மலேசியாவில் மரணமான இலங்கையர் தொடர்பில் மர்மம் நிலவுவதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அவுஸ்திரேலியா அனுப்புவதாக ஏமாற்றியே கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு, களுதாவளையை பிறப்பிடமாக கொண்ட அருந்தவச்செல்வன் சச்சுதன் என்பவர் கடந்த 24ஆம் திகதி மலேஷியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த நான்கு வருட காலமாக மலேஷியாவில் தொழில் புரிந்துவந்துள்ளார்.
நேற்று முன்தினம் அவருடைய சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் போது அவருடைய மனைவி கருத்து தெரிவிக்கையில்,
எனது கணவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரே அவுஸ்திரேலிய செல்வதற்காக ஒரு தரகரிடம் 8 இலட்சம் ரூபா பணத்தை செலுத்த வேண்டியுள்ளது என்றும், அதற்கான பணத்தை தனது கணக்குக்கு போடும்படியும் கூறினார். அதன்படி பணத்தை அனுப்பி வைத்தேன். ஆனால், தரகர் அவுஸ்திரேலியா அனுப்புவதாகக் கூறி அவரை ஏமாற்றிவிட்டார்.
இதன் காரணமாக இறந்தவருக்கும் தரகருக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் எனது கணவர் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். எனவே, அவருடைய மரணம் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, களுதாவளையை பிறப்பிடமாக கொண்ட அருந்தவச்செல்வன் சச்சுதன் என்பவர் கடந்த 24ஆம் திகதி மலேஷியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த நான்கு வருட காலமாக மலேஷியாவில் தொழில் புரிந்துவந்துள்ளார்.
நேற்று முன்தினம் அவருடைய சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் போது அவருடைய மனைவி கருத்து தெரிவிக்கையில்,
எனது கணவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரே அவுஸ்திரேலிய செல்வதற்காக ஒரு தரகரிடம் 8 இலட்சம் ரூபா பணத்தை செலுத்த வேண்டியுள்ளது என்றும், அதற்கான பணத்தை தனது கணக்குக்கு போடும்படியும் கூறினார். அதன்படி பணத்தை அனுப்பி வைத்தேன். ஆனால், தரகர் அவுஸ்திரேலியா அனுப்புவதாகக் கூறி அவரை ஏமாற்றிவிட்டார்.
இதன் காரணமாக இறந்தவருக்கும் தரகருக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் எனது கணவர் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். எனவே, அவருடைய மரணம் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக