ஞாயிறு, 1 ஜூன், 2014

மலவாயில் அரிப்பு

“சரி­யான அரிப்பு” என்று சொன்­ன­வ­ரது கை பின் பக்­க­மாகப் போன வேகத்தைப் பார்த்­த­போது வேட்­டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறி­வாரோ எனப் பயம் வந்­தது. ஆனால் செய்­ய­வில்லை. “தானைப் புழுத் தொல்லை என்னை விட்டுப் போகு­தில்லை” என அலுத்துக் கொண்டார்.



“இவ­ளுக்கு போன மாதம்தான் பூச்சிக் குளிசை குடுத்­த­னாங்கள். பிறகும் பின் பக்­க­மாகக் கையைப் போட்டு சொறி­யிறாள்” இதைச் சொன்­னது 4-5 வயது மதிக்­கத்­தக்க குழந்­தையின் தாய்.

இவர்­க­ளுக்­கெல்லாம் உண்­மையில் பூச்சித் தொல்­லை­தானா?

மல­வா­யிலில் அரிப்பு எடுத்தால் அது பூச்சித் தொல்­லைதான் என்றே பலரும் நம்­பு­கி­றார்கள். அது உண்­மையா?

மல­வாயில் அரிப்­பிற்கு அதுவும் முக்­கி­ய­மாக, இரவில் அரிப்­ப­தற்கு தானைப் புழு என்று பர­வ­லாக சொல்­லப்­படும் Thread Wormஒரு கார­ண­மாகும். இருந்த போதும் அது மட்டும் கார­ண­மல்ல. மல­வாயில் அரிப்பை மருத்­து­வத்தில் Pruritus என்­பார்கள். இது ஒரு அறி­குறி மட்­டுமே. இதுவே ஒரு நோயல்ல. பல்­வேறு நோய்கள் கார­ண­மாக அங்கு அரிப்பு ஏற்­ப­டு­வ­துண்டு.

கடு­மை­யான அரிப்பு என்­பதால் எங்கு நிற்­கிறோம் யார் பார்க்­கி­றார்கள் என்று யோசிக்­காது சொறியச் சொல்லும். சொறிந்த பின்னர் “என்ன மானங்­கெட்ட வேலை செய்தேன்” என நாண வைக்கும்.

இந்த அரிப்பு எந்த நேரத்­திலும் வரக் கூடு­மா­யினும் மலம் கழித்த பின்­னரும், இரவில் படுக்­கைக்குச் செல்லும் நேரங்­க­ளிலும் அதி­க­மாக இருக்கக் கூடும். கடு­மை­யான வெக்கை, அவ்­வி­டத்தில் ஈர­லிப்பு, மலம் கசிதல், மனப் பதற்றம் போன்­றவை அரிப்பை மோச­மாக்கும். குழந்­தை­களில் இப்­பி­ரச்சினையைக் காண்­பது அதிகம். அத்­துடன் 40--60 வய­துள்­ள­வர்­க­ளிலும் கூடு­த­லாகக் காணப்­ப­டாலும் எந்த வய­திலும் ஏற்­ப­டலாம்.

கார­ணங்கள் எவை

பல்­வேறு நோய்­களால் ஏற்­ப­டலாம் என்ற போதும் சரும நோய்­களால் ஏற்­ப­டு­வது அதிகம். எக்­சிமா, சோராசிஸ், லைக்கன் பிளேனஸ் போன்ற நோய்கள் சரு­மத்தின் ஏனைய இடங்­களில் தோன்­று­வது போலவே மல­வா­யிலும் வரலாம்.

அதைத் தவிர சரு­மத்தில் பல கார­ணங்­களால் ஒவ்­வாமை அழற்சி ஏற்­ப­டு­வ­துண்டு.

மல­வாயில் பகு­தியில் ஈர­லிப்பு அதி­க­மாக இருந்தால் அதன் கார­ண­மாக அழற்சி ஏற்­ப­டலாம். கடு­மை­யாக வியர்ப்­பது ஒரு முக்­கிய காரணம். வயிற்­றோட்டம் போன்ற நோய்­களால் அல்­லது பழக்க தோசத்தால் அடிக்­கடி மலங் கழிப்­பதால் மல­வா­யிலில் ஈர­லிப்பு ஏற்­பட்டு அதனால் அழற்­சியும் அரிப்பும் வர வாய்ப்­புண்டு. இயல்­பா­கவே கடு­மை­யாக வியர்ப்ப­வர்கள், வியர்க்க விறு­விறுக்க வேலை செய்­ப­வர்கள், மல­வா­யிலை அண்­டிய பகு­தியில் உரோமம் அதிகம் இருப்­ப­வர்­க­ளுக்கு அதே­போல வியர்வை ஈர­லிப்பால் அழற்­சியும் அரிப்பும் ஏற்­படும்.

கடு­மை­யான மற்றும் கிரு­மி ­எதிர்ப்பு சோப் வகை­களை உப­யோ­கிப்­ப­தாலும் அரிப்பு ஏற்­பட வாய்ப்­புண்டு.

ஈர­லிப்­புத்­தன்மை அதி­க­மாக இருப்­பதால் அழற்சி மாத்­தி­ர­மின்றி பங்கஸ் தொற்றும் ஏற்­ப­டலாம். ஈர­லிப்­புடன் மடிப்பும் உள்ள இட­மா­தலால் இறுக்­க­மா­கவும் வெப்­ப­மா­கவும் காற்­றோட்­ட­மின்றி இருப்­பதால் பங்கஸ் தொற்று ஏற்­பட வாய்ப்பு அதி­க­மாகும். இதுவும் அரிப்பை ஏற்­ப­டுத்தும். நீரி­ழிவு நோயுள்­ள­வர்­க­ளுக்கு அவ்­வாறு பங்கஸ் தொற்று ஏற்­படும் வாய்ப்பு அதி­க­மாகும்.

மலம் இறுக்­க­மாகப் போவதால் சில­ருக்கு குதத்தில் சிறு வெடிப்­புகள் தோன்­றலாம். Anal fissure எனப்­படும் இவை வேத­னையை ஏற்­ப­டுத்தும். அத்­துடன் அரிப்­பையும் ஏற்­ப­டுத்­தலாம். அதே போல சில­ருக்கு அவ்­வி­டத்தில் சில தோற்­த­டிப்­புகள் முளை போல வரு­வ­துண்டு. Anal tags என்­படும் இவற்றின் இடையே ஈர­லிப்பும் மலத் துகள்­களும் தேங்­கு­வதால் அரிப்பை ஏற்­ப­டுத்தும். மூலக் கட்­டி­களும் அவ்­வாறே மல­வாயில் அரிப்­பிற்கு கார­ண­மா­கலாம்.

சில வகை உண­வு­க­ளாலும் ஒரு சிலரில் அரிப்பு ஏற்­படும். புளிப்­புள்ள பழங்கள், தக்­காளி, திராட்சை, சுவை­யூட்­டிகள் போன்­றவை அரிப்பை ஏற்­ப­டுத்­தலாம். அதி­க­ளவில் பால், தேநீர், கோப்பி, பியர் போன்ற பானங்­களை அருந்­து­வ­தாலும் ஏற்­ப­டலாம். கடு­மை­யான கார­முள்ள உண­வு­களும் சில­ருக்கு அரிப்பை ஏற்­ப­டுத்­து­வ­துண்டு.

தானைப் புழு

இவ்­வாறு பல கார­ணங்கள் இருந்­த­போதும் தானைப் புழு என்று பொது­வாகச் சொல்­லப்­படும் Thread worm ஒரு முக்­கிய காரணம் என்­பதை மறுக்க முடி­யாது. இது எந்த வய­திலும் தொற்றக் கூடி­யது என்ற போதும் குழந்­தை­களில் முக்­கிய பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. இங்­கி­லாந்தைப் பொறுத்த வரையில் 10 குழந்­தை­களில் 4 பேர் எப்­பொ­ழு­தா­வது தானைப் புழு தொற்­றிற்கு இலக்­காகி இருப்­பார்கள் என கள ஆய்­வுகள் சொல்­கி­ன­றன.

இப் புழுக்கள் குடலில் வாழ்ந்­தாலும் முட்டை இடு­வ­தற்­காக மல வாயி­லுக்கு வருகி­ன்­றன. முக்­கி­ய­மாக இரவு அரிப்­பிற்கு இது முக்­கிய கார­ண­மாகக் கரு­தலாம். ஒரே குடும்­பத்தில் பல­ருக்கு மல­வாயில் அரிப்பு இருக்­கு­மானால் அதற்குக் காரணம் இப்­பூச்­சி­கள்தான் எனக் கரு­தலாம். இதற்கு சிகிச்­சை­யாக குடும்­பத்தில் உள்ள அனை­வ­ருக்கும் ஒரே நேரத்தில் பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். 2 வாரங்­களின் பின்னர் ஒரு முறை மீண்டும் கொடுப்­பதும் உத­வலாம்.

அவ்­வாறு பூச்சி மருந்து கொடுத்த பின்­னரும் அரிப்பு இருக்­கு­மானால் அதற்குக் காரணம் வேறு நோய் என்றே கருத வேண்டும். இல­கு­வான மலப் பரி­சோ­தனை மூலம் பூச்சி இருக்­கி­றதா என்­பதைக் கண்­ட­றி­யலாம்.

“சுத்திச் சுத்தி சுப்­பற்ரை கொல்­லைக்­குள்ளே” என்று ஊர்­பு­றங்­களில் ஒரு வார்த்­தை­யாடல் இருக்­கி­றது. பல­ரு­டைய மல­வாயில் கடி அதைப் போன்­ற­துதான். ஏதா­வது ஒரு கார­ணத்தால் ஒரு­வ­ருக்கு மல­வாயில் கடி ஏற்­பட்­டி­ருக்கும். “சுத்­தத்தைப் பேணு­வது காணாது, அசுத்தம், அழுக்கு பட்­டி­ருக்கும்..” என்­றெல்லாம் எண்ணி அடிக்­கடி மல வாயிலைக் கழு­வு­வார்கள். ஈர­லிப்பு அதி­க­மா­வதால் அரிப்பு அதி­க­ரிக்­குமே ஒழியக் குறை­யாது. கழு­வி­யது காணாது என எண்ணி மருந்து கலந்த சோப் வகைளை உப­யோ­கிப்­பார்கள். அதி­லுள்ள மருந்து கார­ண­மான ஒவ்­வா­மையால் அரிப்பு மேலும் அதி­க­ரிக்கும். எனவே சோப் டெட்டோல் சவ்லோன் போன்­ற­வற்றால் சுத்தம் பண்ண முயல்­வார்கள். அவை மென்­மை­யன சரு­மத்தை உறுத்தி அரிப்பை அதி­க­ரிக்கும்.

எனவே கார­ணத்தைக் கண்­ட­றி­யாது சுய­வைத்­தி­யத்தில் ஈடு­ப­டு­வது நோயை அதி­க­ரிக்­குமே ஒழிய தீர்க்­காது.

நீங்கள் செய்யக் கூடி­யவை

கார­ணத்தை கண்­ட­றிய முடி­யா­விட்டால் நீங்கள் செய்யக் கூடி­யவை எவை?

சரு­மத்தை உறுத்தக் கூடிய எந்தப் பொரு­ளையும் உப­யோ­கிக்க வேண்டாம்.

வாச­னை­யூட்­டிய சோப், மருந்து கலந்த சோப் போன்­ற­வற்றை போட வேண்டாம். ஒவ்­வொரு தட­வையும் சோப் போடு­வது கூடாது. சோப் போட்டு கழு­விய பின்னர் அதன் எச்­சங்கள் சரு­மத்தில் ஒட்­டி­யி­ருக்­கா­த­வாறு நன்கு அலசிக் கழு­வுங்கள். வாசனைத் திர­வி­யங்கள், ஸ்பிரிட், போன்­ற­வற்றைத் தவி­ருங்கள். அவ்­வி­டத்தில் பவுடர் போடு­வதும் கூடாது. நிறம் மணம் அற்ற சோப் வகை­களை உப­யோ­கி­யுங்கள். மலம் கழித்த பின் கழு­வியும் ஈரத்தை ஒற்­றியும் எடுங்கள். கடு­மையாகத் தேய்க்க வேண்டாம்.

உங்­க­ளுக்கு ஏதா­வது உணவு வகை­கள்தான் அரிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது என்­பதை அனு­ப­வ­பூர்­வ­மாக உணர்ந்தால் அதைத் தவிர்க்­கவும். அரிப்பு சில­கா­லத்தில் மறைந்­து­விடும்.

மலம் கழித்தால் உட­ன­டி­யாகக் கழு­வுங்கள். மல­வா­யிலால் வாய்வு கழி­யும்­போது அங்கு ஈர­லிப்பு ஏற்­ப­டு­வ­தாக உணர்ந்­தாலும் கழு­வுங்கள். அதே­போல படுக்கப் போகும் முன்­னரும் ஒரு தடவை கழு­வுங்கள்.

கழு­வு­வ­தற்கு சுத்­த­மான நீரையே உப­யோ­கி­யுங்கள். சோப் ஒவ்­வொரு தட­வையும் உப­யோ­கிக்க வேண்­டி­ய­தில்லை. சோப் உப­யோ­கித்தால் அது எத்­த­கை­ய­தாக இருக்க வேண்டும் என்­பதை ஏற்­க­னவே கூறினோம்.

தினமும் குளி­யுங்கள் குளித்த பின்னர் ஈரத்தை ஓற்றி எடுத்து நீரை அகற்­றுங்கள். மென்­மை­யான துணி­யி­லான டவல்­களால் ஒற்றி எடுங்கள். கடு­மை­யான அரிப்பும் முடி அதி­க­மா­கவும் உள்­ள­வர்கள் ஹெயர் டிரையர் கொண்டு உலர்த்­து­மாறு மேலை­நாட்டு மருத்­து­வர்கள் ஆலோ­சனை கூறு­கி­றார்கள். ஆனால் வெப்­ப­மான சூழலில் வாழும் எங்­க­ளுக்கு ஈரத்தை நன்கு ஒற்றி எடுத்­தாலே சிறிது நேரத்தில் சருமம் உலர்ந்து விடும்.

உள்­ளா­டை­களை தினமும் மாற்­றுங்கள். துவைத்து, நன்கு உலர்ந்த உள்­ளா­டை­க­ளையே அணி­யுங்கள். மலம் கழித்து கழு­விய ஈரம் அல்­லது குளித்த ஈரம் நன்கு உலர்ந்த பின்­னரே உள்­ளா­டை­களை அணிய வேண்டும். அரிப்பு எடுத்­தாலும் சொறி­வதை கூடி­ய­வரை தவி­ருங்கள். முக்­கி­ய­மாக நக­முள்ள விரல்­களால் சொறி­வது கூடாது. நகங்­களை குட்­டை­யாக வெட்டி அழுக்­கின்றி பரா­ம­ரிப்­பது அவ­சியம்.

அரிப்பு கடுமையாக இருந்தால் அதற்கு எதிரான அன்ரிஹிஸ்டமின் மாத்திரை ஒன்றை இரவில் உபயோகிக்கலாம். அவில் Avil பிரிட்டோன், லொராட்டின், செற்ரிசின் போன்ற பல இவற்றில் அடங்கும். கிறீம் வகைகள் பல உள்­ளன. பங்­க­ஸுக்கு எதி­ரா­னது, அரிப்பை குறைக்கும் ஸ்டிரொயிட் கிறீம், குளிர்­மை­யா­க்கும் கிறீம் எனப் பல­வகை. எனினும் மருத்து ஆலோ­சனை இன்றி கண்ட கிறீம் வகை­க­ளையும் உப­யோ­கிக்க வேண்டாம்.

மருத்துவத்தைப் பொறுத்த வரையில் மலவாயில் அரிப்பிற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதற்கான மருந்துகளை உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பூச்சி மருந்துகளை உபயோகிப்பதில் பயனில்லை.

எந்த மருத்­து­வ­மா­னாலும் மேலே சொன்ன வழி­மு­றை­களை கடைப்­பி­டிப்­பது அவசியம்.

டொக்டர். எம்.கே.முருகானந்தன். குடும்ப மருத்துவர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல