்­க­மிட்டி கடந்த இரு­பத்­தொரு ஆண்­டு­க­ளாக விதித்­தி­ருந்த தடையை நீக்கிக் கொள்­கி­றது.

1993 ஆம் ஆண்டு நெல்சன் மண்­டே­லா­வுக்கு இன்­னு­மொரு குறிப்­பி­டத்­தக்க ஆண்டு. 35 ஆண்டு காதல் மனைவி வின்­னியை விவா­க­ரத்து செய்­கிறார். அதே ஆண்டு அவ­ருக்கும் பிர­தமர் டி.கிளார்க்கும் அமை­திக்­கான நோபல் பரிசு கிடைக்­கி­றது.

1994 ஆம் ஆண்டு சித்­திரை மாதம் 26 ஆம் திகதி நடந்த பொதுத்­தேர்­தலில் தென்­னா­பி­ரிக்­காவில் கறுப்­பின மக்கள் வாக்­க­ளிக்­கி­றார்கள். நெல்சன் மண்­டே­லாவின் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்­கி­றது. அதே ஆண்டு மே மாதம் அன்னார் தென்­னா­பி­ரிக்­காவின் முதல் கறுப்­பின முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்­கிறார்.

சொன்ன சொல் தவ­றாமல் 5 ஆண்டு கால ஆட்­சியின் பின் 1999 ஆம் ஆண்டு பதவி துறக்­கிறார், நெல்சன் மண்­டேலா. தபோ ம்பெகி என்­பவர் பிர­த­ம­ரா­கிறார்.

2000 ஆம் ஆண்டு புருண்­டியில் நடை­பெற்ற சிவில் யுத்­தத்தில் அமைதித் தூது­வ­ரா­கவும் 2003 ஆம் ஆண்­டி­லி­ருந்து எயிட்ஸ் நோய் விழிப்­பு­ணர்வு பிர­சா­ரத்­திலும் ஈடு­பட்­டுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் தமது எண்­பத்­தைந்­தா­வது வயதில் தாம் பொது வாழ்­வி­லி­ருந்து ஓய்வு பெறப் போவ­தாக அறி­வித்தார். எனினும், உலக மக்கள் அவரை விட­வில்லை.

அதே ஆண்டு ஜூலை மாதம் ஜொகன்­னர்ஸ்பர்க்கின் உயர்ந்த விரு­தான ‘நகரின் சுதந்­திர விருது’ (Freedom of the City) வழங்­கப்­பட்டு கெள­ர­விக்­கப்­பட்டார்.

2007 ஆம் ஆண்­டி­லி­ருந்து மூத்த உலகத் தலை­வர்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து முதியோர் இயக்கம் (the elders) என்ற ஒரு இயக்­கத்தை ஆரம்­பித்தார்.

இத்­தனை சாத­னைகள் புரிந்து நெல்சன் மண்­டேலா மறைந்த பின்னர் அன்­னாரின் விடு­த­லையை நோக்கி நீண்ட பயணம் என்ற சுய­ச­ரி­தையின் இறுதிப் பகு­தி­க­ளுடன் இக்­கட்­டு­ரையை நிறைவு செய்­வது சாலப்­பொ­ருத்­த­மாக அமையும்.

நான் சிறை­யி­லி­ருந்து விடுதலை ஆனவுடன் ஒரு பெரும் பொறுப்பு என்னை எதிர்நோக்கி இருந்தது. அடக்கு முறைக்கு ஆட்பட்டவரையும் அடக்கி ஆண்டவரையும் நான் விடுவிக்க வேண்டும். உண்மை என்னவென்றால் நாம் இன்னமும் முழு விடுதலை பெறவில்லை. நாம் இப்போதுதான் சுதந்திரமாக வாழ்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளோம். நாம் கரடுமுரடான பாதையில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம்.

நான் நீண்ட விடுதலைப் பாதையில் நடந்து வந்துள்ளேன். நான் தடுக்கி விழாமல் நடக்க முயற்சி செய்கின்றேன். பாதையில் சில நேரங்களில் வழி தவறி இருக்கின்றேன். நான் ஒரு உண்மையை அறிந்து கொண்டேன். ஒரு மலை உச்சியை அடைந்தபோது அதைப் போல பல மலைகளை ஏறிக் கடக்க வேண்டும் என்று அறிந்து கொண்டேன். நான் சிறிது நேரம் இங்கு ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள அழகான காட்சிகளைக் காண்கிறேன். நான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கிறேன். ஆனால், ஒரு சில விநாடிகள்தான் நான் ஓய்வு எடுத்துக்கொள்ள முடியும். சுதந்திரம் வந்தவுடன் நான் ஆற்ற வேண்டிய கடமைகள் காத்திருக்கின்றன. நான் தாமதிக்க நேரமில்லை. வளமான வாழ்வை நோக்கிய எனது நீண்ட பயணம் இன்றும் முடியவில்லை!

எத்தனை உண்மையான நிதர்சனமான வார்த்தைகள்!


இணு­வையூர் ஆ.இர­கு­ப­தி­பா­ல­ஸ்ரீ­தரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல