பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் சனிக்கிழமை இரவு விற்பனை நிலையமொன்றிற்கு சாதாரண குடிமகன் போன்று சென்று தனது தாயாருக்காக ஆட்டு இறைச்சித்துண்டுகளை கொள்வனவு செய்து அங்கிருந் தவர்களை திகைப் பில் ஆழ்த் தியுள்ளார்.
அவர் தனது தாயார் மேரி சனிக்கிழமை இரவு உணவு அருந்த வருவதையொட்டி தனது வசிப்பிடத்திற்கு அண்மையிலிருந்த உள்ளூர் இறைச்சிக் கடைக்குச் சென்று இறைச்சித் துண்டுகளை கொள்வனவு செய்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமரது அலுவலகம் தெரிவிக்கையில், பக்கிங்ஹாம்ஷியரிலுள்ள இறைச்சிக் கடையில் பிரதமர் தனது தாய்க்காக 10 ஆட்டிறைச்சித் துண்டு களை வாங்கிய தாக தெரிவித்துள்ளது.
இதன் போது அக்கடையிலிருந்த உணவு உற்பத்திகள் சிலவற்றை பிரதமர் சுவைத்துப் பார்த்துள்ளார்.
சிறிய வர்த்தகங்கள் நாட்டிற்கு அவசியமாக வுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக